செவ்வாய், 31 ஜனவரி, 2012

படப்பா! 39


நான்
உன்னைப்பற்றிக்
கவிதை சொல்வது
கவிதைக்குக்
கவிதையால் உரைசொல்வது
போன்றிருக்கிறது

வெள்ளி, 27 ஜனவரி, 2012

படப்பா! 38




குயில்
கூடு கட்டாதா?
நீ
கொண்டை போடுவதைப்
பார்க்காத எவனோ
பழுதான
பரப்புரை பண்ணியிருக்கின்றான்

செவ்வாய், 24 ஜனவரி, 2012

படப்பா! 37


விடிகிற போதே
இருட்டிவிடிகிறது எனக்கு

எங்கோ பார்த்தபடி
என்னைக்
கடந்து செல்கிறாய்
நீ

சனி, 14 ஜனவரி, 2012

எழுச்சி வணக்க மாலையும் "கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் வெளியீடும்!


மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான மாவீரர்களது நினைவுவணக்க மாலையும், "கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் வெளியீடும்.


மூத்த தளபதியும் வரலாற்று நாயகனுமான கேணல் கிட்டு உட்பட இம்மாததில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க மாலை லண்டனில் நடைபெறவுள்ளது.

22.01.2012 ஞாயிர்றுக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாலை 9:30 மணிவரை Eastham, Barking, London, E6 2RP எனும் முகவரியில் அமைந்துள்ள Eastham TOWN HALL மண்டபத்தில் நடைபெறவுள்ள  இந்த நிகழ்வில் "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் தேசியத் தலைவர் தொடர்பான கவிதை நூலும், மேலும் மூன்று ஒலிப் பேழைகளும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ்மக்களை கலந்துகொண்டு மண்னுள்ளும், எம் மனங்களினுள்ளும் வித்தாகி வாழும் மாவீரர்களுக்கு தமது மலர் வணக்கதினை செலுத்துமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களது உறவினர்கள், மற்றும் உரித்துடையோர் ஐக்கிய இராட்சியத்தில் வசிப்பவர்களாக இருந்தால் 0208 733 8203 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது info@tnrf.co.uk எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வியாழன், 12 ஜனவரி, 2012

படப்பா! 36




உடைப்பதா?
பத்திரப்படுத்துவதா?
நீயே முடிவெடு

தாவும் மந்தியிடமிருந்து
தவறிவிழுந்த குட்டியை
மீண்டும்
தாய்க்குரங்கு எப்படி
தூக்கிச் சுமப்பதில்லையோ
அப்படி
அந்த எனது
முந்நாள் இதயத்தைத்
தூக்கிச்சுமக்கச் சம்மதமில்லை எனக்கு

என் இதயத்தோடு சேர்த்து
இரண்டு இதயங்கள் இருக்கும்போதும்
இதயமில்லாதவளாய்
உன்னால்
இருக்கமுடிகிறபோது

இதயமே இல்லாமல்
என்னால்
வாழமுடியாதா என்ன?

திங்கள், 9 ஜனவரி, 2012

படப்பா! 35




பாறையைத்
தழுவிக்கொண்டோடுகிறது
தண்ணீர்
உருட்டிக்கொண்டோடுகிறது
வெள்ளம்

நீ
காதலை ஏவித்
என்னைத் தழுவியும்
உன்னையே ஏவி
உருட்டியும் விளையாடுகிறாய்

பாறை தூளானால்
மணலாகும்
என்னைத் தூளாக்கிக்
கைநிறைய அள்ளிக்கொள்கிறாய்
கவிதைகளை

சனி, 7 ஜனவரி, 2012

படப்பா! 34



நீ புட்டில்
நான் கோப்பை

பார்வையை
என்மீது கவிழ்க்கிறாய்

கோப்பை நிரம்பிக்
காதல் வழிகிறது