பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
கூட்டுவைத்துத் தேர்தலினால் கோட்டைக்குப் போவதினும்
நீட்டுவைத்துத் தேர்ந்தெடுத்தால் நிம்மதி – ஒட்டைவைத்து
நல்லோன் ஒருவனையும் நாம்தேர்ந் தெடுத்ததில்லை
புல்லரையே தேர்ந்தெடுத்தோம் போட்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக