செவ்வாய், 24 மார்ச், 2026

டூர்போக லாமா டுடே!

 

பிஞ்சுக்கே ரட்டே! பிரியமுள்ள பேரட்டே!

இஞ்ச்பைஇஞ்ச் நான்ரசிக்கும் ஈரெட்டே! – பஞ்சுள்ள

சீரெட்டே! உன்வண்ணம் டீப்ரெட்டே! நானேறும்

சாரட்டே! வாய்முத்தம் தா! 01

 

வளரிளஞ் சிட்டே! வழக்கத்தை விட்டே

குளம்பியில் முக்கித்தா குட்டே! – விளம்பர

ஜில்லட்டே! போவதேன் சில்லிட்டே!? என்ராயல்

புல்லட்டே! பஞ்சணை போடு! 02

 

இங்கிலாந்து சாக்லெட்டே! எம்ப்ராய் டரிமொட்டே!

பெங்களூர் தக்காளி ஃபேஸ்கட்டே! – அங்கிள்என்

டார்கெட்டே! டாலடிக்கும் டார்ச்லைட்டே! பள்ளியறை

டூர்போக லாமா டுடே! 03

 

ரைபிளுக்குள் தோட்டா ரவையிடுதல் போலவே

பைபிளுக்குள் கீதையைப் பாய்ச்சுவோம்; - வைப்இலங்கும்

பஞ்சாட் சரத்தால் பரம பிதாவுக்கு

சஞ்சாயம் செய்வோம் ஜபம்! 04

 

நங்கைநீ என்னேஞ்சல்; நானாடும் பொன்னூஞ்சல்;

கங்குலிலும் தீர்த்துவைத்தாய் கண்பூஞ்சல்; - மங்கையுடல்

பொன்மஞ்சள்; பஞ்சணையில் பூங்கொஞ்சல்;  கிட்டியதா

என்னஞ்சல் பூவை இடத்து!? 05

 

நான்தானுன் உள்ளாடை; நாயகியென் வெள்ளாடை;

ஆன்மநெஞ்சிற் கம்மணமே அல்லாடை; – தேன்தடவி

மென்றிடலாம் மல்லாட்டை; மேய்த்திடலாம் வெள்ளாட்டை;

இன்றிரவு என்னோ டிரு! 06

 

நெஞ்சத்தை ராபரி செய்தாயே பைங்கிளி;

மஞ்சத்தில் சித்திரையும் மார்கழி; – வஞ்சிக்குத்

தந்திடுவேன் வாய்வழி சாறுள்ள பூங்கழி;

சுந்தரிக்கு ரெட்டைச் சுழி! 07

 

இலக்கணம் மாறா இனிய சிரிப்பில்

பலக்கணம் வானில் பறந்தேன்; – மலக்குடலும்

பூமணம் வீசிகிற பூவையே! உன்னாலென்

கோமணம் ஆடுதடி கூத்து! 08




திங்கள், 23 மார்ச், 2026

அன்புள்ள மான்விழிக்கு!

 அன்புள்ள மான்விழிக்கு!

 

அன்புள்ள மான்விழிக்கு! அன்பன் மனம்பதைத்து

என்பிலிரத் தம்தோய்த் தெழுதுவது - என்னவென்றால்...

பேஸ்புக்கில் உன்துயரம் பேசும் படம்பார்த்தே

நாஸ்தா மறந்துவிட்டேன் நான்! 01

 

மாதரசி மண்ணள்ளி மாய்வதா? வெய்யிலிலே

காதல் இளவரசி காய்வதா? - தீதெல்லாம்

தேவதையைச் சேர்வதா? தேன்நிலவு தேய்வதா?

மாவழகு வாடு வதா!? 02

 

பிட்டுக்கு மண்சுமந்தான் பித்தன் பிறைசூடி;

சுட்டிப்பெண் நீயேன் சுமக்கின்றாய்? - துட்டுக்கு

லிப்ஸ்டிக்கு வாங்கவா? லெ தர்பேக்கு வாங்கவா?

செப்பல்கள் வாங்கவா? செப்பு! 03

 

கோட்டுள் கனிபதுக்கும் கோமகளே! ஏனடிஅக்

காட்டில் படுகின்றாய் கஷ்டங்கள்? - மூட்டுவலி

வந்தாலோ தைலமிட மாமன் அருகிலையே!

செந்தா மரைக்கேனித் தீங்கு!? 04

 

பூமகள் நோயுறவா? பொன்விரல் புண்படவா?

தேமலர்ப் பாதங்கள் தேய்வுறவா? - நான்மனம்

வெம்பி அழுதிடவா? வெண்பா எழுதிடவா?

மம்முதன்கிம் தூக்கவைத்தான் மண்!? 05

 

காசுபணக் கஷ்டமா? காடுகரை நஷ்டமா?

ஏசுபவர் ஏசுவதில் இஷ்டமா? - ஆசுவதம்

மண்சுமந்தால் கிட்டுமா? பெண்சுமந்தால் மட்டுமா?

கண்சுமந்தாள் கண்ணீர்க் கடல்! 06

 

ஆண்டியாய் ஆனானோ  ஆரணங்கே! என்மாமன்

போண்டியாய்ப் போனானோ பூங்கரும்பே! - வேண்டுமென்றே

மண்சுமக்க வைத்தானோ மாதுளையே! தாங்குமோ

உண்மையிலப் பாரம் உடம்பு!? 07

 

இட்டவடி நோக எடுத்தவடி கொப்பளிக்க

மொட்டுமலர் மண்சுமத்தல் மோசமே – பட்டென்று

கோபத்தில் கொட்டுவைக்கக் கோமான் குசேலனில்லை;

ஆபத்தில் போய்முடியும் அஃது! 08

 

ராணிபோல் காப்பாற்ற ராஜன் தவறிவிட்டான்;

தோணியில் ஏறிவா தோகையே! – காணி

உழுதுழைத் தேனும் உனைக்காப்பேன்; நெஞ்சில்

விழுதரைத்து நீவை விருந்து! 09

 

நாளை அதிகாலை நான்கு மணியளவில்

காளைநான் கண்மணிக்காய்க் காத்திருப்பேன்; - வேளை

தவறுமுன் ஓடிவந் தாயேல் உயிர்ப்பேன்;

தவறினால் மாய்வேன் தடத்து! 10

 

 

 



 

பச்சைக் கிளியைப் பவழமல்லிப் பூங்கொத்தை

வச்சிக் கடும்வேலை வாங்குவதா? - இச்சணமே

என்னோ டனுப்பிவை ஏய்!மாமா! தேவதையை

நன்றாகப் பாத்துப்பேன் நான்!

 

பெண்ணைச் சுமந்துபெற்றுப் பேரழகி யாய்வளர்த்து

மண்ணைச் சுமக்கவைக்கும் மாமாவே! - கண்டதும்என்

கண்களில் ரத்தம் கசியுதையா! பூவையின்கைப்

புண்களில் நீமருந்து போடு!

 

பாவம் இளவரசி; பாடாய்ப் படுகையில்

பாவலன்என் நெஞ்சம் பதறாதா? - காவலா!

ஆவலாய்க் கேட்டேன் அவளை எனக்களிப்பாய்

நாவளம் மிக்கவன் நான்!



வெள்ளி, 20 மார்ச், 2026

 

கோலம் அழகம்மா! கோச்சிட்டுப் போலாமா?

ஞாலம் பொறுக்குமா ஞாயமா? - காலம்

ரவிக்கை அணிந்த ரவிவர்மா என்று

தவிக்க விடலாமா சாற்று!?


கவிஞர் பொ.முத்து ராக்கு

 

பெண்குழந்தை வேண்டிப் பெரிதாய் முயன்றபோதும்

மண்ணில் கிடைத்தது மாண்பாக - எண்ணம்

பகைத்து ஆண்மக்கள் பாங்காய் வளர்ந்தே

வகையாய்க் காக்கும் வரவு.

 

அகரம் அமுதன்

 

முத்துராக் குக்கு... முதல்வணக்கம்; செய்யாதீர்

சத்தியமாய் வெண்பா தயவுசெய்து; - குத்தமில்லை

என்றாலும் கூட இமியும்* பொருளில்லை;

ஒன்றானும் செய்வீர் உணர்ந்து!

 

  • இமி - இம்மி (இடைக்குறை)



 

எழுதியும் தொண்டாற்ற ஏலும்; தமிழுக்(கு)
எழுதாதும் தொண்டாற்ற ஏலும்; - பொழுதும்
இருந்தும் கொடுத்தான் இறந்தும் கொடுத்தான்
பொருவில்சீ தக்காதி போல்!

செத்தொழிதல் சாலச் சிறப்பு!

 

வேளைக்கேற் றாற்போலே வேஷம்; எதிர்ப்படும்

ஆளுக்கேற் றாப்போல் அபிநயம்; – நாளுமிவை

எத்தனைதான் செய்தோம்? இதுதான்நம் வாழ்வென்றால்

செத்தொழிதல் சாலச் சிறப்பு!

 

நேரிலே ஆதரவை நல்கும் கிருத்திகா
சீரிலா அச்செயலைச் செய்வாளா? - ஊரில்
நயன்தாரா வோடு நிவேதிதா தேடும்
மயனுக்கும் புத்திமதி வார்த்து!
மயன் - மகன். (மகன் என்றது தன் கணவனாகிய ஆண்மகன் உதயநிதியைக் குறிக்கிறது.



 

அப்பாவுக் கும்வாய் அறுகோணல்; கட்டிவந்த
இப்பாவைக் கும்மூ விருகொணல்; - ஒப்பாயேல்
உத்துத்துப் பாராய் உடனே உதயநிதி!
இத்தொத்துக் கேதுமருந் திங்கு!?


எம்மாம் மழைபேஞ்சா என்ன? அதன்போக்கில்
சும்மாத் திரிந்து சுகப்படும்; - தம்மளவில்
மீளாப் பொறுமை மிகவாய்த்தும் யார்சொல்லும்
கேளா எருமை கிடா!

 

ஒரண்டை இழுப்பதில் உன்னையிங்கு விட்டால்
Currentடில்யார் உள்ளான் கவிஞன்? - பிரண்டெனினும்
தப்பென்றால் கொய்வாய் தலையை; சரியென்றால்
ஒப்புவாய் உச்சி முகர்ந்து!