வியாழன், 9 ஏப்ரல், 2026

 'கண்டு புடிச்சான்

அமெரிக்கா வைக்கொலம்பஸ்'
என்று படிக்கும்
எவன்கேட்டான்? - கொண்டுபோய்
அங்காரும் காணவே
ஆகா வகையினில்
இங்கார் ஒளிச்சுவச்சான்
என்று?



நாமாய்ப்போய்ச் சொல்வோம்நம் நெஞ்சு!


பூனை கூற்று!

யாரது என்ஆளா?
என்னையெதிர் பார்த்தாளா?
ஓரவிழி நீர்சொரிஞ்சே
ஓஞ்சாளா? – மாரனிட்ட
அம்புக்கே தேஞ்சாளா?
அங்கங்கள் தீஞ்சாளா?
ம்முக்கே மாஞ்சாளா
மாது!?

ஊருக்குப் போறாளா?
உத்தரவு கோராளா?
பேருக்கும் என்னிடம்
பேசாளா? – யாருக்கோ
காத்திருக் கின்றாளா?
கண்கள் எனக்காய்த்தான்
பூத்திருக் கின்றாளா
பூ!?

இங்கமர்ந்து நானிருக்க
என்னையெதிர் பார்க்காமல்
அங்கெ(ன்)னவே டிக்கை
அவளுக்கு? – பொங்கிவரும்
காதலை நான்சொல்ல
காம்பவுண்ட் ஏறிவந்தால்
வேதனைசெய் கின்றாளே
வீற்று!

சிறுக்கிமகள் நெஞ்சைச்
திருடிவிட யாரும்
குறுக்குவழி வந்துவிடக்
கூடும் – பொறுத்திருந்து
ஏமாந்து போக
இனியும் தயாரில்லை
நாமாய்போல் சொல்வோம்நம்
நெஞ்சு!



 தூணிலும் இருப்பான் – கடவுள்

துரும்பிலும் இருப்பான்.
எனக்கோ
வேட்பு மனுவிலும்
வெண்பாவே தெரிகிறது...

காதலிப்பவன் வேட்புமனு தாக்கல் செய்தால்...

வேட்பு மனுவில் விவரம் தருகிறேன்
ஈட்டிய சொத்துகள் என்னென்று... – ‘கூட்டில்
அசையாத சொத்தாய் அவள்மீது காதல்;
அசைகிற சொத்தாய் அவள்!




திங்கள், 6 ஏப்ரல், 2026

சிங்கத்துக்கே போட்டியா? ஜீன்ஸுக்குமேல் வேட்டியா?

ட்விங்கள்ஸ்டார்க்கு சன்லைட்டோடு டியூட்டியா? – லிங்கத்துக்கு

மேலோர் குறியீடா? ஃபிங்கர் குறிக்கீடா?

மேலோருக்குக் கீழோரீடா மேன்!?

 

மெல்லிடைகுத் தாலமா? மேலிருமத் தாளமா?

அல்லிடைமுத் தாய்வொமா? ஆழமா; – நல்லகுறி

கேப்பொமா? கையொடுகை சேப்பொமா? உன்னுடைய

வாப்பா எனக்குமா மா!


 

இனாம்தர வேண்டாம் இதயத்தைக் காதல்

கனாக்களில் தாராய் கரத்தை; - அனார்கலி!

உன்ரேகை பார்த்தென் உலகின் எதிர்காலம்

என்னென் ற‍றிகின்றேன் இன்று!


ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

 

செத்தானா இல்லையா?
சேதியச் சொல்லாமப்
பொத்தாம் பொதுவாத்தான்
போடுவியா? - நெத்தானாக்
காம்பத்தான் விட்டுக்
கழன்றுவிழும்ம் காய்போலத்
தேம்பாம உண்மையச்
செப்பு!



 மங்கியதே அன்றிஓர்

மண்ணும் நிகழவில்லை
இங்கிதனைச் சொல்கிறதே
இப்படம் - பொங்கியதே
பேரழ கென்னும்
பெரும்பொய்க் கதைகளைப்
பாரறிதல் வேண்டும்
பகுத்து!



 டாஸ்மாக்கில் கட்டிங்கை

டக்கராய் வாங்கியுண்டு
மாஸ்காட்டி‌ ஏமாற்றும்
மங்கையே! - போஸ்காட்டி
போட்டோ எடுப்பதால்
போகலாம் கோட்டைக்கு;
நாட்டுக்கே திஃதால்
நலம்!?



 லைக்குக்கோ, போடும்

கமெண்ட்டுக்கோ, பாவெழுதும்
பைத்தியம்நான் இல்லையடா!
பாவலன்;என் - கைத்திறத்தை
ஒவ்வொருவெண் பாவிலும்
உற்றறிய லாமென்றன்
செவ்வரிகள் அம்மாம்
சிறப்பு!