கம்ப்யூட்டர் கண்ட
அகரம்.அமுதன்
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
செவ்வாய், 28 ஏப்ரல், 2026
சனி, 25 ஏப்ரல், 2026
நன்னூல் களையே நய!
எத்தனை நூல்கற்றாய்
புதன், 22 ஏப்ரல், 2026
மோடி -
சௌகிதார் வந்தி ருக்கேன்;
சகஜமாய்ப் பழகும் தம்பி!
சௌக்யமா? மனதில் ஏதும்
சலனமா? பேர்தான் என்ன
கௌசிக்கா? மனதில் என்ன
‘லவ்சிக்’கா? உள்ள வற்றைக்
கௌரவம் விட்டு விஸ்வ
குருவிடம் சொலமாட் டாயா?
கடைக்காரன் -
சிந்தூர்போர் போல்வி ரைந்து
சீக்கிரம் முடிப்ப தற்கு
சிந்தையிலே ஊறுங் காதல்
சிக்கலென்ன சிறுசா? மோடி!
எந்தவூர் ஆளு நீங்க?
என்னவாங் கிடவந் தீங்க?
கந்துக்கே கடையைப் போட்டேன்
காசீந்து வாங்கிக் கோங்க!
டிரம்ப் கூற்று!
அழகான பெண்ணை எல்லாம்
அணைக்கத்தான் வேண்டும் அன்றிக்
குழிதோண்டி புதைக்கும் எண்ணம்
கூடாது; மலர்மஞ் சத்தில்
பழகாத வித்தை யெல்லாம்
பழகத்தான் வேண்டும் அன்றிப்
பழிதீர்த்துக் கொள்ளும் எண்ணம்
பரவிடல் முறையா காது!
அப்பனே! ஈரான் தேசம்
ஆள்வோனே! செயற்கை யான
ஒப்பனை தேவை இல்லா
ஒண்டொடி எண்ம ரையும்
இப்பவே விடுத லைசெய்!
இல்லாது போனால் போரில்
துப்புற வாக உன்னைத்
துடைத்தழித் திடுவேன் நானே!
சுடலை -
லிக்கரை விற்றுக் காசை
லவட்டியும், குடிமக் கள்தம்
நிக்கரை உருவி மானம்
நிம்மதி இழக்கச் செய்தும்,
டக்கராய் வாழும் இந்த
டாடியின் தாகம் தீர்க்கச்
சக்கரை இலாக்க ருப்பஞ்
சாறுபிழிந் தீவாய் தாத்தா!
வியாபாரி -
என்னண்ணன் செட்டு நீங்க!
என்னையா தாத்தான் றீங்க?
நன்மையே செய்யா நீங்க
நாடாள ஏன்வ றீங்க?
கண்ணியமாச் சொல்றேன் எந்தன்
கடைப்பக்கம் வாரா தீங்க
புண்ணியமாப் போகும் நாடு
புலரட்டும் வீடு போங்க!
திங்கள், 20 ஏப்ரல், 2026
வெட்டொன்று துண்டிரண்டு விள்!
வெட்டொன்று துண்டிரண்டு விள்!
‘என்னுள் எழுங்காதல் என்னை விழுங்குதல்போல்
உன்னுள்தோன் றிற்றா உனைவிழுங்க?’ – என்பதனைச்
சட்டென்று சொல்லத் தடுமாறும் காரிகையே!
வெட்டொன்று துண்டிரண்டு விள்!
எம்மாம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன்
சும்மானாச் சும்பதில் சொன்னாயா? – அம்மாடி!
ஆக்கினைகள் செய்தாயா? ஆறப் பொறுக்கலையே
ஆக்கப் பொறுத்த அகம்!
ஒவ்வொரு நாளுமே ஓர்யுகமாய்ப் போகிறது;
செவ்விழியாட் கெவ்வாறு செல்கிறது? – இவ்விவரம்
பித்துப் பிடித்தவென்முன் பெண்பேதை
சொல்லாக்கால்
செத்துத் தொலையலாம் ச்சே!
யானை பிடிக்க அகலமாய் ஆழ்பள்ளம்
கானை அடைந்து கடைந்தாற்போல் – தானைப்
படைகொண்டு வந்திப் பயலைப் பிடிக்கக்
குடைந்தாயோ கன்னக் குழி!?
பூவுன்னைப் பார்த்தவுடன் புல்லரிக்கும்; பைந்தமிழ்ப்
பாவுன்னைப் பார்த்தவுடன் பல்லிளிக்கும்; – நாவுதிர்க்கும்
மெல்லிசை நச்சரிக்கும்; மேன்மைகளை
உச்சரிக்கும்;
எல்லிநிலா பொச்சரிக்கும் இன்று!
சர்க்கரை வெண்பா!
முன்போல் இருக்க முடிகிறதா? சர்க்கரைநோய்
தின்கின்ற தென்னை, தெரிகிறதா? – என்நெஞ்சே!
சீக்கோடு மேலும் சிரமப் படவேண்டாம்
நாக்கோடு வைக்காதே நட்பு!
தட்டிலே காண்கிற லட்டையே மேயாதே;
வெட்டியாய் அல்வாவை வேண்டாதே; – சட்டியில்
தீனி பலவிதம் தேடாதே; ரத்தத்தில்
சீனி அதிகமாச் சே!






