சிட்டிகை தங்கத்தில் சின்னதாய்
மூக்குத்தி
மட்டுமே னும்போதும் வாங்கித்தா! -
ஒட்டிய
மூக்கில் துரும்பை முறித்துத்
தரித்துள்ளேன்
போக்கற்ற தாலிப் பொழுது!
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
திருமுகமென் பக்கம் திருப்பு!
மீசை முளைக்கும்முன் ஆசை முளைத்ததடி
பாசை பிறக்கும்முன் ஓசையைப்போல்; - காசைவிரல்
சுண்டிவிட்டாற்
பொற்பதில்சொல்; தொங்கிக்கொண் டேகஇந்த
வண்டிவிட்டால் வேறு வரும்!
அடுத்துவரும் பேருந்தும் ஆள்கள் திணித்து
வெடுக்கென்று தான்பிடிக்கும் வேகம்; – நடுத்தெரு
நாயகியே! ஐந்துமணி நாரா யணன்வரட்டும்
நீயதிலே போகலாம் நின்று!
நேரத்தில் வீடுபோய் நேர்வதென்ன? உன்நெஞ்சின்
ஓரத்தில்
போயொளிந்து உள்ளதென்ன? - வாரத்தில்
ஞாயிறுபோல் என்னை நசுக்காதே; திங்களைப்போல்
நீயிருந்தால்
நான்குளிர்வேன் நெஞ்சு!
பாராமல்
பார்க்கிறாய் பார்வையால்
பேசுகிறாய்
ஆராய்ந் தறியும் அறிவில்லேன்; - தோராய
மாகப் புரிவதற்கே மாதக்
கணக்கெடுத்தேன்;
ஆகட்டும் உன்தொண்டை ஆற்று!
நூலிழை
புன்சிரிப்பே நோயைத் தருமென்றால்
ஆலிலையே! என்பா(டு) அடுத்தென்ன? - மேலிடத்து
உத்தரவு வேண்டுமா உள்ளம்
பகர்வதற்குன்
மெத்தனமே கொல்லும் விஷம்!
பள்ளித்தோ ழர்தம் பரிகாசப்
பேச்சிக்கும்
கள்ளியுன்னால் தோன்றும் கனவுக்கும் -
உள்ளம்
கிடந்தேங்கும்; உன்வரவைக் கிட்டத்தில் காண
நடந்தேங்கும்
கால்கள் நலிந்து!
ஓரா யிரம்கண்கள் உன்னையே
மொய்த்தாலும்
நேராய்என்
பார்வைக்கே நீசொல்வாய் -
ஆராய்ந்து
யாராலும் கண்டுணர ஏலா வகையினில்
பாரா யணமாய்ப் பதில்!
ஆவணிக்குப் பின்னே அடுத்துவந்த மாதத்தில்
தாவணிக்கு மாறிய தாமரையே! – பூவணிய
ஆசைப் படும்பூவே! அச்சத்தில் என்னிதய
ஓசைகேட் காதா உனக்கு!?
கண்ணால் கடுதாசி காற்றில் எழுதிநிதம்
விண்ணில் அடித்து விசிறுகிற - பெண்ணே!
அருகினில் நானிருக்க அங்கென்ன பார்வை?
திருமுகமென் பக்கம் திருப்பு!
பொத்தென்று போட்டுவிட்டுப் போகாமல் என்நினைப்பை
வித்தென்று நெஞ்சில் விதைத்துவிடு; - தத்தெடுத்துத்
தாங்குவாய் என்நெஞ்சைத் தள்ளி ஒதுக்காமல்
வாங்குவாய் பேரன்பை வார்த்து!
என்றுன்னைக் கண்டேனோ அன்றுமுதல் இன்றுவரை
நின்று நிதானமாய் நேசித்தேன்; – இன்று
நெடுநேரம் காத்திருந்தேன் நீவருவாய் என்று;
விடுவெடுவென் றேகணுமா வீடு!?
கால்கள் மிதக்கும் கலைகற்றுத் தந்தவளே!
நூல்மருங்கை நுங்கழுத்த நொந்தவளே! – வால்முளைத்த
கோலாங்கூ லத்தைமனக் கூண்டில் அடைத்தவளே!
காலாகா லத்திலதைக் கா!
கட்டுமரக் கூற்று!
கியூட்டாகச்
சிரிக்கும் பில்கேட்ஸ்,
கிறங்கடிக் கின்ற
ஐன்ஸ்டின்,
நியூட்டனொடு
ஓருசந் திப்பை
நிகழ்த்திநான்
டைட்டில் பார்க்கை
பியூட்டியாய்த்
தமிழ கத்தில்
பெரிதாகத்
திறத்தல் ஒன்றே
டியூட்டியாய்ச்
செய்ய வேண்டி
டீலிங்கை அன்றே
போட்டேன்!
ஈர்ப்புவிசை
பற்றி நியூட்டன்
எடுத்துரைத்த
தாரால்? ஐன்ஸ்டின்
பார்நடுங்கும்
அணுவின் குண்டைப்
பண்ணியது யாரால்? பில்கேட்ஸ்
நேர்வந்து மைக்ரோ
சாஃப்டை
நிறுவியது யாரால்? என்றன்
கூர்மதியில்
விளைந்த தைநான்
கூறியதால் விளந்த
தன்றோ!?
நானின்றி அணுவும்
இங்கே
நகராது; கண்ண சைத்தால்
வானின்று மழையும்
கூட
வாராது; கைய சைத்தால்
தீனியை ஆவும்
கன்றும்
தின்னாது; பூமிப் பந்தின்
ஆணிவேர் நானே
அஃதை
அறிந்தவன் உடன்பி
றப்பே!
சாரே சர்க்காரே!
வங்கிமே லாளரே!
வானளவதி காரரே!
தங்க மனம்படைச்ச
சாரே! சர்க்காரே!
அக்கா குருவிபோல்
அன்றாடம் நான்பாடும்
அக்கா புராணம்கேட்(டு)
அலுத்தலுத்துக் கொள்பவரே!
சொக்கா கசங்காம
சோலிபாக்கும் படிச்சவரே!
தொக்கா எனைக்கருதித்
துரத்திவிடும் தடிச்சவரே!
அருமை குறையா
தரும துரையே!
பெருமை குறையாப்
பெரிய துறையே!
என்னாத்தா போலென்னை
இமைக்காம காத்துவந்த
பொன்னாத்தா எங்கக்கா
புதைகுழிக்குப் போயிட்டா!
மவராசி செத்து
மாதமிரண் டாச்சுது
அவள்வைப்புக் கணக்கில் - சில
ஆயிரங்கள் உள்ளது
பொன்னாத்தா சேத்துவச்ச
பொக்கிஷத்தைத் தாரீரோ?
இன்றேனும் அவள்கதையை
இரண்டுவரி கேளீரோ?
நாலணா துட்டுக்கு
நாளெலாம் வேர்வைசிந்திக்
காலணா சேர்க்க - அக்
காளுண்பாள் பழங்கஞ்சி
நீராகா ரம்என்றால்
நீர்சிரிக்கும்; அப்படி
ஓராகா ரத்துக்கே
உண்டான வெஞ்சனமாய்க்
கார மொளாவைக்
கடிப்பது போல்கடிச்சு
வாரம் முழுசுக்கும்
வச்சிப்பாள் மடிமுடிஞ்சு!
பெருந்துயர வாழ்க்கை
பிச்சுப்பிச்சுப் போட்டதுல
தரித்திரம்சொல் லும்சேலை
தச்சுச்தச்சுப் போட்டதுல...
ஆம்பளைபோல் பொம்பளைக்கும்
அரைமுழம் கோமணமே
பூமியில போதுமுன்னு
பொதுச்சட்டம் போட்டிருந்தா
கிழிசலுக்குச் செலவுசெஞ்ச
காசையுமே சேத்திருப்பா
வையத்தை மூனுமுறை
வாங்கியுமே போட்டிருப்பா
பொத்திப்பொத்திச் சேத்தபணம்
பொணம்தூக்க வாரலையே
கொத்தாக மாலையொன்னு
கொண்டுவந்து போடலையே
முப்பது கும்பிட
முன்னவந்து நிக்கலையே
இப்ப வரைக்கும்
என்கைக்குச் சிக்கலையே
இறவான இடுக்கிலே
எஞ்சியதைச் சேத்துவச்சா
மறவாம மோடிவந்து
மதிப்பிழக்கச் செய்வான்னு
வங்கியில் போட்டவள்
மாண்டு மடிச்சபின்னே
இங்கெடுக்க ஆகலையே...
எம்பேச்சு மேவலையே...
செத்தவளைக் கூட்டிவந்தால்
சேமிப்பைத் தருவோம்னு
ஒத்த வரியில்பதில்
உகுக்கும் மவராசா!
ஏழை வயித்துக்குள்
இறைப்பையை வைத்தவனை
பாழை வயித்துக்கள்
பசிவைத்துத் தைத்தவனை
இந்தப் பணத்தைவச்சே
ஏன்னுநான் கேட்கோணும்
அந்தப் பசியைஅவன்
அகப்பையில் வைக்கோணும்
குட்டிச் சுவத்துக்குக்
கூரையொன்னு போடோணும்
எட்டு மொழத்துக்கு
இடுப்புவேட்டி வாங்கோணும்
இறப்புச் சான்றிதழ்
எடுக்கப் பணம்வேணும்
இதற்கேனும் சிலநூறு
எனக்குநீர் தரவேணும்
பனையளவு இங்குள்ள
பணங்காசைத் தரவேணாம்...
தினையளவு எம்காசைத்
திருப்பித் தரவேணாம்?
சட்டையில்லா என்னைச்
சட்டைசெய் யாமல்
சட்டமே பேசுகிற
சாரே! சபையோரே!
இருங்கடா இருங்க - அவ
எலும்புக்கூ டெடுத்துவரேன்
துரும்பாக் கருதுமுங்கள்
தூக்கம் கலைக்கவரேன்!
எத்தனை நூல்கற்றாய்