குழந்தை குடோனா? கொழுந்தன் விடானா?
அழகிக்கும் வேலை அதானா? – பழகினால்
பாலும் புளிக்கும்; படுக்கை புளிக்காதா?
மேலும் சிலபெறலா மே!
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
நாட்டு நடப்புகள நாளேட்டுச் சேதிகள
பாட்டிலுக்குப் பத்துருவா பாவிகள – நீட்டுக்குத்
தீயிடா நீதிகள தேசத்தில் பாக்கையில
வாயில நல்லா வருது!
ஆழ்ந்தவருத் தங்கள் அஜித்!
விஜய் –
என்சொல்லித் தேற்ற? எதைநான் அரங்கேற்ற?
மின்சாரம் போச்சா விளக்கேற்ற? – அன்னையைச்
சூழ்ந்தமர ணத்தால் துயரப் படுமுனக்கென்
ஆழ்ந்தவருத் தங்கள் அஜித்! 01
அஜித் –
கிழியாத நெஞ்சம் கிழிந்தவெனக் குந்தன்
அழியாத அன்பை அளித்தாய் – விழியால்
நிஜமாய் மனதார நன்றிபல நின்றன்
விஜயத்திற் கீந்தேன் விஜய்! 02
விஜய் –
தாயை இழந்து தவிக்கின்ற நண்பனே!
சேயைப்போல் விம்மும் சினேகிதா! -
தீயையள்ளி
இட்டசெய்தி கேட்டிடிந்தேன்; என்போல்
இடிந்தஉன்னைத்
தொட்டணைத்துத் தேற்றவந்தேன் தோள்! 03
அஜித் –
தக்க சமயத்தில் தாங்கிப்
பிடித்தெனது
துக்கங்கள் யாவும் துடைப்பவனே! -
மக்கள்
முதல்வனே! என்தாய் மடிபிறவா மூத்த
புதல்வனே! ஆறாதிப் புண்! 04
விஜய் –
முற்றும் துறந்த முனிவனையும்
விட்டுவைக்காப்
பெற்றதாய்ப் பாசம் பெரிதன்றோ? – பற்றுவிட்டும்
தட்டிக் கழிக்காமல் தாய்இழப்பைக்
கண்ணீரால்
பட்டினத்தான் பாடிவைத்தான் பாட்டு! 05
அஜித் –
ஆரடித்த போதும் அசையா இரும்புநெஞ்சம்
பாரடித்துக் கொண்டு படபடத்தல்; – பேரதிர்ச்சி
தந்துவிட்டுப் போய்விட்டாள் தாய்;நான் அனாதையாய்
நொந்துசா கின்றேன் நொடிந்து! 06
விஜய் –
நாள்முழுதும் நாமிணைந்து நான்குகண்க
ளாலழுதும்
மீள்வதில்லை சென்றவுயிர் மேனியிடம்; – வாள்கிழித்த
நெஞ்சின் வடுபோல் நிலைத்ததுயர் என்றாலும்
கொஞ்சம் தணிவாய் கொதிப்பு! 07
அஜித் -
பால்வழியத் தொட்டில் படுத்துறங்க
வைத்தவளைக்
கால்கழிந்த கட்டிலிலே காண்பேனோ? – தால்சுமந்த
தாலாட்டும் எங்கே? தளிர்வாய்ச்
சிரிப்புமெங்கே?
ஏலாதோ கேட்க இனி!? 08
விஜய் –
பத்தாள் பலம்கொண்ட பந்தைய வீரன்நீ
கொத்தாய் நிலைகுலையக் கூடாது; – புத்தேள்
உலகிருந்து உன்னை உயர்த்துவாள் அன்னை
நலம்விளைக்கும் நன்நினைவை நத்து! 09
அஜித் –
தஞ்சமாய் உன்மடியைத் தந்ததால் நண்பனே!
கொஞ்சமாய் நிம்மதி கொள்கிறேன்; – பஞ்சராய்
ஆனஎன் நெஞ்சுக் களித்தாய் அமுதமொழி
தேனள்ளிப் பேச்சில் தெளித்து! 10
எளிய மொழியால் இனியவெண் பாக்கள்
உளமே உருக உரைத்தீர் - களிசேர்
கவின்றமிழ்க் கோவே கவிப்பெருக்கே என்று
நவின்றுமை வாழ்த்திடுமென் நா.
- இமயவரம்பன்
வீஆர் புரௌடுகொத்தூஸ்!
வீதியெங்கும் ஒட்டு லித்தோ, ‘வீஆர்
புரௌடுகொத்தூஸ்’
நாதியென்றோங் கோலார்க்கு நாங்களுண்டித் – தேதிகளில்
தீயசக்தி யானகட்சி ஜென்சி வருகையினால்
தூயசக்தி யானதெனச் சொல்!
கக்கூஸ் கழுவுதற்கும் காலைப் பிடிப்பதற்கும்
நக்கிப் பிழைப்பதற்கும் நாங்கரெடி – மக்களெல்லாம்
கொத்தூஸ் எனவழைத்தால் கோபம் வராதெமக்குச்
சத்தூசி தான்வ சவு!
ஜென்சி திமுக வெண்பா!
ஆண்ட திமுக அடம்பிடித்து ஜென்சிகளைத்
தூண்டி இழுக்கத் துணிந்ததுவே –
வாண்டுகளின்
மாஸ்அறிந்து கொள்ளா மடமையி னாலடைந்த
லாஸ்அறிந்து கொண்டங்க லாய்த்து!
நடிகனின் பின்னால் நடைபோடு வார்தம்
அடிகளைக்கண் ணீரால் அலம்பிப் –
பிடித்திழுக்க
ஜென்சியை முன்னொட்டாய்ச் சேர்க்க முனைந்ததெல்லாம்
முன்னேற்றம் அல்ல; முடிவு!
கொத்தடிமை என்பதனைக் கொத்தூஸ்
எனும்புதுமை
சத்தியமாய்க் காணச் சகிக்கவில்லை; - இத்தகைய
சொல்லால் தனைத்தானே சுட்டல் மடமைஇதைக்
கல்லி எறிதல் கடன்!
மூத்த வயதுடைய முட்டாள்கள் சூழ்ந்துளதால்
காத்துமிக வாங்குகிற கட்சியதை –
நீத்தார்தம்
பட்டியல் சேர்த்தல் பகுத்தறிவு; ஜென்சிகள்முன்
குட்டிக் கரணமிடல் கூத்து!
வண்டெல்லாம் வாயேஜர்; நண்டெல்லாம்
புல்டோசர்;
செண்டெல்லாம் பூங்கொடியின் சிக்னேச்சர்; - கண்ணெல்லாம்
பிய்த்துயிர் உண்ணும் பிளாக்அண்ட்
ஒயிட்ஃப்ளவர்;
மெய்த்திங்கள் சேயுண்ணும் மெஸ்!
சொற்பொருள்:-
வண்டெல்லாம் வாயேஜர் - அண்டத்தில் கோள்களை
ஆய்வு செய்ய அனுப்பப் பட்டது வாயேஜர் விண்கலம். அதுபோல மலர்களை ஆய்வு செய்யப்
புறப்பட்ட கலங்களே வண்டுகள்.
நண்டெல்லாம் புல்டோசர் - மனிதர்கள் பள்ளம்
பறிக்கப் பயன்படுத்துகிற இயந்திரம் புல்டோசர். நண்டு தனக்கான வளையைத் தோண்ட தானே
புல்டோசராகச் செயல்படுகிறது.
செண்டெல்லாம் பூங்கொடியின் சிக்னேச்சர் -
மலர்களெல்லாம் செடி கொடிகளின் அழகிய கையெழுத்துகள்.
கண்ணெல்லாம் பிய்த்துயிர் உண்ணும் பிளாக்
அண்ட் ஓயிட் ஃப்ளவர் - பெண்களின் கண்களெல்லாம் ஆண்களின் உயிரை உண்ணும் கறுப்பு
வெள்ளை பூக்கள்.
மெய்த்திங்கள் சேயுண்ணும் மெய் - இரவில்
தோன்றும் நிலவானது பச்சிளம் குழந்தைகளுக்கு நிலாச்சோறு வழங்கும் உணவுக் கூடம்.