ஆண்டாண்டாய் நீங்கள் அடித்தகொள்ளை பார்த்துத்தான்
வேண்டாம்நீர் என்று விரட்டிவிட்டார் – மீண்டுமும்மை
ஓட்டணுமா ஓங்கோலுக் கொண்டமிழர் தம்பலத்தைக்
காட்டணுமா என்னங் கடா!?
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
கொளுத்தும் வெயிலின் கொடுமையில்தப்
பிக்கக்
குளுமையைத் தேடுமென் கூடே! - குளுமைக்குத்
தோப்பிளநீர் கிட்டும் தொலைவிலில்லாக்
காரணத்தால்
சாப்பிடுவோம் தர்பூ சணி!
குளிர்சா தனப்பெட்டிக் குள்ளேஓர் ஓரம்
ஒளிந்திந்நாள் வெக்கை ஒழிப்போம்; - குளித்தாலும்
கொஞ்சமும் சூடு குறைகின்ற பாடில்லை;
தஞ்சமடை வோமிச் சணம்!
மோர்குடித்தும் பார்த்தாச்சு; முற்றும்
தயிர்சாதம்
தேர்ந்தெடுத்தும் நண்பகலில் தின்றாச்சு; - நீர்குடித்தும்
தீர்வில்லை; சூட்டால் தினம்தொல்லை; ஊத்துகிற
வேர்வையைத் தந்தோம் விலை!
காட்டில் மரம்கீழ் கயிற்றுக்கட்
டில்போட்டு
நீட்டிப் படுப்பதே நிம்மதி; - வாட்டி
எடுக்கின்ற வெய்யோன் எரிச்ச(ல்)தரா வாறு
தடுக்கவழி இல்லா ததால்!
ஓடைநீர் எங்கேனும் ஓடாதா? ஓடிப்போய்
ஆடையின்றி நாம்நீந்த ஆகாதா? – கோடைவெயில்
நுங்குக் கடங்காதா? நூல்பிடித்து
விஞ்ஞானம்
செங்கதிரைத் தீர்க்காதா தின்று!?
வேகா வெயிலேஉன் வீராப்பை விட்டுமண்ணை
நோகாமல் அன்றாடம் நோட்டமிடு – ஆகாத
வேலையைப் பார்ப்பதற்குக் காலை எழாதேபொன்
மாலைவான் ஏகுவிரை வாய்!
உச்சியிலே தொங்கும் ஒரேயோர் கதிர்பழத்தைப்
பிச்சிநான் தின்னப் பிரியமுற்றேன்; – அச்சுவெல்லத்
தூளிட்டுத் தேங்காய் துருவியிட்டுத்
தேன்தெளித்துத்
தாளித்த நெய்யுமிட்டே சற்று!
வருத்தப் படாதீங்க; வாட்டமுறா தீங்க;
திருவிழியில் நீர்கசியா தீங்க; – ஒருவழியாய்
ஓய்வு கிடைத்ததென்றே ஓரம்உட் காருங்க
சாய்வுநாற் காலியில் சாய்ந்து! 01
நிம்மதியாய் ரெஸ்ட்எடுங்க; நெட்பிளிக்ஸ்
பாருங்க;
அம்மணி யோடளவ ளாவுங்க; – கம்மென்று
பேப்பர் படிங்க; பெருசுகளோ
டும்கதைங்க
தோப்பிளநீர் வாங்கிச் சுவைத்து! 02
காலை டிபன்முடிங்க; காஃபிசூ டாய்க்குடிங்க;
மாலையில் டின்ன(ர்)மற வாதீங்க; – வேலையற்றுப்
போன விசனத்தில் புத்திபிற ழாதீங்க
ஆனமட்டும் பொங்கி அழுது! 03
கேரம்போர் டாடுங்க; ஹேப்பியாய்ப்
பாடுங்க;
நேரத்தில் தூங்கி நிதமெழுங்க; – வாரமெல்லாம்
சன்டிவி பாருங்க; சாங்குகள் கேளுங்க
முன்வினைமேல் பார முரைத்து! 04
அஞ்சரைக் குள்ளவண்டி அந்நாளில்
பார்த்ததெல்லாம்
நெஞ்சத்தின் ஓரம் நினைவிருந்தும் –
கஞ்சனின்
கைப்பொருளாய்த் தேகம் கலவிக் குதவாது
பொய்ப்பொருள்தான் சொந்தமெய்இப் போது! 05
மாத்திரை போடுங்க; மாபாவத் தைக்கழிக்க
யாத்திரை போய்வாங்க; ஏகனைத் -
தோத்தரிங்க;
தீபத்தால் வந்தவினை, செந்தில்வே
லன்விட்ட
சாபத்தால் தோற்றீங்க சார்! 06
கொஞ்சமா ஆடுனிங்க? கோபத்தில்
சாடுனிங்க?
பஞ்சமா பாதகம் பண்ணினிங்க; – நெஞ்சம்
அறியா லயத்தில் அறிவா லயத்தில்
சிறிய செயல்நூறும் செய்து! 07
சிங்கிளாய் நின்று ஜெயித்தஜோ சப்விஜய்க்கு
அங்கிள்!சொல் லுங்க அகவாழ்த்து; – செங்கதிரை
ஊதி விசிலணைத்த உண்மை உணருங்கால்
பேதிவரக் கூடும் பெரிது! 08
வாயில் இனிமேல் வடைசுடா தீங்க;அந்த
நோயினால் தானே நொடிஞ்சீங்க; - கோயில்போய்ச்
சாமிபா ருங்க; சரணா கதியடைங்க
மாமிபார்க் காதீங்க மாம்ஸ்! 09
நேற்றை நினைந்து நினைந்துருகி ஏற்பட்ட
மாற்றம் பொறுக்கா மனமுடையும்; – தோற்றால்
விபரீத மானபல வெண்ணங்கள் தோன்றும்;
சபரீசா! மாமனார் தாங்கு! 10
வெள்ளியில் பீரோ, வெரைட்டி புடவைகளை
உள்ளிட வாங்கிய உத்தமியே! – தள்ளிப்
படுக்காதே இன்றுனது ‘பாவா’வைத் தூக்கிக்
கொடுக்காதே தூக்குத்தாம் புக்கு! 11
தம்பி உதயநிதி! தந்தை மனமுடைந்து
வெம்பிப்போய் உள்ளார் விசனத்தில்; – கம்பி நீ
நீட்டிச் சரக்கடிக்க நீலாங் கரைஏகாய்;
வாட்டத்தைப் போக்கியுற வாடு! 12
சிட்டிங்சீ யெம்மை, திராவிட ஐகானை,
தட்டித்தூக் கிற்றே தவெக;இக் – கட்டில்
கொணர்ந்து நிறுத்தியதே கோட்டையைப் பற்றிக்
கணக்கைநேர் செய்திக் கணம்! 13
பர்செகண்டுக் கோர்தடவை பந்தா விளம்பரம்,பாழ்;
ஒர்க்அவுட் ஆகவில்லை ஓசிபஸ்; – தற்குறிகள்
என்றிகழ்ந்த ஏச்சுக்கள் எல்லாம்
பொடியாச்சு
நின்றுவிசில் வென்றதனால் நேற்று! 14
ரோடுஷோ நாயகனை ரோல்மாடல் ஆனவனை
பேடுவார்த் தையிலா பேசுனீங்க? - கேடுகெட்ட
இன்னொரு ஜென்மம் இருந்தால் பிறங்காத
நன்மையைச் செய்ங்க நமக்கு! 15
ஜோசப் விஜய்எனும்நான்...
ஜோசப் விஜய்எனும்நான்... தூயதோர் ஊழலற்ற
தேசமுரு வாகச் செயல்படுவேன்; – பாசபந்தப்
பற்றற்றுப் பாமரரின், பாட்டாளி
வர்க்கத்தின்,
வெற்றிக்குப் பாடுபடு வேன்!
பள்ளிகளில் கஞ்சா பயன்பாட்டை வேரறுத்துப்
பிள்ளைகளுக் கீவேன் பெருங்கல்வி; – நள்ளிரவில்
பூவையர் அச்சமின்றிப் போய்வரலாம்; கைவைத்தால்
தீவைத் திடுவேன்சே தித்து!
ஏவல் துறையாய், எடுபிடியாய்ப்
போய்விட்ட
காவல் துறை,தன் கடமையை – ஆவலுடன்
செய்யும் படிச்செய்வேன்; சேவை மனப்பான்மை
உய்யும் படிச்செய்வேன் ஓர்ந்து!
பாமரனோ, இல்லை பணங்கா சுடையவனோ,
மாமனோ, மந்திரிக்கு மச்சானோ, – தீமைசெய்யத்
திட்டமிடும் போதே சிறையில் அடைத்திருவேன்;
சட்டமெல் லார்க்கும் சமம்!
போதை கலாச்சாரம்; பேதை பலாத்காரம்;
தாதை*யால் நேர்ந்த சமாச்சாரம்; – தீதையெல்லாம்
இன்றே நிறுத்துவேன்; எத்தர்
திருத்துவேன்;
நன்றே நடத்துவேன் நாடு!
தாதை – அப்பா(முன்னாள் முதல்வர் சுடாலின்)
கடமையைச் செய்வதற்குக் கையூட்டு வாங்கும்
மடமையைஓர் கையெழுத்தில் மாய்ப்பேன்; – அடகெடுவாய்!
பத்துலட்சம் கோடிகடன்; பாமரருக் கேதுபலன்?
அத்தனையும் தீர்ப்பேன் அடைத்து!
அறுவை சிகிச்சையால் அஃதையகற் றாமல்
உறுவ தொருநன்மை உண்டா? – சிறுகத்
திரைமறைவில் தோன்றித் திசைவிழுங்கும் ஊழல்
புரையோடிப் போய்விட்ட புண்!
கருமமே கண்ணாவேன்; காவலும் ஆவேன்;
தருமத்தின் ஆட்சி தருவேன்; – தெருவெங்கும்
பாலோடும் தேனோடும் பாயாசம் தானோடும்
நாலோடும் ரெண்டோடும் நன்கு!
ஆக்டர் விஜய்நாட்டை ஆளும் அனுமதியை
வாக்குவழி மக்கள் வழங்கிவிட்டார்; – நாக்குத்
தடித்த திராவிடத் தற்குறிகள் நெஞ்சம்
இடிந்துபோய் உட்கார்ந்தார் இன்று!
தற்குறிகள் என்றுதிட்டித் தாவுமணில்
என்றுசுட்டிக்
கற்பிதங்கள் நூறுசெய்து காட்டியும் – அற்புதமாய்
மண்ணதிரும் வெற்றியை மக்கள் மகிழ்ந்தளித்து
விண்ணதிரப் போட்டார் விசில்!
பிசிரடித்துப் போன பெரியார்தம் மண்ணில்
விசிலடித்தான் குஞ்சிகளின் வெற்றி –
உசிரெடுத்த
டாடிக்கு நாம்டாட்டா காட்டியதால்
வாய்த்தது
கூடி”மே நான்கை”க் குறித்து!
விளம்பர மாடல்; விடியாத மாடல்;
மளமளவென் றேசரிந்த மாடல்; - விளங்காத
மாடல்; தெலுங்கர்தம் மாடல்; திராவிட
மாடலிலே போட்டாரே மண்!
"மடக்கூதி* சின்னம் மகத்தான
வெற்றி",
மடக்கூதி* என்ற மடையர் - மடக்கூதி*
ஆனதுதான் மிச்சம்; அகந்தையி னாலழிந்து
போனதுதான் மிச்சமிப் போ!
மடக்கூதி - மடக்கு ஊதி(விசில்), வசைச்சொல்.
முற்றும் கணிக்க முடியா வகையடைந்தோம்
வெற்றிவெற்றி யென்றே விசில்போடு; – சற்றே
சரக்கெடு கொண்டாடு; தாண்டவ மாடு;
உரத்தச் சரவெடி யோடு!
திருமுகமென் பக்கம் திருப்பு!
மீசை முளைக்கும்முன் ஆசை முளைத்ததடி
பாசை பிறக்கும்முன் ஓசையைப்போல்; - காசைவிரல்
சுண்டிவிட்டாற்
பொற்பதில்சொல்; தொங்கிக்கொண் டேகஇந்த
வண்டிவிட்டால் வேறு வரும்!
அடுத்துவரும் பேருந்தும் ஆள்கள் திணித்து
வெடுக்கென்று தான்பிடிக்கும் வேகம்; – நடுத்தெரு
நாயகியே! ஐந்துமணி நாரா யணன்வரட்டும்
நீயதிலே போகலாம் நின்று!
நேரத்தில் வீடுபோய் நேர்வதென்ன? உன்நெஞ்சின்
ஓரத்தில்
போயொளிந்து உள்ளதென்ன? - வாரத்தில்
ஞாயிறுபோல் என்னை நசுக்காதே; திங்களைப்போல்
நீயிருந்தால்
நான்குளிர்வேன் நெஞ்சு!
பாராமல்
பார்க்கிறாய் பார்வையால்
பேசுகிறாய்
ஆராய்ந் தறியும் அறிவில்லேன்; - தோராய
மாகப் புரிவதற்கே மாதக்
கணக்கெடுத்தேன்;
ஆகட்டும் உன்தொண்டை ஆற்று!
நூலிழை
புன்சிரிப்பே நோயைத் தருமென்றால்
ஆலிலையே! என்பா(டு) அடுத்தென்ன? - மேலிடத்து
உத்தரவு வேண்டுமா உள்ளம்
பகர்வதற்குன்
மெத்தனமே கொல்லும் விஷம்!
பள்ளித்தோ ழர்தம் பரிகாசப்
பேச்சிக்கும்
கள்ளியுன்னால் தோன்றும் கனவுக்கும் -
உள்ளம்
கிடந்தேங்கும்; உன்வரவைக் கிட்டத்தில் காண
நடந்தேங்கும்
கால்கள் நலிந்து!
ஓரா யிரம்கண்கள் உன்னையே
மொய்த்தாலும்
நேராய்என்
பார்வைக்கே நீசொல்வாய் -
ஆராய்ந்து
யாராலும் கண்டுணர ஏலா வகையினில்
பாரா யணமாய்ப் பதில்!
ஆவணிக்குப் பின்னே அடுத்துவந்த மாதத்தில்
தாவணிக்கு மாறிய தாமரையே! – பூவணிய
ஆசைப் படும்பூவே! அச்சத்தில் என்னிதய
ஓசைகேட் காதா உனக்கு!?
கண்ணால் கடுதாசி காற்றில் எழுதிநிதம்
விண்ணில் அடித்து விசிறுகிற - பெண்ணே!
அருகினில் நானிருக்க அங்கென்ன பார்வை?
திருமுகமென் பக்கம் திருப்பு!
பொத்தென்று போட்டுவிட்டுப் போகாமல் என்நினைப்பை
வித்தென்று நெஞ்சில் விதைத்துவிடு; - தத்தெடுத்துத்
தாங்குவாய் என்நெஞ்சைத் தள்ளி ஒதுக்காமல்
வாங்குவாய் பேரன்பை வார்த்து!
என்றுன்னைக் கண்டேனோ அன்றுமுதல் இன்றுவரை
நின்று நிதானமாய் நேசித்தேன்; – இன்று
நெடுநேரம் காத்திருந்தேன் நீவருவாய் என்று;
விடுவெடுவென் றேகணுமா வீடு!?
கால்கள் மிதக்கும் கலைகற்றுத் தந்தவளே!
நூல்மருங்கை நுங்கழுத்த நொந்தவளே! – வால்முளைத்த
கோலாங்கூ லத்தைமனக் கூண்டில் அடைத்தவளே!
காலாகா லத்திலதைக் கா!