ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

விமர்சன வெண்பா!

பெரம்பலூர் 'தனலெட்சுமி சீனிவாசன் லை மற்றும் அறிவியல் கல்லூரி'யில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் 'முனைவர் பீ.ரகமத் பீபி' அவர்கள் எழுதி வெளியிட்ட 'சித்திரக் கவிச்சோலை' என்ற நூலுக்கான விமர்சன வெண்பாக்கள்.

சித்திரப் பாவை திறமுடன் தீட்டிய
சித்தரப் பாவைத் திறனாய்ந்தேன் -சித்தம்
விரும்பியிவர் செய்த விசித்திரப் பாக்கள்
கரும்பிற் கணுவெனக் காண்! .1

    மாலியின் ஓவிய வன்மையும் பாட்டெழுதும்
    வாலியின் நற்றிறமும் வாய்த்தவரா(ம்) -வாலியின்முன்
    மள்ளம் தனைக்காட்டும் மன்னர் நிலையொக்கும்
    வெள்ளிய பாவதன் வீறு! .2

தால்தனில் ஏற்றித் தகவுடன் பாடிட
ஏல்கிற பாவிளக் கேற்றினார்? -நூல்தனில்
தூண்டிலாய் ஓவியம் தோன்றிட மீன்தானே
ஈண்டிவர் பாவெனல் ஏற்பு! .3

    என்றோ இறந்ததாய் இயம்பும் வடமொழி
    இன்றிங் கிவரால் எழுந்ததே; -இன்றுமுதல்
    பொன்றிற்றே ஆரியப் புல்லர் மொழியெனார்;
    நின்றிற் றிவர்வழி நீடு! .4

இலையோ? உளதோ? இடைதான் மடவார்க்(கு);
இலைபோல் உளதோ? இதன்நேர் -நிலைதான்
இரகமத் பீபி இயற்றிய நூலிற்
பொருட்செறி வென்பதும் போ! .5

புதன், 4 ஏப்ரல், 2012

எட்டிக்காய்!


எட்டிக்காய் பற்றி இழுத்துச் சுவையாமல்
எட்டிக்காய் என்றே இகழ்வேனோ? -எட்டிக்காய்
கின்றமதி இன்முகத்தாய்! கேளாய்! உனதிரண்டு
நின்றமுலை தெங்கிள நீர்!