கூட்டுவைத்துத் தேர்தலினால் கோட்டைக்குப்
போவதினும்
நீட்டுவைத்துத் தேர்ந்தெடுத்தால் நிம்மதி –
ஒட்டைவைத்து
நல்லோன் ஒருவனையும் நாம்தேர்ந் தெடுத்ததில்லை
புல்லரையே தேர்ந்தெடுத்தோம் போய்!
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
என்னங்க!? எங்க இருக்கீங்க? வீடுவர
இன்னமும் தாமதம் ஏனுங்க? - சொன்னாக்கேள்
முக்கிய மீட்டிங்கில் மும்முரமா
நானிருக்கேன்
வக்கிறியா போனை அணைச்சு! 01
கொஞ்சம் இருங்கஏன் கோவப் படுறிங்க!?
எங்கென் றதற்கா எகுறுறிங்க? - இங்கநான்
எம்மாம் பிரச்சினையில் எக்குத்தப்
பாஇருக்கேன்
சும்மாக் கிடநீ சுருண்டு! 02
மடச்சேவல் ஒன்னு வழிமாறிப் போயி
வெடக்கோழி சேரக்கண் வேர்த்தேன்; – அடைக்கோழி
போலும் பகல்தூக்கம் போட்டால் வரும்கனவு
மேலும் பலிக்காது வே! 03
நெல்லுக்குப் பாயவே நீரில்ல; பூப்பூக்கப்
புல்லுக்குக் கொஞ்சம் பொசியணுமா? – கல்லுப்பா
ஏன்டி கரிக்குற? ஏதம் உரைக்கிற?
நான்சுத்தப் பேர்வழிதான் நம்பு! 04
நம்பித்தான் போனேனே நான்மோசம்; எத்தனைநாள்
தம்பட்டம் இந்தச் சகவாசம்? - கும்பிடறேன்
அம்மாடி! ஊரார் அலரைஉன் மண்டைக்குள்
இம்மியும் ஏத்தா திரு! 05
முன்னாலப் பாத்து முழம்போட வேணாம்நீர்
பின்னாலப் பாத்தாப் பிழைபுரியும்; – பின்னால
நிக்கிறது நீதானா? சிக்கினது
நான்தானா?
பிய்க்கிறதுக் கேனாம் பிரம்பு!? 06
தேர்வில் ஜெயித்தவன்நான்; செண்டம்
அடித்தவன்நான்;
கூர்த்த அறிவுமிகக் கொண்டவன்நான்; – பார்வையில்நீ
என்னென்று கேட்கும் எளியவினா வுக்குவிடை
இன்னும் அறிந்தில்லேன் இங்கு!
தேர்வில் ஜெயிப்பவன்நான்; செண்டம்
அடிப்பவன்நான்;
நேர்நிறையின் தொண்டை நெரிப்பவன்நான்; – பார்வையில்நீ
என்னென்று கேட்கும் எளியவினா வுக்குவிடை
இன்னும் அறிந்தில்லேன் இங்கு!
எலிகே சரிகிண்டும் என்மனைவி, இன்று
புலிகே சரிகிண்டிப் போட்டாள்; - நலிதீர
நாலு முறைவாங்கி நாந்தின்றும் என்வயிறு
காலும் நிறையலைமக் கா!
ஈச்ச மரமுள்ளால் ஈறுகுத்தி இன்னொருக்காக்
கூச்சம் அறத்தின்பேன் கூறுகட்டி; – வீச்சப்
புலாலுக்கே நெஞ்சில் புகலிடம் உண்டு;
ஹலால்நமக்கு ஒத்து வராது!
‘கேசரி நீபிடிச்சுக் கொண்டுவா’ கிண்டணும்நான்
கேசரி என்றவள்தான் கேட்டிருக்காள்; – ஆஞ்சரின்னு
நாளைக்கு வேட்டைக்கு நான்போறேன் மூனாறு
வேளைக்குத் தின்னஇடம் விட்டு!
பெயரெனக்குப் பூனை; வயிறெனக்குப் பானை;
முயன்றுரைப்பேன் நல்லெதுகை மோனை; – பயந்தெனக்கு
வெண்பா விலாச்சொறியும்; வெண்ணெய்
நிலாச்சொரியும்;
உண்பதற்கே போவேன் உலா!
பால்நெய் தயிர்காணும் பாயாசம் காணுமென்றென்
மேல்பழியப் போடும் விசனத்தால், – கால்விரிச்சு
மல்லாக்க நான்படுத்து விட்டத்தை பாக்குறது
பொல்லாப்பில் லாப்பொழுது போக்கு!
போய்வா கணநொடியே! போகாதேன் நிற்கின்றாய்?
வாய்ச்சண்டை போட்டேனோ வைகின்றாய்? - நோய்பரப்பும்
ஈப்போலேன் மொய்க்கின்றாய்? ஏன்கண்ணில் தைக்கின்றாய்?
ஆஃப்மோடில் வைக்கின்றாய் ஆப்பு! 01
நொய்நொய் எனக்காதில் நொட்டைச்சொல்
சொல்கின்றாய்;
மொய்மொய் எனவென்னை மொய்க்கின்றாய்; – செய்செய்
எனவென்னைச் செய்கின்றாய்; ஏன்கொல்லு
கின்றாய்?
மனமென்ன கல்லாஉன் மாட்டு!? 02
சென்ற நொடிபோலே செல்லா தருகினில்
நின்றென்னைக் கொல்வது நீதியல்ல; - ஒன்றன்பின்
ஒன்றாய் நகரும் உனக்கிம்மாம் ஆங்காரம்
நன்றல்ல; எட்டி நட! 03
படுக்கிறாய் பாய்போட்டு; பாவைவரும் நேரம்
தடுக்கிறாய் தாழ்போட்டு; தங்கிக் – கெடுக்கிறாய்;
சீண்டிச் சிரிக்கிறாய்; சீவன் பறிக்கிறாய்;
நோண்டி எடுக்கிறாய் நுங்கு! 04
நேசக் கிழத்தி நெடுநேரம் காணவில்லை;
மோசம் எனதுநிலை; மூச்சுமில்லை; - வாசற்
படிதாண்டாப் பத்தினிபோல் பக்கம்நிற் காமல்
நொடியே!நீ போவாய் நொடிந்து! 05
ஒருகணம் கூட ஒருயுகம்போல் போனால்
வருங்கணம் எப்படியாய் வாய்க்கும்? – பெருங்கணத்தை
எண்ணஎண்ண தேகம் இளைக்கும்; மறுபடியும்
உண்ணஉண்ண சோரும் உளம்! 06
பார்வை குறைவிருக்கா? பாதச்
சுளுக்கிருக்கா?
யார்ஒருவர் இங்குனக்காய் ஏங்கிருக்கா? – பேர்த்தெறிய
நாக்கிருக்கா? மூக்கிருக்கா? நாடி நரம்பிருக்கா?
சீக்கிருக்கா? சீக்கிரமாய்ச்
செல்! 07
இப்போது நீசெல் இளையவள் வந்தவுடன்
தப்பாது மொய்வைத் தழைக்கின்றேன்; – அப்போது
தங்கிவிருந் துண்டு தவிசில் துயில்கொண்டு
மங்கலப் பேருகமாய் மண்டு! 08
நொடிக்குள் யுகத்தை நுணுக்கி நகர்த்தத்
துடிப்பாய் அருகிருக்கும் தோறும்; – வெடித்து
யுகமாய் விரிவாய் யுவதியரு கின்றேல்;
நுகரஒண்ணா நீபெரும் நோய்! 09
காலக் கடிகாரம் காலொடிந்து நின்றதுபோல்
சாலம் புரிகின்ற சாத்தியத்தைச் – சீலமுடன்
சேவையாய் நீயிருந்து செய்யலாம்; இப்பொழுது
பூவை வரும்வரைக்கும் போ! 10
பிஞ்சுக்கே ரட்டே! பிரியமுள்ள பேரட்டே!
இஞ்ச்பைஇஞ்ச் நான்ரசிக்கும் ஈரெட்டே! –
பஞ்சுள்ள
சீரெட்டே! உன்வண்ணம் டீப்ரெட்டே! நானேறும்
சாரட்டே! வாய்முத்தம் தா! 01
வளரிளஞ் சிட்டே! வழக்கத்தை விட்டே
குளம்பியில் முக்கித்தா குட்டே! – விளம்பர
ஜில்லட்டே! போவதேன் சில்லிட்டே!? என்ராயல்
புல்லட்டே! பஞ்சணை போடு! 02
இங்கிலாந்து சாக்லெட்டே! எம்ப்ராய் டரிமொட்டே!
பெங்களூர் தக்காளி ஃபேஸ்கட்டே! – அங்கிள்என்
டார்கெட்டே! டாலடிக்கும் டார்ச்லைட்டே!
பள்ளியறை
டூர்போக லாமா டுடே! 03
ரைபிளுக்குள் தோட்டா ரவையிடுதல் போலவே
பைபிளுக்குள் கீதையைப் பாய்ச்சுவோம்; - வைப்இலங்கும்
பஞ்சாட் சரத்தால் பரம பிதாவுக்கு
சஞ்சாயம் செய்வோம் ஜபம்! 04
நங்கைநீ என்னேஞ்சல்; நானாடும்
பொன்னூஞ்சல்;
கங்குலிலும் தீர்த்துவைத்தாய் கண்பூஞ்சல்; - மங்கையுடல்
பொன்மஞ்சள்; பஞ்சணையில் பூங்கொஞ்சல்; கிட்டியதா
என்னஞ்சல் பூவை இடத்து!? 05
நான்தானுன் உள்ளாடை; நாயகியென் வெள்ளாடை;
ஆன்மநெஞ்சிற் கம்மணமே அல்லாடை; – தேன்தடவி
மென்றிடலாம் மல்லாட்டை; மேய்த்திடலாம் வெள்ளாட்டை;
இன்றிரவு என்னோ டிரு! 06
நெஞ்சத்தை ராபரி செய்தாயே பைங்கிளி;
மஞ்சத்தில் சித்திரையும் மார்கழி; – வஞ்சிக்குத்
தந்திடுவேன் வாய்வழி சாறுள்ள பூங்கழி;
சுந்தரிக்கு ரெட்டைச் சுழி! 07
இலக்கணம் மாறா இனிய சிரிப்பில்
பலக்கணம் வானில் பறந்தேன்; – மலக்குடலும்
பூமணம் வீசிகிற பூவையே! உன்னாலென்
கோமணம் ஆடுதடி கூத்து! 08
அன்புள்ள மான்விழிக்கு!
அன்புள்ள மான்விழிக்கு! அன்பன்
மனம்பதைத்து
என்பிலிரத் தம்தோய்த் தெழுதுவது - என்னவென்றால்...
பேஸ்புக்கில் உன்துயரம் பேசும் படம்பார்த்தே
நாஸ்தா மறந்துவிட்டேன் நான்! 01
மாதரசி மண்ணள்ளி மாய்வதா? வெய்யிலிலே
காதல் இளவரசி காய்வதா? - தீதெல்லாம்
தேவதையைச் சேர்வதா? தேன்நிலவு தேய்வதா?
மாவழகு வாடு வதா!? 02
பிட்டுக்கு மண்சுமந்தான் பித்தன் பிறைசூடி;
சுட்டிப்பெண் நீயேன் சுமக்கின்றாய்? - துட்டுக்கு
லிப்ஸ்டிக்கு வாங்கவா? லெ தர்பேக்கு
வாங்கவா?
செப்பல்கள் வாங்கவா? செப்பு! 03
கோட்டுள் கனிபதுக்கும் கோமகளே! ஏனடிஅக்
காட்டில் படுகின்றாய் கஷ்டங்கள்? - மூட்டுவலி
வந்தாலோ தைலமிட மாமன் அருகிலையே!
செந்தா மரைக்கேனித் தீங்கு!? 04
பூமகள் நோயுறவா? பொன்விரல்
புண்படவா?
தேமலர்ப் பாதங்கள் தேய்வுறவா? - நான்மனம்
வெம்பி அழுதிடவா? வெண்பா எழுதிடவா?
மம்முதன்’கிம்’ தூக்கவைத்தான் மண்!? 05
காசுபணக் கஷ்டமா? காடுகரை நஷ்டமா?
ஏசுபவர் ஏசுவதில் இஷ்டமா? - ஆசுவதம்
மண்சுமந்தால் கிட்டுமா? பெண்சுமந்தால்
மட்டுமா?
கண்சுமந்தாள் கண்ணீர்க் கடல்! 06
ஆண்டியாய் ஆனானோ ஆரணங்கே! என்மாமன்
போண்டியாய்ப் போனானோ பூங்கரும்பே! -
வேண்டுமென்றே
மண்சுமக்க வைத்தானோ மாதுளையே! தாங்குமோ
உண்மையிலப் பாரம் உடம்பு!? 07
இட்டவடி நோக எடுத்தவடி கொப்பளிக்க
மொட்டுமலர் மண்சுமத்தல் மோசமே – பட்டென்று
கோபத்தில் கொட்டுவைக்கக் கோமான் குசேலனில்லை;
ஆபத்தில் போய்முடியும் அஃது! 08
ராணிபோல் காப்பாற்ற ராஜன் தவறிவிட்டான்;
தோணியில் ஏறிவா தோகையே! – காணி
உழுதுழைத் தேனும் உனைக்காப்பேன்; நெஞ்சில்
விழுதரைத்து நீவை விருந்து! 09
நாளை அதிகாலை நான்கு மணியளவில்
காளைநான் கண்மணிக்காய்க் காத்திருப்பேன்; - வேளை
தவறுமுன் ஓடிவந் தாயேல் உயிர்ப்பேன்;
தவறினால் மாய்வேன் தடத்து! 10
பச்சைக் கிளியைப் பவழமல்லிப் பூங்கொத்தை
வச்சிக் கடும்வேலை வாங்குவதா? - இச்சணமே
என்னோ டனுப்பிவை ஏய்!மாமா! தேவதையை
நன்றாகப் பாத்துப்பேன் நான்!
பெண்ணைச் சுமந்துபெற்றுப் பேரழகி
யாய்வளர்த்து
மண்ணைச் சுமக்கவைக்கும் மாமாவே! -
கண்டதும்என்
கண்களில் ரத்தம் கசியுதையா! பூவையின்கைப்
புண்களில் நீமருந்து போடு!
பாவம் இளவரசி; பாடாய்ப்
படுகையில்
பாவலன்என் நெஞ்சம் பதறாதா? - காவலா!
ஆவலாய்க் கேட்டேன் அவளை எனக்களிப்பாய்
நாவளம் மிக்கவன் நான்!
கோலம் அழகம்மா! கோச்சிட்டுப் போலாமா?
ஞாலம் பொறுக்குமா ஞாயமா? - காலம்
ரவிக்கை அணிந்த ரவிவர்மா என்று
தவிக்க விடலாமா சாற்று!?
பெண்குழந்தை வேண்டிப் பெரிதாய்
முயன்றபோதும்
மண்ணில் கிடைத்தது மாண்பாக - எண்ணம்
பகைத்து ஆண்மக்கள் பாங்காய் வளர்ந்தே
வகையாய்க் காக்கும் வரவு.
முத்துராக் குக்கு... முதல்வணக்கம்; செய்யாதீர்
சத்தியமாய் வெண்பா தயவுசெய்து; - குத்தமில்லை
என்றாலும் கூட இமியும்* பொருளில்லை;
ஒன்றானும் செய்வீர் உணர்ந்து!