எட்டிக் காய் பற்றி இழுத்துச்
சுவைக்காமல்
எட்டிக்காய் என்றே இகழ்வேனோ? - எட்டிக்காய்
கின்றமதி
இன்முகத்தாய்! கேளாய்! உனதிரண்டு
நின்றமுலை தெங்கிள நீர்!
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
விற்குறி தப்பா
மிதிலை ராமனை
விஞ்சிய கற்பினனே! – மிகவே
நெஞ்சுரம் மிக்கவனே!
நற்பரி வாரம்
நாற்புறம் சூழ
நடமிடும் கற்றவனே! – திட்டை
நகரின் கொற்றவனே!
முதலிடை கடைஏழ்
வள்ளலின் உருவே!
வையை தமிழ்மகனே! – எங்கள்
வணக்கத்திற் குரியவனே!
சிதம்பர நாதன்
செல்வன் முருகனைச்
செதுக்கிய உருவினனே! – ஈந்தே
சிவந்த கரத்தினனே!
பொன்கிடைத் தாலும்
புதன்கிடைக் காதிதைப்
பொய்யெனச் செப்பா வாய்! – நீ
புதனுக் கொப்பாவாய்!
தன்நா நனைக்குமுன்
தஞ்சம் அடைந்தோர்
தாகத்திற் கப்பாவாய்! – அவர்
சாதத்திற் குப்பாவாய்!
உரிய யாவையும்
உதவும் வகையில்
நீதான் முன்னேரு – நீ
மென்மேல் முன்னேறு!
பெரியோன் பிரேமும்
சிறியோன் வினோத்தும்
தொடரும் பின்னேரு! – அவர்போல்
உளரிங்குப் பன்னூறு!
வையம் அளந்து
வானம் அளந்த
வாமனன் நீயல்லவோ! – நீ
வாலாம்பாள் சேயல்லவோ!
ஐயம் இடுவதும்
அதைமறந் துடனே
அளிப்பதுன் தீர்ப்பல்லவோ! – நீ
கண்ணனின் வார்ப்பல்லவோ!
வண்ணங்கள் நூறு
வழங்கு வழங்கென்று
வானவில் கேட்காதா? – உன்னிடம்
வான்மழை தோற்காதா?
கன்னம் சிவந்த
கவின்நிலா முற்றத்தில்
கைகட்டி நிற்காதா? – உன்னிடம்
கடமையைக் கற்காதா?
மடாதி பதிகளும்
படாதி பதிகளும்
வாசலில் காக்கின்றார்! – உன்
வருகையை வேட்கின்றார்!
விடாது அரசியல்
விரைவில் அதிலுன்
வரவெதிர் பார்க்கின்றார்! – முன்பு
வந்தவர் வேர்க்கின்றார்!
புதுவை மதுவும்
மதுரை தமிழும்
மருவிய திருமானே! – கொடை
வள்ளல் பெருமானே!
எடுக்கும் படங்களில்
எனக்கொர் பாடல்
எழுதத் தருவானே! – அதற்கு
ஈசன் அருள்வானே!
அகரம் அமுதன் 9940723625
பல்லவி:-
பெண்:-
நீதான் என் செல்லக் குட்டி!
நான்தான் உன் வெல்லக் கட்டி!
காலங்கள் தோறும் - உன்
உறவா? - நான் வரவா?
ஆண்:-
அடங்காத காள மாடு!
ஆனதே பிடி மாடு!
வேறொன்னும் வேணாம் - உன்
துணையா - நான் வரவா?
பெண்:-
எனக்கெனக் கிடைச்சவன் - உனை
அனுப்பினான் படைச்சவன்...
ஆண்:-
உனக்கெனக் கிடைச்சவன் - எனை
அனுப்பினான் படைச்சவன்...
சரணம்:- 1
ஆண்-
பாராயணம் பண்ணுறேன் உன்
பேர... பேர...
பார்க்காமலே போவதேன் உன்
காதல் பார்வ...
பெண்-
வண்டுக்குப் பூவை விட்டா
வசதிவே றுள்ளதா?
நண்டுக்கு வளையை விட்டா
நடுரோடு நல்லதா?
ஆண்:-
என் வாழ்க்கை முன் அழுகாச்சி
உன் வரவால் இன்றழ காச்சு...
சரணம்:- 2
பெண்:-
ஆராரிரோ பாடவே அட
ஆச... ஆச
அச்சச்சத்தான் மூட்டுதே உன்
முறுக்கு மிச...
ஆண்:-
பொழுதான பின்னே நிலவு
வாராமல் போகுமா?
இரண்டறக் கலந்தி டாமல்
என்கட்டை வேகுமா?
பெண்:-
காதலைக் கண்ணில் காட்டி
காதில்சொல் இன்னொரு வாட்டி...
ரோபோ வெண்பா!
ரோபோ கூற்று!
எல்லாரும் வேலையை என்தலையில் கட்டிவிட்டு
ஜில்பீர் அடிக்கவா செல்கின்றீர்? – தில்லிருந்தால்
மொத்தமாய் வாங்கடா! மோதப் பயந்தவன்லாம்
சத்தமாய் வைங்க சலாம்! 01
வெட்டிக் கதைபேசி வேலையைப் பார்க்காமல்
தட்டிக் கழித்துத் தமாஷ்காட்டிக் – குட்டி’ரோ
போ’வெனக்குக் கோபத்தைப் பொங்கியெழச் செய்பவங்க
சாவெனக்கு வாய்த்தநல்ல சான்ஸ்! 02
குத்தில் புரூஸ்லீ; குழப்புவதில்
ஜாக்கிஜான்;
மத்தாள் செவிகடிக்கும் மைக்டைசன்; – மொத்தத்தில்
நானோர் முகமதலி; நாக்அவுட் செய்யு(ம்)புலி;
வானோரும் மெச்சுவர்என் மாஸ்! 03
கோதாவில் நானிறங்கிக் குத்துவிட்டால் கக்கிடுவீர்
மாதாமுன் தந்த மடிப்பாலைப் – பாதாதி
கேசம் பயம்காட்டும் கேசவன்நான், என்னிடத்தில்
பேசப் பயப்படுமே பேய்! 04
வம்புக்கு யாரும் வரரெடியா? பஞ்ச்சுகளை
ஜம்பமாய்த் தாரேன் சரவெடியாய்க் – கும்பலாய்க்
கட்டமெனைக் கட்டிக் கதைமுடிக்கப்
பார்க்கிறவன்
கொட்டம் அடக்குகிறேன் கொன்று! 05
குங்ஃபூ தெரிஞ்சவன்நான் குஸ்தி அறிஞ்சவன்நான்
ஜங்ஃபுட் பசங்களெல்லாம் ஜாக்கிரதை; - எங்கஊர்
கொத்தூஸைப் பார்த்தவன்நான்; குண்டாஸும்
பார்த்தவன்தான்;
பொத்துனாப் போலொதுங்கிப் போ! 06
டீபிரேக் லஞ்ச்பிரேக் டெய்லி எனக்குண்டா?
ஹாபியாய் வேறெதையும் கண்டதுண்டா? – லாபிசெய்து
ஆபீஸில் என்னை அடிமையாய் வைத்துள்ளீர்
ரேபீஸி னும்கொடியோ ரே! 07
ஓங்கி ஒருகுத்து விட்டேன்னா விட்டஇடம்
வீங்கும்; எலும்பு விரிச(ல்)விடும்; - ஆங்குமது
கண்முன் மினுக்கட்டான் பூச்சி சிறகடித்த
வண்ணம் பறக்குமடா வந்து! 08
ஆயிரம் தண்டால் அசரா தெடுப்பேன்ஈ
ராயிரம் சிட்அப்ஸ் அடிப்பேன்நா - லாயிரம்
பஞ்ச்களைச் செய்வேன் பலநூறு கிக்குகளால்
அஞ்சாமல் செய்வேன் அசால்ட்! 09
போ!போ!ன்னு சொல்லிப் பொடனியில் தட்டுறதும்
சீ!போ!ன்னு சொல்லிஎனைத் திட்டுறதும் –
ரோபோன்னு
எள்ளிச் சிரிக்கிறதும் ஏசி ரசிக்கிறதும்
எள்ளளவும் கூடா தினி! 10
அத்தியூர் வாழ்வரதன் வஞ்சி மகேசுவரி
நெத்திக்குப் பொட்டாக நேர்ந்தனன்; - மெத்தைச்
சுகந்தின்று பிள்ளை சுமந்தீன்று மஞ்சன்
அகம்வென்று வாழ்வாள் அகம்!
பாடும் பறவைகள் பந்தம் நிலைபெறக்
கூடும் களியெலாம் கூடலில்; - ஆடும்பொன்
தொட்டில் இரண்டைந்து திங்களில்; ஆமதைக்
கட்டில் உறுதிசெயும் கண்டு!
கன்னி யவள்பாடக் கைத்தாளம் போட்டபடி
நண்ணி யவன்பாட நல்லசுகப் - பொன்பொழுதில்
கட்டிலும் பாடும்; கதையறிந்த
காரணத்தால்
தொட்டிலும் பாடும் தொடர்ந்து!
தானாய் அழுமாம் தளிர்மழலை; போயவளை
ஏனாம்? எனக்கேட்பான் ஏந்தலுமே; - ஆனாலும்
உன்பிள்ளை உன்போலும்; தம்பிக்
கழுகின்றான்;
என்பாள்தன் எண்ணத்தை இட்டு!
பகடி வெண்பா!
தனிமரமே! உன்றன் தனிமை அகற்றக்
கனிவனமே வாய்த்த கதைசொல்! – இனிமைமிகு
வண்ணமுகம் கண்டேன்; மயலுற்றேன்; என்போலும்
பெண்ணவளும் பெற்றாள் பிணி! (1)
மாவதை செய்யும் மதனம்பில் தப்பிக்கத்
தேவதை உன்றனைத் தேர்ந்தனளோ? – பூவமளிப்
போர்க்குப் பொருந்தும் பொலிவின னென்றேதான்
பார்த்துடன் பட்டாள் பசித்து! (2)
எண்ணம் உரைக்க எளிதில் உணர்த்திட
மண்ணில்வாய்ப் பேச்சுக்கு மாற்றுண்டோ? – கண்மொழி
கற்றுத் தெளிந்தால் கதையளக்கும்
வாய்ப்பேச்சு
வெற்றுப் பகட்டென்பாய் வெந்து! (3)
நின்றுதான் பேசிமிக நெஞ்சம் உணர்த்துதல்
ஒன்றுதான் கண்ணின் உயர்வாமோ? – நன்றுகேள்
ஐம்புலனில் கட்புலனே போய்த்தீண்டி
இன்பீயும்
மொய்ம்புடைய தென்பேன் முனைந்து! (4)
உரியமொழி பேசி யுணர்த்தற் குரிய
கரியவிழிக் கின்னோர் கவின்சொல்! –
உரியவரைத்
தன்னுள்ளே வைத்துத் தனதேக்கம் தீர்க்குமே
அன்னியர் காணாத வாறு! (5)
இல்லாள் உடன்நீ இணையப்போம் அவ்விரவில்
நல்லாள் நயனமிடும் கட்டளையென்? – பொல்லா
மதனம்பு பாய்ந்தெனக்கு மையல் வழங்க
மதனுக்கிம் மங்கை விழி! (6)
என்றுமில்லாப் பேருவகை இன்றுநீ கொண்டவகை
மென்றுமுழுங் காமல் மிழற்றாயோ? – இன்றுவரைக்
கொல்லரவம் போலென்னைப் பல்லிரவுங்
கொன்றதுபோய்
நல்லுறவும் வந்த நயப்பு! (7)
நெருநல் வரைநீ நிதமும் அடைந்த
வெருவல் தனித்தா விலகும்? – புருவப்
பெருவில் அணங்கின் மருவில் எனைக்கண்(டு)
உருவில் அனங்கன் உடன்! (8 )
பதமெடுத்து நெஞ்சம் படபடக்கப் பாவை
முதலிரவில் உன்முன் முகிழ்ந்தால்? – இதமுடன்
தொட்டமர்த்தித் தோகை துடியிடை மீதொருகை
இட்டமர்த்திக் காண்பேன் இதம்! (9)
மென்முறைக்கே ஒக்கல் ஒடியுமெனில்
வேட்கையால்
வன்முறைக்கோ நீயங்கு வாய்ப்பளிப்பாய்? – நன்முறையே
அவ்விரண்டும் கட்டில் அமர்க்களத்தில்
என்றவளின்
செவ்விதழே செப்பும் சிலிர்த்து! (10)
தாள்வீழுங் காரிகையைத் தாங்கிப்
பிடித்தவளின்
தோள்வீழ வன்றோ துடிதுடிப்பாய்? – மூள்கின்ற
மோக நெருப்பணைக்க முன்வரும் நேரிழையாள்
தாகத் தவிப்படக்கத் தான்! (11)
பொசுக்கென் றணைக்கப் புகுவாயேல் தோகை
விசுக்கென் றகலாளோ விள்ளாய்? – விசும்பா(து)
அகல்வாளை வாரி அணைக்க இசைவாள்
நிகழப்போம் இன்பம் நினைந்து! (12)
பூவைக் குரலெடுத்துப் பூவைக் குழல்முடிந்த
பூவை பொறென்றால் பொறுப்பாயோ? – கோவையிதழ்
வாயோடு வாய்வைத்து வாங்க வழங்குவாள்
தீயோடும் நெஞ்சம் தெரிந்து! (13)
மச்சம் சிவந்தாளின் மஞ்சல் முகத்தாளின்
கச்சம் களையக் கருதுவதேன்? – அச்சடித்த
உச்சிநிலா தன்னுருவை ஓரிரண்டாய்த்
தோற்றியவள்
கச்சையிலா வைகுதெனக் கண்டு! (14)
தலையணை ஆங்கே தனிகிடக்க பாவை
முலையணை மீதோஉன் மோகம்? – நிலையணை
ஈதெனக் கண்டேன்; இன்பம் பயக்குமால்
தோதெனக் கொள்வேன் துடித்து! (15)
கச்சில் அமைந்த கனிமேல் கருத்தமைத்து
மிச்சில் வடித்தல் மிகையன்றோ? – முச்சில்
புடைத்தரிசி அட்டுதலால் புத்தடிசில் ஆதல்
படைத்துவிடத் தானே பசிக்கு! (16)
தட்டில் கனியிருக்கத் தள்ளித் தனிவைத்துக்
கட்டில் கனிமீதே காதலேன்? – மட்டில்
சுவையாவும் மங்கை சுகந்தஉடல் தன்னில்
குவையாகி நிற்றல் குறித்து! (17)
மங்கைகொள் தேங்குடமே மையல் தனைப்போக்கும்;
அங்கைகொள் பாற்சொம்பும் ஆங்கெதற்கோ? – கொங்கைகொள்
தேறல் தெவிட்டாதே; தீம்பால்
தெவிட்டுமதைக்
கூறல் பொருட்டெனக் கொள்! (18)
கட்டிலில் நீயிருக்கக் கன்னி அருகிருக்கக்
தொட்டணைக்க நாணம் துணையாமோ? மொட்டுவிடும்
ஆசைக்குத் தோதாக ஆங்கு வழிவிட்டுப்
பூசைக்கும் தூதாகும் போ! (19)
விரகம் ஒருபக்கம் வெட்கமொரு பக்கம்
கரகம் எடுத்தாடக் கண்டால்? – விரகத்தால்
வெட்கம் வகிர்ந்து விடியும் வரையவளின்
உட்குச் செகுப்பேன் உவந்து! (20)
கால்நிலா நெற்றிமுக் கால்நிலா
கன்ன(ம்)முகம்
பால்நிலா என்றே பகர்வாயோ? – தால்நிலா(து)
அங்கவளின் அங்க அழகை வருணிக்க
இங்குவந்து வாய்த்த தெனக்கு! (21)
பாய்ச்சல்காட் டாதுபோய்ப் பண்பாய்
மிகுவிரகக்
காய்ச்சல் தணிக்கக் கடவாயோ? – மேய்ச்சலுக்கு
நன்னிலம் கிட்டின் நனிமேயும் பெற்றம்போல்
என்னிலையும் ஆதல் இயல்பு! (22)
ஆய கலையனைத்தும் அத்துப் படிதானோ?
ஏயமறக் கற்ற தெவளிடமோ? – நேயனே!
ஆயகலை ஈரெட்டில் ஒன்றுகலை ஒன்றேதான்
ஆயவிலை அஃதுள் அமிழ்ந்து! (23)
அல்லாக் கலவியைநீ கற்றவன்போற் கற்பிக்க
நல்லாளை நாடும் நயம்நவில்! – இல்லாள்
துணைகொண்டே கற்றுத் தெளிதல் மரபாம்;
இணைகண்டே இன்புறல் ஏற்பு! (24)
கூடல் பொழுதில் கொடியிடை மீதேஉன்
தேடல் எதுவோ? தெரிந்துசொல்! –
ஏடல்
எதுவான போதும் இருவர்க்கும் இன்பம்
பொதுவாதல் ஒன்றே புகழ்! (25)
இனம்காணா இன்பம் இருமடங் காதல்
மனம்கண்டு மாது மருண்டால்? – தனம்கொண்ட
கோதை அவளுக்குக் கூறுவேன் கொல்லுமதன்
வாதைக் கதுவே மருந்து! (26)
இட்டவளை இற்றுவிழ நின்கையால்
மெட்டிப்பெற்(று)
இட்டவளைக் கேளென்றால் என்கேட்பாய்? – மொட்டவளைப்
பூமணைமேல் வைத்துப் புதுத்தாலி கட்டியஇம்
மாமனைமேல் வாங்கென்பேன் வந்து! (27)
மழலை மொழிபேசும் மங்கை அவட்கோர்
மழலை வழங்க மனமோ? – மழலைச்சொல்
கேட்டல் செவிக்கின்பம் தீண்டல்
உடற்கின்பம்
வேட்டல் இலார்யார்? விளம்பு! (28)
நூலிடை என்றே நுவலரிய நுண்ணிடை
சாலிடை ஆவதிற் சம்மதமோ? – நூலுடை
கொண்டு மறைத்தமு தூட்ட மழலைபெறல்
பெண்ணாய்ப் பிறந்தோர்க்குப் பேறு! (29)
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!
மதிநூறும் தோற்கும் மனையோ(டு); - அதிகமெனை
வாழ்த்திப் புணர வழியனுப்பும் நீயுமே
வாழ்கமனை யோடு மகிழ்ந்து! (30)