அண்ணன் விக்டர்தாஸ் அவர்கள் இன்றெழுதியுள்ள வெண்பாவந்தாதி படித்ததும் என்னுள் எழுந்த வெண்பா!!!!
வானா றெனல்தகுமோ? மண்ணா றெனல்தகுமோ?
தேனா றெனலே தெளிவாமோ? - கானாறாய்க்
கட்டவிழ்ந்த வெண்பாக் கனிச்சாற்றில் தத்தளிக்கும்
கட்டெறும்பாய் ஆனேன் கவிழ்ந்து!
எல்லா உணர்ச்சிகளும்:
2நீங்கள் மற்றும் 1 நபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக