அண்ணன் விக்டர்தாஸ் அவர்களின், 'சக்தி எனத்தொடங்கி சிவம்' எனமுடியும் வெண்பாக்கள்கண்டு வாழ்த்தியொரு வெண்பா நான்செய்ததும் பதிலுக்கவர் ஒருவெண்பா செய்ததும்....
வெண்பா வடிவே!
ஒண்பா விடிவே!
உனதரும் - பண்பாலென்
உள்ளங் கவர்ந்த
உயர்கவியே! உன்தமிழ்
வெள்ளங் கலந்தேன்
வியந்து!
வெண்பா அரங்கில்
விளையாடும் வித்தகனே
அன்பால் புகழுகிறாய்
ஆகட்டும்-உன்பாவில்
உள்ளம் கரைந்தவன்நான்
உள்ளே உறைந்தவன்நான்
துள்ளுகிறேன் உன்அன்பைத்
துய்த்து.
எல்லா உணர்ச்சிகளும்:
1பாவலர் வையவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக