வெண்பா கஃபே 2
ஈரடியில் புத்தி
இயம்பினான் வள்ளுவன்;
ஓரடியில் ஔவை
உரைத்தனள்; - பாரடிநீ
சும்மாஉன் பார்வையில்
சொல்லிவைத்தாய்; யார்பெரியார்?
அம்மா! உனக்கு'ஹேட்ஸ்
ஆஃப்'!
==
கல்லறை விட்டெழுந்து
கால்தளரும் மூப்புவிட்டு
வல்லிய தோள்படைத்த
வாலிபனாய்ப் - பல்முளையாப்
பாலகனாய் முன்னேறிப்
'பை'நுழைந்து
விந்தாகிக்
காலத்தை வெல்வேன்
கடந்து!
==
என்னநான் சொல்லிவிட்டேன்?
ஏதுநான் சொல்லிவிட்டேன்?
சின்னதாய் ஓர்வார்த்தை
செப்பிவிட்டேன்; - ஒன்றும்நான்
சொல்லக்கூ டாதா?என்
தோழா! வெறும்வாயும்
மெல்லக்கூ டாதா?
விளம்பு!
==
குறட்டை!!!
தூக்கத்தின் கானம்;
துயிலின் அரட்டை;சொல்
நீக்கிய வாக்கிய
நிர்ப்பந்தம்; - கேட்கநாம்
ஏலாது காதிருந்தும்;
ஏற்காத ஆதிசந்தம்;
தாலாட்டும் தொண்டைத்
தவில்!
==
பூவுக்கே Powderரா?
பொன்னுக்கே Turmericகா?
காவுவாங்கும் Beautyக்கே
Cosmeticகா? - தேவுடா!
ஜவ்வா இழுக்குறா;
ஜோரா வழுக்குறா;
Loveல இதெல்லாமா
Law?
==
பார்த்தாலே ஷாக்கடிக்கும்;
பாலும் மறக்கடிக்கும்;
சேர்த்தாள நெஞ்சம்
சிறகடிக்கும்; - கோர்ப்பாயா
கையென்று கேட்கிறேன்
மெய்நின்று வேர்க்கிறேன்
பொய்யேனும் சொல்லிவிட்டுப்
போ!
==
சொப்பன சுந்தரி
சொக்கினா; மூலையில்
குப்பன எண்ணியே
குந்தினா; - தெப்பமா
வேர்வயைச் சிந்தினா;
வேண்டுதல் பண்ணினா;
தீர்வினைத் தேடினா
தேன்!
==
வெண்பாBore; நேர
விரயம்தான் ஆகிறது;
ஒண்பா அகவல்
உதவாது; - பண்பாட
மற்ற மரபுவகை
மாளாத் துயரவகை;
வெற்றுத் தமிழ்மேல்
வெறுப்பு!
காலை வணக்கம்
கனிவுடன் சொல்லிவிட்டு
மாலை வணக்கம்
வழங்கிவிட்டு; - வேலையெலாம்
தீர்ந்த பிறகிரவு
செப்பும் வணக்கமொடு
போர்த்திப் படுக்கிறேன்
போ!
==
'பீர்'உட்டாப் போலப் பெரிசாக்
கிறுகிறுத்தேன்
'சார்பட்டா' பாக்கயில் சத்தியமாய்; - மார்க்கேட்டால்
பத்திலே அஞ்சு பதறாமல் தந்திடலாம்;
குத்திலே நெஞ்சம் குளிர்ந்து!
==
கட்டை விரல்ரேகை காணாமல் போய்இப்போ
மொட்டைவிரல் ஆச்சு மொபைலாலே; - விட்டுவிடக்
கூடவில்லை ஆண்ட்ராய்டை; கூறுகெட்ட
ஃபேஸ்புக்கை;
ஓடவில்லை வேலையொன் றும்!
Gana வெண்பா!
முனிமா! எனக்குநீ மூனுமணி நேர
சினிமா; குலுங்கிச் சிரிமா; - கனிமாங்
கனிமா; எடுத்துக் கசக்கிப் பிழிமா;
Moneyமா தரவேணு மா?
பஞ்சவர்ண பட்சிநீ; பத்துவை இச்சிநீ;
மஞ்சத்தில் வந்துபோடி மச்சினி; - வஞ்சியொத்த
கேர்ள்ஸ்தான்என் கம்பெனி; கேட்போமா
சிம்ப்பொனி;
கேள்தாரேன் லம்போர் கினி!
சும்மாசீன் போடுற; சூடேத்தி ஓடுற;
அம்மாநீ சோலோவா ஆடுற - கம்மாவில்
நின்னு கலாய்க்கிற; நேக்காய் தபாய்க்கிற;
டின்பீர்நீ பண்ணட்டா டேஸ்ட்?
பஸ்ஸ்டாண்ட் கிராக்கி; பசங்களஏ மாற்றி ;
Worstதான்டி நீஒரு ஊர்சுத்தி; - பெஸ்ட்டா
சுடி,மிடி போட்ற; சுருதியா பாட்ற;
அடிக்கடி மாத்துற ஆள்!
'ஆங்கிலேயன் தானுனக்கு
அப்பனா?' என்பவன்தன்
பூங்குருத்து ஆங்கிலமே
போய்ப்படிக்க; - ஆங்கதனின்
'அப்பன் இவன்தானா?
ஆங்கிலேய னா?கேட்டால்
தப்பைமறைக் கின்றான்
தடுத்து!
கற்றதும் ஆங்கிலம்;
கையெழுத்தும் ஆங்கிலம்;
விற்பன்னன் ஆங்கில
வித்தைகளில்; - அற்புதமாய்
மேடையில் கூவுகிறான்;
வேஷமிட்டுக் கேவுகிறான்;
பாடையில் பைந்தமிழைப்
பார்த்து!
'வாயிலில்லை; தீட்டும்
வரியிலில்லை; செந்தமிழ்நம்
தாயிலை யா?தகுமா?
தம்பி!'என்பான்; - நாயிவனின்
வீட்டிலே ஆங்கிலம்;
வீதியிலே தங்கிலிஷ்;
ஏட்டிலே செந்தமிழ்
ஏய்ப்பு!
ஆங்கிலப் பள்ளிகளில்
அந்தமிழிற் பேசிவிட்டால்
வாங்குகிறான் 'ஃபைன்';எவன்
வந்துகேட்டான்? - தூங்குதல்போல்
அங்கே நடிக்கின்றான்;
இங்கே வெடிக்கின்றான்;
பொங்கிஃபேஸ் புக்கில்போஸ்ட்
போட்டு!
உள்நுழைந்த நாளில்
'ஒருபாடம்' ஆங்கிலம்;
கொள்ளை அடித்ததின்று
கூண்டோடு; - விள்ளடா!
இன்றமிழ் இன்றளவில்
எத்தனைப் பாடங்கள்?
மென்றுமுழுங் காமல்
விளம்பு!
எத்தனைக் காலேஜில்
இன்பத் தமிழுளது?
முத்தமிழைப் போட்டதே
மூட்டைகட்டி!; - பித்தன்நீ
பார்த்துப் பதறவில்லை;
பாய்ந்து குதறவில்லை;
ஆர்ப்பதேன் இன்றைக்(கு)?
அடங்கு!
இந்திதான் கொல்லுமாம்
இன்றமிழை; இங்கிலீஷ்
வந்தபின் வாழ்கிறதோ
வாழ்வாங்கு? - மந்தியே!
கற்கஆள் இன்றிக்
கவின்தமிழ் சாகிறது;
தற்குறிபோல் பேசாதே!
தள்!
வாழ்க! எனச்சொன்னால்
வண்டமிழ் வாழ்ந்திடுமா?
தாழ்க!வென் றால்இந்தி
தாழ்ந்திடுமா? - சூழ்தமிழைக்
கட்டாயம் ஆக்காமல்
கற்றிட ஊக்காமல்
முட்டாளே! வாழா(து)'அல்
மோஸ்ட்!'
கற்றவன் தன்னறிவைக்
காட்டத்தான் இங்கிலீஷைப்
பெற்றித் தமிழிலிட்டுப்
பேசுகிறான்; - மற்றவன்
ஒன்றிரண்டு ஆங்கிலச்சொல்
ஒட்டிவரப் பேசிவிட்டால்
வன்மத்தைக் காட்டுகிறாய்
வந்து!?
நாய்போல வாலாட்டி
நாடிப் படிப்பதெல்லாம்
வாய்கிழிய இங்கிலீஷை
வாய்பொருத்தி; - பேய்மகன்பின்
கொஞ்சுதமிழ் வாழ்கவென்று
கோஷங்கள் போட்டுவிட்டால்
துஞ்சாமல் வாழ்ந்திடுமாம்;
த்தூ!
==
கல்மிஷம் இல்லாமல்
காதலியை டேட்டிங்கில்
சில்மிஷம் செய்தால்
ஜிலுஜிலுதான்; - ஜொல்ரசம்
மாந்தப் பிடிக்காத
மங்கையுண்டா? உண்ணாமல்
மீந்தவர லாறுண்டா
மேன்!?
==
தங்கிலீஷ் வாழ்த்து!
தங்கிலீஷே! தாயே! தமிழகம் ஆள்பவளே!
இங்கிலீஷும் இன்றமிழும் ஈன்றவளே! -
இங்குள்ள
கற்றாரும் மற்றாரும் காதலிக்கும்
காஸ்ட்லியே!
பொற்சிலையே! வாழ்க பொலிந்து!
வீட்டிலும் நீ;சினிமா பாட்டிலும்
நீ;தமிழர்
நாட்டிலும் நீ;கற்றோர் நாவிலும்நீ; - ஏட்டில்
எழுத்திலும்நீ; அங்கிங்(கு) எனாதபடி
எங்கும்
அழுந்தப் பதித்தாய் அடி!
குக்பண்ணி, டேஸ்ட்பண்ணி, கூல்பண்ணி, கால்பண்ணி,
செக்பண்ணி, ஃபீல்பண்ணி, ஷேர்பண்ணி, - மிக்ஸ்பண்ணி,
பன்னித் தமிழாய்ப் படித்தோர்வாய்
வாழ்மொழிநீ
சென்றவிட மெல்லாம் சிறப்பு!
படிக்காத பேரும் பலுக்கும் மொழியே!
படித்தோர்வாய் வாழும் பகட்டே! -
நடிகையர்வாய்
நாட்டியப் பேரொளியே! நான்காம் தமிழணங்கே!
Naughtyயே! ஆள்கநீ நாடு!
காலேஜ் பிகர்களும் காளையரும் தங்கிலீஷ்
நாலேஜ் வளர்த்து நமையசத்த - காலேஜே
போகாத பாமரரும் பட்டறிவால் தங்கிலீஷை
சாகாமல் காக்கின்றார் ஜஸ்ட்!
தஸ்ஸுபுஸ்ஸு இங்கிலீஷும் தாறுமாறு
செந்தமிழும்
கஸ்டம்தான் பேசவும் கேட்கவும்; - புஸ்ஸுபுஸ்ஸு
தங்கிலீஷைப் போல்வருமா? தங்கிலீஷ்
நேர்வருமா?
தங்கிலீஷ் கற்றோர்க்கே ஜாப்!
சிங்கிள்தான் செந்தமிழ்அச் சிங்கிலொடு
இங்கிலீஷ்
மிங்கிளாகித் தங்கிலீஷ் மேலெழுந்தால் -
இங்குமது
குண்டி எரிவதாய்க் கூறுகிறீர்; தங்கிலீஷ்முன்
மண்டியிடும் காலமிது மாம்ஸ்!
தமிங்கிலமே! இன்பத் தமிழகத்தை ஆளும்
திமிங்கிலமே! கற்றோர் திமிரே! -
தமிழ்போல்நீ
நூற்றாண்டை வென்றுவாழ்; நூல்பல கண்டுவாழ்;
நாற்றின்மேல் காற்றாய் நடந்து!
தமிழர்வாய் தோறும் தகத்தகாய மாய்நீ
அமிழ்வாய்; அழகாய் அலர்வாய்; - அமிழ்தினும்
யம்மிநீ; எங்களின் இந்தத் தலைமுறைக்கு
மம்மிநீ; காட்டுகிறாய் மாஸ்!
தங்கிலீஷில் பேசுவோம்; தங்கிலீஷில்
பாடுவோம்;
தங்கிலீஷில் நோட்ஸ்எடுப்போம் தப்பாமல்; - தங்கிலீஷே
ஸ்டைலிஷாய் வாழட்டும்; ஸ்டைலிஷாய்
ஆளட்டும்;
ஸ்டைலிஷான தங்கிலீஷே டான்!
==
பட்டம் எனக்கெதற்கு? பாராட்டும்
வேண்டாமே!;
அட்டையில் சான்றிதழ் ஆர்கேட்டார்? - விட்டுவிடு
கேடயம் தாவெனக் கேட்டேனா? மாலை,பொன்
ஆடையுமே வேண்டாம் அடங்கு!
வீட்டுமரம் இல்லைநீர் விட்டு வளர்க்கநான்
ரோட்டுமரம் இல்லைஒரு ரூல்ஸ்போட; - காட்டுமரம்
மண்முட்டித் தானாய் வளர்ந்து
நிமிர்ந்தெழுந்து
விண்முட்டு கின்றேன் விரிந்து!
==
புத்தம் புதுச்சரக்கு;
போதை தருஞ்சரக்கு;
குத்தமில்லை குந்திக்
குடிக்கலாம்; - புத்தகமே
போத்தல்; எழுத்து'மது';
போயெடுத்து நாலுரவுண்(டு)
ஊத்தத் தெளியும்
உளம்!
==
சங்கரா! வேலன் தகப்பா! உடனேநீ
இங்க'ரா'! என்னை எழுதவை; - பங்கமாய்
உன்னை கலாய்த்தேனா? உன்முன்
விடாய்த்தேனா?
என்னறிவைத் தாடேய் எடுத்து!
போலக் கவிபாடிப் பொய்மூட்டை யாகாமல்
சாலச் சிறந்தகவி சாற்றவை; - ஞாலத்தே
ஆட்டுமந்தைக் குள்ளென்னை ஆடாக ஆக்காமல்
காட்டுப் புலியாக்கு God!
சிந்தை துருப்பிடிக்கச் செய்வாயோ? புத்தாக்க
விந்தை தடுக்க விழைவாயோ? - அந்தரத்தில்
ஆடுகின்ற நாயகனே! அத்தா! எனைநன்றாய்ப்
பாடுகின்ற வாயனாக்கப் பார்!
இன்னும் புதுமையாய் இன்னும் தனித்துவமாய்
இன்னும் அழகாய் இளமையாய் - என்ன
எழுதலாம் என்றெண்ணி எம்மண்டை காயப்
பொழுதெலாம் தூக்கமில்லை போ!
மாசமொண் ணாச்சு மணிமணியாய் நானெழுதி;
மோசமும் போச்சோஎன் மூளைதான்? - ஆசையாய்
ஏதோ எழுதப்போய் ஏதோ வெளிப்படுதே!
ஏதேதென் னாச்சோ எனக்கு?
புஸ்வாணம் ஆவதா பூகம்பம்? கண்டகண்ட
கஸ்மாலம் எல்லாம் கலாய்ப்பதா? - விஸ்தாரம்
ஆக்கடா கற்பனையை; ஆதிப் பரம்பொருளே!
நாக்கிலே சொல்வன்மை நாட்டு!
==
வேகத்தைக் காட்டலாம்;
வேர்வைநீ ராட்டலாம்;
தாகத்தைக் கூட்டித்
தணிக்கலாம்; - தேகத்தின்
ரீங்காரம் கேட்கலாம்
ராவெலாம்; மெத்தைமேல்
Wrong கென்ப தில்லையெலாம்
Right!
ஆடையில்லா Milk மேனி;
ஆளான Hulk தான்நீ;
Mood ஐக் Create செய்
மூடா!நீ! - வாடைக்குப்
பாதை கொடாய்நீ;
பருவக் கிடாய்நீ; உன்
போதைக்கே ஊறுகாய்
பூ!
மையல்நோய்க் குப்படையல்
மல்லிகைப் பூத்துவையல்;
பைய அரைநீ
படுக்கையில்; - தையலுக்கும்
ஆசை இருக்காதா?
ஆயுள் வளர்க்காதா?
பாஷைக்குக் கட்டில்
பகை!
பாரவளை; தள்ளிப்
படுத்தவளை; கைகளுக்குப்
பார(ம்)வளை; அள்ளிப்
படுத்தவளை; - நேரமிலை
சேலைகளை; ஈர்த்தவளைச்
சேர்த்துவளை; ராப்பொழுது
லீலைகளுக் கில்லை
Limit!
Light டை எரியவிடு;
Light டாய்த் தெரியவிடு;
Right சொல்லும் பெண்ணை
ரசித்துவிடு; - Night டெல்லாம்
வட்டநிலா கண்டு
வயிறெரிந்து சாகட்டும்;
Bed டிலே நீநின்று
பேசு!
கொஞ்சம் துணிந்திடுவாள்;
கொஞ்சிச் சிணுங்கிடுவாள்;
அஞ்சிப் பதுங்கிடுவாள்
ஆகட்டும்; - மஞ்சத்தில்
Girl அவயம் தேடிமெல்லக்
கிள்ளிக் கிளப்பிவிடு
தாளலயத் தோடாடும்
Thought!
==
கடுப்படிப்ப தால
கடமையுள்ள தால
விடுப்பெடுக்கப்
போறேன்
வெரசா -
குடுகுடுப்பக்
காரன்சொன் னான்நல்ல
காலம்
பொறக்குதுன்னு;
வாரன் பொறவுபாக்க
லாம்!
சரசகவி யாகி
சமரகவி யாகி
விரசகவி யாகி
வெறுத்தேன்; - அரசகவி
ஆசையெல்லாம் இல்லை;
அடங்காத கோபமுள்ள
மீசைகவி யாய்வாரேன்
மீண்டு!
இடைபாடி ஏற்ற
இறக்கங்கள் பாடி
நடைபாடி ஜென்மம்
நசிந்தேன்; - கடைபோட்டு
விற்றேன்
கடைச்சரக்கு
வீழ்ந்தேன்
தொடைக்கறிக்குக்
கற்றேன் அளவிற்
கடுகு!
சந்தையில் விற்றேன்
சமரசம்; வெள்ளாட்டு
மந்தையில் விற்றேன்
மரகதம்; - தொந்தி
வளர்ப்போர் நடுவில்
வயிற்றிலறு
துண்டம்*
இளப்பத்தில் தானே
இறும்!
அறுதுண்டம் -
சிக்ஸ்பேக்.
கந்தனுக்கு நேந்து
கயிறுநான்
கட்டிண்டேன்
தொந்தரவு மீண்டும்
தொடராதாம்; - இந்தவெண்பா
என்னையினி தொட்டா
இரத்தந்தான்
கக்குமாம்
சொன்ன படிநடந்தா
தூள்!
'அக்மார்க்'நான் முன்னாடி;
அப்படியே இப்போநான்
'எக்மார்க்'என் றானேன்
எதனால? - 'நக்மா'ப்போல்
பேரழகு வெண்பாவின்
பின்னால்
அலைந்தலைந்து
பேரழியப்
பீடித்தேன்
பித்து!
தோண்டி துளையானேன்
தோணி துளையானேன்
வேண்டிப் பெறாததால்
வீணானேன்; - மீண்டும்
துளையாகும்
வாய்ப்புத்
தொடருமென்றால்
மூங்கில்
துளையாகக் கேட்பேன்
தொழுது!
மொடாக்குடி
காரன்நான்
முன்வெண்பாக் கள்ளை
விடாப்பிடியாய்
மாந்தி
விழுந்தேன் -
தடாலடியாய்ச்
சாப்பிடுவ
தில்லையென்று
சத்தியம்
பண்ணிவிட்டேன்
'ஓப்பன்தி பாட்டிலெ'ன்போன்
ஓடு!
டயலாக்கில்
வெண்பாவை
டான்ஸ்ஸாட வைக்கும்
பயலாக்கும் என்பார்
பலபேர்; - புயல்மையம்
இன்றே கரைகடக்க
என்றும் இனியில்லை
மன்றாடி னாலும்
மழை!
ல(வ்)வராசெட் டானவர
லாற்றைநான் சொன்னா
டவராசெட் என்பீர்
சரிதான்; - தவறில்லை;
வெண்பாகண் நானிமை;
இன்றுமுதல்
கஞ்சனுக்கும்
தொண்டிற்கு மான
தொலைவு!
==
என்னைப் பின்தொடர்பவர்கள் நன்கறிவர் -
வெண்பாவுடன் அடிக்கடி நான் நிகழ்த்தும் ஊடல் பற்றி.......
கட்டிய மனைவியைக் கண்டபடித் திட்டினாலே
கொஞ்ச நேரத்தில் பொறுமை இழந்திடுவார் எனும்போது....... இவ் வெண்பா பொறுமையிழந்தால்
எதிர்வினை என்னவாயிருக்கும்????
சற்றே செவிமடுப்போமா?
அகலா திருந்தவன்;
அன்பொளி சிந்தும்
அகலா யிருந்தவன்;
அல்லும் - பகலா(ய்)
இருந்தவனா என்னை
இகலென்றான்? உற்ற
விருந்தவனா ஆனான்
விஷம்?
சவ்வாது வாசனையும்
சந்தன யோசனையும்
கவ்வாதா என்னையினி
காலமெல்லாம்? - ஒவ்வாது
போனேனா அந்தப்
புலவனுக்கு? கொங்குதமிழ்த்
தேனேநான் ஆனேனா
தேள்?
நாளும்
மலர்ப்படுக்கை
நானிட்டேன்
பொன்மேனி
ஆளும் கவிஞன்
அமுதனுக்கே; - வாளும்நேர்
என்றால் விழிக்கது
காசென்போன்
என்னகண்டான்
என்றன் உறவில்
இழுக்கு?
கட்டியவன் கண்ணினிய
காதலன் சீவனில்
ஒட்டியவன் உள்ளம்
ஒளிந்தவன்; - வெட்டியவன்
ஆனானா? ஆசைக்(கு)
அரளி
அரைத்தளித்துப்
போனானா நெஞ்சம்
பொடித்து?
மோனை எதுகைதந்தும்
மூவா
மொழிகொடுத்தும்
ஏனை அணிகள்
எடுத்தளித்தும் -
கேனையனை
இம்மெனும் முன்னே
எழுதவைத்துப்
பார்த்தேனே;
அம்மெனுமுன் போனான்
அகன்று!
மோனைமுள் குத்த;
முகிழ்எதுகை மொத்த; சொற்
சேனைகொண் டென்னைச்
சிதைப்பார்முன் -
வீணைபோல்
மீட்டிய பாவலன்
மீட்டெடுத்த காவலன்
வாட்டுவ
தேன்பிரித்து
வைத்து?
ஆறரை கோடியில்
ஆளன் இவனென்றே
கூறவைத்தான்; இன்றேன்
கொலைசெய்தான்? - மாறவைத்த
வெட்டிச்
சிறுக்கியெவள்?
மேனா மினுக்கியெவள்?
தட்டிப்
பறித்ததெவள்
சார்ந்து?
காட்டுப் பயலவனைக்
கண்டு
கரம்பிடித்தென்
ஏட்டுச் சரக்கை
எடுத்தளித்து -
நாட்டுக்குள்
நாயகன் ஆக்கினேன்
நல்லவை ஊக்கினேன்
பேயகன் ஆனதேன்
பின்?
ஊடல் வளர்ப்பவன்
ஊடல்
வெறுத்துப்பின்
கூடல் வளர்ப்பானா
கூறுங்கள்; - தேடல் பொன்
என்றானால்
இன்பம்பாழ்
இன்றைநீ நன்றேவாழ்
என்றேனே கேட்டானா
ஏறு?*
ஏறு - காளை.
இன்னும்
மறக்கவில்லை
என்னும்சொல்
சொல்வானென்(று)
இன்னும்
துறக்கவில்லை
இன்னுயிரை; - என்னவனைக்
கண்டால்
வரச்சொல்வீர்;
காதல் உறச்சொல்வீர்;
தண்டாமல்
வீழ்கின்றேன்
தாள்!
அன்புவல்லி அம்மா!
மேன்மாடி மேலிருந்த
மெல்லியலைத் தானிழுத்தே
ஏனம் கழுவி
இடுப்பொடித்து - வானம்
அளந்தாளைக் கீழ்த்தள்ளி
னாற்போல வெண்பா
தளர்ந்தாளே உன்கைத்
தலத்து!
நான்:-
கைநோகும் என்பதற்காய்க்
கஞ்சிகாய்ச்சக் கூடாதா?
மெய்நோகும் என்று லீவா
மெத்தைக்கு? - அய்யோ!நான்
கட்டிவந்த காரணம்
கட்டிலுக்கும் கஞ்சிக்கும்;
ஒட்டிவந்த காரணம்?வே
றோது!
அன்புவல்லி அம்மா!
செல்லமாய் எம்புலவர்
சீராட் டியபெண்ணை
வல்வழக்காய் நீவிர்
வதைப்பதுவாய் - நல்லுலகம்
பேசுவதைக்
கேட்டீரோ
பேச்சுக்குக் கேட்கின்றேன்
ஓசை அதிகம்தான்
ஒப்பு !
நான்:-
பண்டிதர் பாட்டல்ல
பாமரர் பாட்டென்று
கண்டுபலர் கற்கவழி
காணுகிறேன்; - மொண்டுகொள்ள
ஆழ்கிணற்று மோவாளி
ஆனேன்; தொடுப்பதா
வாழ்விக்கு மென்மேல்
வழக்கு!?
அன்புவல்லி அம்மா!
ஆமாம் அதுவுண்மை
அந்தணர்க்கே
வெண்பாவாம்
சாமா னியர்க்கென்ன
சாற்றுப்பா - ஏமாப்புக்
கொண்ட இளைஞர்கள்
கொண்டாடிக் கொண்டாடி
வெண்டளையில் வைத்தார்
விருந்து!
நான்:-
இன்னும் எளிமையை
எட்டத்தான் எண்ணுகிறேன்;
பின்னும் பலரென்னைப்
பின்பற்றப் - பண்ணுகிறேன்;
வெண்பாவின் ஐக்கான்நான்;
வீழ்த்தஒண்ணா மைக்காநான்;
வெண்டளையில் நானென்றும்
வேந்து!!
==
கூத்திமேல் வக்கிற கொஞ்சமரு வாதியும்
வாத்திமேல்
வக்கிறானா வக்காளி; - ஏத்திவிட்ட
ஏணிய எத்துறதும் ஏமாந்தாக்
குத்துறதும்
சாணிக்குண் டான சரக்கு!
இந்தஇட மென்ன எழுப்பிவிட்டு நீயமர
சந்தைமட மா?இல்லை சத்திரமா? - முந்திமுந்தி
முன்னேறி நான்வந்து முன்னூறு
பேர்வென்று
நின்ன எடம்டா! நிறுத்து!
உடனிருந்தே
கொல்லும் வியாதியென்றாள் ஔவை;
அட!நெசமாய்த்
தானதுவும் ஆச்சு – மடமைக்(கு)
அறிவீட்டித்
தானென்ன ஆளாக்கி என்ன
உரையாடல்
வெண்பாவுக்(கு) உஷ்ஷ்ஷ்!