சண்டிப் பயலிவன் சத்தியமாய் யாரிடமோ
குண்டி கிழியத்தான் போகின்றான்; – பண்டுலக
இட்லரா இல்லை இறுமாப் பதிகமுள்ள
பட்லரா இந்தப் பயல்!?
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
சீமான் vs ட்ரம்ப்!
செந்தமிழன் சீமான்:-
ஹாய்!ட்ரம்ப்! சவுக்கியமா? ஹார்முஸ்
அணையில்போர்
போய்நீஇப் போது புரியணுமா? - வாய்கிழிய
இஸ்ரேல் அழைத்தால் எகிறி அடிப்பாயா?
திஸ்ஈஸ்ராங் கான செயல்! 01
டோனல்ட் ட்ரம்ப்:-
‘சூரனே நீதான்’னான்; ‘சூப்பர் பவர்தான்’னான்;
‘தீரனே தீ வை திரியில்’னான்; - காரணம்
கேட்காமல் போய்க்கெட்டேன்; கேனையன் நானேஎன்
ஆட்சிக்கு வைத்துள்ளேன் ஆப்பு! 02
செந்தமிழன் சீமான் :-
எண்ணித் துணியும்முன் என்னிடம்
கேட்டிருந்தால்
தண்மையாய் உன்னைத் தடுத்திருப்பேன்; – மண்டைக்
கனத்தாலே இன்று களத்தில்பின் வாங்கும்
உனக்கேனோ இம்மாம் உதார்? 03
டோனல்ட் ட்ரம்ப் :-
இட்லருக்கே புத்தி இயம்பிய உன்னிடத்தில்
‘நட்’கழன்ற தால்கேட்க
நான்மறந்தேன்; – நட்புடனே
ஓடிவந்து நின்றால் உதவுவாய் என்றிப்போ
நாடிவந்தேன்; தீர்வொன்றை நல்கு!
04
செந்தமிழன் சீமான் :-
அண்ணன் இருக்கிறேன் அழுது புலம்பாமல்
கண்துடை இந்தா!என் கைக்குட்டை; – தொண்டைக்குள்
முள்ளானார் முல்லாக்கள்; முள்ளை எடுக்கின்ற
முள்வாங்கி என்வாய் மொழி! 05
டோனல்ட் ட்ரம்ப் :-
அதட்டினால் அஞ்சும் அரபுலகம்; ஈரான்
அதற்கெலாம் அஞ்சுகிற ஆளா? – குதற்கமாய்ப்
பேசுகிற என்னையவர் பெண்டெடுக் கின்றார்;நான்
வீசுகிற பாமெல்லாம் வேஸ்ட்! 06
செந்தமிழன் சீமான் :-
மூத்திரச் சந்திலே முட்டாள் உனைமறித்து
ஆத்திரம் தீர அவனடிப்பான்; – சூத்தைநீ
பொத்தியிருந் தாலுண்டா பொல்லாப்பு? கிஞ்சித்தும்
புத்தியிருந் தாலுண்டா போர்!? 07
டோனல்ட் ட்ரம்ப் :-
வயோதிகனைக் கொன்றால் வழிக்குவரும் என்று
சியோனிசம் சொன்னதால் செய்தேன்; - அயோக்கியன்
என்றென்னை இவ்வுலகம் எள்ளிநகை ஆடுமென்ற
சின்ன அறிவுமின்றிச் சென்று! 08
செந்தமிழன் சீமான் :-
நாய்,வருக்கி மீதினிலே நப்பாசை வைப்பதொத்த
ஆய்வறிக்கை ஒன்றை அனுப்பினேன்; – வாய்கொழுத்த
வானரம் நீயதனை வாசித் திருந்தாயேல்
ஏனப்பா இந்தப்போர் இன்று!?09
டோனல்ட் ட்ரம்ப் :-
வாரி இறைக்கின்றார் வான்பரப்பில் ஏவுகணை;
போரின்றி விட்டாலே போதுமெனை; – சாரிசொன்னேன்
மாண்ட கமேனி மகனுக்கு; போர்நிறுத்தம்
வேண்டும் எனப்போய் விளம்பு! 10
செந்தமிழன் சீமான் :-
ஆமைக் கறிவளர்க்கும் ஆயுள்; உடல்பலத்தைச்
சாமை அரிசி தருவிக்கும்; - ஓமைகாட்!
சீமானிப் போரைச் சிலநொடியில்
தீர்த்திடுவேன்
மாமா!நீ உள்ளம் மகிழ்! 11
டோனல்ட் ட்ரம்ப் :-
கையல்ல காலிது காப்பாத்த வேண்டுகிறேன்;
பொய்யல்ல நெஞ்சம் புழுங்குகிறேன்; – அய்யோ!இப்
போர்ச்செலவால் நாடு புதைகுழியில்
வீழும்முன்
சீர்செய்வாய் ஏதேனும் செய்து! 12
ஷீலா -
அக்கா அலமே(லு)! அறிஞ்சேன் ஒருசேதி;
நிக்காமப் போனா நியாயமா? – ஒக்காந்தால்
கூறுவேன் காதில்; குறிப்பறிந்து கொண்டாயேல்
சேருமே ஊர்காதில் சென்று!
அலமேலு
அப்படி என்னடி அந்தரங்கம்? என்னிடம்
ஒப்புவி ஊரே உனைவணங்கும்; – இப்பநான்
போய்ப்பார்க்க வேறு பொழப்பில்லை; உன்னுடைய
வாய்பார்த் திருக்கேன் வழங்கு!
ஷீலா -
கூத்தப்பன் பேரன் குமர குருவுக்கும்
காத்தாயி பேத்திக்கும் காதலாம்; – ஆத்தோரம்
நாணலாம்; ஊரார் நடமாட்டம் ஓய்ந்தபின்
காணலாம் லீலை களாம்!
அலமேலு -
சீவி மினுக்கிச் சிலுக்கு நடைநடந்து
தேவிவரும் போதே தெரியுமடி; – நாவிதமாய்ப்
பேசி எவனாச்சும் பேதலிக்க வைப்பான்னு;
போய்சிக்கிட் டாளாஅப் பொண்ணு!?
ஷீலா -
அம்புவிட்டுக் கண்ணை அலையவிட்டுப்
பெண்ணவளை
நம்பவச்சுப் பின்னால் நழுவிவிட்டான்; – நம்மஊர்
தெக்கால வீதி சிவனாண்டி சின்னமவன்
முக்காலும் சோலி முடிச்சு!
அலமேலு -
அவனுக்கு முன்னால் இவனா? இரண்டோர்
தவறுமே செய்யா தவனா? - அவள்கெட்டக்
கேட்டுக்குக் காதல் கிறுக்கல்கள் ரெண்டா?ஊர்
நாட்டுக்குள் இஃதா நடப்பு?
ஷீலா -
அறிஞ்ச வரைசொன்னான் அக்கா! அடநான்
அறியா ததையா அளந்தேன்? – நெறிமறந்தும்
காணாத ஒன்றைக் கதையாத் திரிப்பேனா?
வேணாம் நமகெதுக்கு வம்பு!
அலமேலு -
அலர்பேச நாமதான் ஆளா? அதுக்குச்
சிலருண்டே ஊரிலே ஷீலா! – குலசாமி
கும்பிட்டுப் பார்ப்போம் குடும்பத்தைப் போகையிலே
எம்புட்டுப் போறோம் எடுத்து!?
பையன் 1
யாரோ கொடுக்க எவரோபோய் வாங்கிவர
ஊரோடு நாம்கூடி உட்கார்ந்து – மாரோடு
வண்ணக் கொடிகுத்தி வைப்போம் வணக்கத்தை
எண்ணிச் சுதந்திரத்தை ஏற்று!
பையன் 2
என்னா சுதந்திரம்? எங்கே பறந்திடும்?
பொன்னாள் இதாலா பொறந்திடும்? – சொன்னால்கேள்
என்னிடம் உள்ளதில் இந்தஒரு சட்டைதான்
இன்னும் கிழியா திருக்கு!
பையன் 1
குண்டூசி குத்திக் குடிமுழுகிப் போகாது
கண்டஞ்சிக் கத்திக் கதறாதே; – கொண்டாடி
ஆரஞ்சு மிட்டாய்கள் அஞ்சாறு வாங்குகிற
நேரம் வரையணிவோம் நெஞ்சு!
பையன் 2
கொடியேத்தி வச்சாக் குறைந்திடுமா நம்ம
மடியேத்தி வச்ச வறுமை? – அடியாத்தி!
கொண்டாட்டம் போட்டுக் கொடிகுத்திக்
கொண்டால்நம்
திண்டாட்டம் போய்விடுமா தீர்ந்து!?
பையன் 1
நாலாப்புக் கற்றதுக்கே நல்லாத்தான்
சாடுகிற
பாலாறே ஓடுமென்ற பாவிகளை; – கோலாறே
நாட்டுக் கவங்கதான்; நாம்படிச்சு
முன்னேறி
வீட்டுக் கனுப்புவோம் வென்று!
பையன் 2
கனிம வளங்காக்கக் கஞ்சாவை நீக்க
இனிமதுவே இல்லா திருக்கத் – தனித்திரவில்
பெண்போகச் செந்தமிழன் பேராட்சி யைநிறுவிப்
பண்பாடு காப்போம் படித்து!
நிக்காமப் போகிற கக்காவை நிப்பாட்டி
வக்காளி நாங்கஇப்போ வைக்கணுமா? - தொக்காகப்
போச்சாஎம் போர்வீரம்? போக முடியலையே
மூச்சாவைக் கூடத்தான் முன்பு!
பெத்தாம் பெருங்கப்பல் பேருக்கே; ஆய்போகக்
கொத்தாய்நிற் கின்றோம் கியூவிலே –
செத்தாலும்
இந்தப்போர் வேலைக்(கு) இனிவரக் கூடாது;
குந்திச்சா கின்றோம் குதம்!
அக்கப்போர் பண்ணும் அமெரிக்கப் கப்பலிலே
கக்காப்போர் ஒன்னு கதிகலக்க – எக்கணமும்
சீறுதே எங்கள் சிறுநீர்; கழிவறை
நாறுதே கப்பல் நகர்த்து!
ஆய்போக ஆகா அமெரிக்கப்
போர்க்கப்பல்
போய்ப்போய்ஈ ரானுடனா போர்வெல்லும்? - சேய்நின்று
சூர்காட்டு மன்றிச் சுடாதுஇக் கப்பலைப்
பார்பார்த்தும் அச்சப் படாது!
போய்க்குண்டு போடப் புறப்பட ஆகிடுமா?
வாய்ச்சண்டை போடுகிற வல்லரசே! – பாய்மார்தம்
மூக்கறுக்க ஆகிடுமா? முட்டிதேய
நேர்ந்திடுமா?
பீக்குண்டி யான பிறகு!?
குண்டிக்குப் பின்னால் குடைகிறதே; செய்திடுவோம்
சண்டைக்கு முன்னால் சமாதானம் – தண்டிக்கக்
கக்கூஸே எங்களின் காலனாய் ஆனதனால்
அக்கூச்சம் கொல்கிறதே ஆள்!
ஆண்:-
ராவுணவு என்ன? ரவையா?சப் பாத்தியா?
நோவுதுன்னு சொல்லியே நோன்பிருப்பா? – தேவுடா!
தோசைக்குச் சட்னியா? சூடுசெய்த சாம்பாரா?
ஓசைவாய் அன்பே! உரை! 1
பெண்:-
மல்லிகைப்பூ இட்லி மணக்கும்தேங்
காய்ச்சட்னி
நல்லபடி செய்துதர நான்முனைந்தேன்; – மல்லிகைப்பூ
வாங்கிவந்த மாமனுக்கு வந்தருந்த
வாய்ப்பிருக்குத்
தேங்கியுண்டு செவ்விதழில் தேன்! 2
ஆண்:-
வம்பைப்பூப் போல்கிள்ளும் வைபவமே, நீவார்க்கும்
தும்பைப்பூ இட்லி தொடுகையிலே; - கும்பிக்கும்
ஓவ்வாமை இல்லை; செரிமானச் சிக்கலில்லை;
செவ்வாழைத் தண்டே!வாய் சேர்! 3
பெண்:-
தோளிலென்னைத் தூக்கினால் தோசையெங்கு
வார்ப்பது?
தாளிலுன்னால் மின்சாரம் தாக்குது; – வாளிகொண்டு
மோகத்தை நீயிறைக்க, மொத்தஉடல்
நானிளைக்க,
தாகம்தீர்ந் தாலும் தவிப்பு! 4
ஆண்:-
மணக்கின்ற பேச்சால் மனங்கவரு கின்ற
குணவதி!வா! சேர்ந்து குளிப்போம்; - உணவைக்
குடற்பசிக்குப் பின்னே கொடுக்கலாம்; முன்னே
உடற்பசிக்குத் தாராய் உனை! 5
பெண்:-
வாய்ப்புக் கிடைத்தால் வகையாய்ச்
சுவைக்கத்தான்
பாய்க்கழைக் கின்றாய் பரவசமாய்; – வாய்க்குணவு
போடுங்கள் என்றுநான் பொங்கி
வடித்தளித்தால்
நூடுல்ஸ் இடையினிலே நுங்கு! 6