விமர்சன வெண்பாக்கள்!
சித்திர பாவை திறமுடன் தீட்டிய
சித்திரப் பாவைத் திறனாய்ந்தேன்! - சித்தம்
விரும்பியிவர் செய்த விசித்திரப் பாக்கள்
மாலியின் ஓவிய வன்மையும், பாட்டெழுதும்
வாலியின் நற்றிறமும் வாய்த்தவரா(ம்)? - வாலியின்முன்
மள்ளந் தனைக்காட்டும் மன்னர் நிலையொக்கும்
வெள்ளிய பாவதன் வீறு!
தால்தனில் ஏற்றித் தகவுடன் பாடிட
ஏல்கிற பாவிளக் கேற்றினார்? - நூல்தனில்
தூண்டிலாய் ஓவியம் தோன்றிட, மீன்தானே
ஈண்டிவர் பாவெனல் ஏற்பு!
என்றோ இறந்ததாய் எண்ணும் வடமொழி
இன்றிங் கிவரால் எழுந்ததே; - இன்றுமுதல்
பொன்றிற்றே ஆரியப் பூணூல் மொழியெனார்;
நின்றிற் றிவர்வழி நீடு!
இலையோ? உளதோ? இடைதான் மடவார்க்(கு)?
இலைபோ லுளதோ? இதன்நேர் - நிலைதான்
இரகமத் பீபி இயற்றிய நூலிற்
பொருட்செறி வென்பதும் போ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக