ஞாயிறு, 9 டிசம்பர், 2012

உன்னைத்தான் கேட்கிறேன்!


ஒட்டாதா தமிழர் நாவில்
      ஒண்டமிழ்? ஒட்டி னாலும்
எட்டாதா புகழ்,பேர் என்னும்
      இன்னிலை? எட்டி னாலும்
கொட்டாதா குறையாச் செல்வக்
      குவியல்கள்? கொட்டி னாலும்
கிட்டாதா தமிழர் நாட்டில்
கிளர்ந்தெழும் தமிழ்க்கு மாட்சி?

கூடாதா தமிழர் கூட்டம்?
      கூடிப்போர் முரசு கொட்டக்
கூடாதா? வந்தாண் டேய்க்கும்
கொள்ளையர் கூட்டம் அஞ்சி
ஓடாதா? தமிழர் ஆட்சி
ஓங்காதா? அதனை என்பா
பாடாதா? பாடும் காலம்
      பக்கத்தில் வந்தி டாதா?

2 கருத்துகள்: