வெள்ளி, 6 மார்ச், 2026

 சண்டிப் பயலிவன் சத்தியமாய் யாரிடமோ

குண்டி கிழியத்தான் போகின்றான்; – பண்டுலக‍

இட்லரா இல்லை இறுமாப் பதிகமுள்ள

பட்லரா இந்தப் பயல்!?





 

ஏசுவோ அல்லாவோ ஈசனோ யாராச்சும்

பேசுமிவன் வாயைப் பிடுங்காரோ? – லூசுப்

பயலாலே காது படும்பாட்டைச் சொல்ல

முயன்றாலே ஏது முடிவு!?




வியாழன், 5 மார்ச், 2026

சீமான் vs ட்ரம்ப்!


சீமான் vs ட்ரம்ப்!

 

செந்தமிழன் சீமான்:-

 

ஹாய்!ட்ரம்ப்! சவுக்கியமா? ஹார்முஸ் அணையில்போர்

போய்நீஇப் போது புரியணுமா? - வாய்கிழிய

இஸ்ரேல் அழைத்தால் எகிறி அடிப்பாயா?

திஸ்ஈஸ்ராங் கான செயல்! 01

 

டோனல்ட் ட்ரம்ப்:-

 

சூரனே நீதான்னான்; சூப்பர் பவர்தான்னான்;

தீரனே தீ வை திரியில்னான்; - காரணம்

கேட்காமல் போய்க்கெட்டேன்; கேனையன் நானேஎன்

ஆட்சிக்கு வைத்துள்ளேன் ஆப்பு! 02

 

செந்தமிழன் சீமான் :-

 

எண்ணித் துணியும்முன் என்னிடம் கேட்டிருந்தால்

தண்மையாய் உன்னைத் தடுத்திருப்பேன்; – மண்டைக்

கனத்தாலே இன்று களத்தில்பின் வாங்கும்

உனக்கேனோ இம்மாம் உதார்? 03

 

டோனல்ட் ட்ரம்ப் :-

 

இட்லருக்கே புத்தி இயம்பிய உன்னிடத்தில்

நட்கழன்ற தால்கேட்க நான்மறந்தேன்; – நட்புடனே

ஓடிவந்து நின்றால் உதவுவாய் என்றிப்போ

நாடிவந்தேன்; தீர்வொன்றை நல்கு! 04

 

செந்தமிழன் சீமான் :-

 

அண்ணன் இருக்கிறேன் அழுது புலம்பாமல்

கண்துடை இந்தா!என் கைக்குட்டை; – தொண்டைக்குள்

முள்ளானார் முல்லாக்கள்; முள்ளை எடுக்கின்ற

முள்வாங்கி என்வாய் மொழி! 05

 

டோனல்ட் ட்ரம்ப் :-

 

அதட்டினால் அஞ்சும் அரபுலகம்; ஈரான்

அதற்கெலாம் அஞ்சுகிற ஆளா? – குதற்கமாய்ப்

பேசுகிற என்னையவர் பெண்டெடுக் கின்றார்;நான்

வீசுகிற பாமெல்லாம் வேஸ்ட்! 06

 

செந்தமிழன் சீமான் :-

 

மூத்திரச் சந்திலே முட்டாள் உனைமறித்து

ஆத்திரம் தீர அவனடிப்பான்; – சூத்தைநீ

பொத்தியிருந் தாலுண்டா பொல்லாப்பு? கிஞ்சித்தும்

புத்தியிருந் தாலுண்டா போர்!? 07

 

டோனல்ட் ட்ரம்ப் :-

 

வயோதிகனைக் கொன்றால் வழிக்குவரும் என்று

சியோனிசம் சொன்னதால் செய்தேன்; - அயோக்கியன்

என்றென்னை இவ்வுலகம் எள்ளிநகை ஆடுமென்ற

சின்ன அறிவுமின்றிச் சென்று! 08

 

செந்தமிழன் சீமான் :-

 

நாய்,வருக்கி மீதினிலே நப்பாசை வைப்பதொத்த

ஆய்வறிக்கை ஒன்றை அனுப்பினேன்; – வாய்கொழுத்த

வானரம் நீயதனை வாசித் திருந்தாயேல்

ஏனப்பா இந்தப்போர் இன்று!?09

 

டோனல்ட் ட்ரம்ப் :-

 

வாரி இறைக்கின்றார் வான்பரப்பில் ஏவுகணை;

போரின்றி விட்டாலே போதுமெனை; – சாரிசொன்னேன்

மாண்ட கமேனி மகனுக்கு; போர்நிறுத்தம்

வேண்டும் எனப்போய் விளம்பு! 10

 

செந்தமிழன் சீமான் :-

 

ஆமைக் கறிவளர்க்கும் ஆயுள்; உடல்பலத்தைச்

சாமை அரிசி தருவிக்கும்; - ஓமைகாட்!

சீமானிப் போரைச் சிலநொடியில் தீர்த்திடுவேன்

மாமா!நீ உள்ளம் மகிழ்! 11

 

டோனல்ட் ட்ரம்ப் :-

 

கையல்ல காலிது காப்பாத்த வேண்டுகிறேன்;

பொய்யல்ல நெஞ்சம் புழுங்குகிறேன்; – அய்யோ!இப்

போர்ச்செலவால் நாடு புதைகுழியில் வீழும்முன்

சீர்செய்வாய் ஏதேனும் செய்து! 12







நல்லதாய்ப் போச்சு;
நமது திருநாட்டில்
இல்லை வளைகுடாப்போல்
எண்ணெ(ய்)வளம்; - தொல்லைபட
நேர்ந்திருக்கும்; கூச்சல்
நிறைந்திருக்கும்; மேற்குலகம்
சூழ்ந்தெடுத்தி ருக்கும்
சுளுக்கு!

சனி, 28 பிப்ரவரி, 2026

வேணாம் நமக்கெதுக்கு வம்பு!

 

ஷீலா -

 

அக்கா அலமே(லு)! அறிஞ்சேன் ஒருசேதி;

நிக்காம‍ப் போனா நியாயமா? – ஒக்காந்தால்

கூறுவேன் காதில்; குறிப்பறிந்து கொண்டாயேல்

சேருமே ஊர்காதில் சென்று!

 

அலமேலு

 

அப்படி என்னடி அந்தரங்கம்? என்னிடம்

ஒப்புவி ஊரே உனைவணங்கும்; – இப்பநான்

போய்ப்பார்க்க வேறு பொழப்பில்லை; உன்னுடைய

வாய்பார்த் திருக்கேன் வழங்கு!

 

ஷீலா -

 

கூத்தப்பன் பேரன் குமர குருவுக்கும்

காத்தாயி பேத்திக்கும் காதலாம்; – ஆத்தோரம்

நாணலாம்; ஊரார் நடமாட்டம் ஓய்ந்தபின்

காணலாம் லீலை களாம்!

 

அலமேலு -

 

சீவி மினுக்கிச் சிலுக்கு நடைநடந்து

தேவிவரும் போதே தெரியுமடி; – நாவிதமாய்ப்

பேசி எவனாச்சும் பேதலிக்க வைப்பான்னு;

போய்சிக்கிட் டாளாஅப் பொண்ணு!?

 

ஷீலா -

 

அம்புவிட்டுக் கண்ணை அலையவிட்டுப் பெண்ணவளை

நம்பவச்சுப் பின்னால் நழுவிவிட்டான்; – நம்ம‍ஊர்

தெக்கால வீதி சிவனாண்டி சின்னமவன்

முக்காலும் சோலி முடிச்சு!

 

அலமேலு -

 

அவனுக்கு முன்னால் இவனா? இரண்டோர்

தவறுமே செய்யா தவனா? -  அவள்கெட்டக்

கேட்டுக்குக் காதல் கிறுக்கல்கள் ரெண்டா?ஊர்

நாட்டுக்குள் இஃதா நடப்பு?

 

ஷீலா -

 

அறிஞ்ச வரைசொன்னான் அக்கா! அடநான்

அறியா ததையா அளந்தேன்? – நெறிமறந்தும்

காணாத ஒன்றைக் கதையாத் திரிப்பேனா?

வேணாம் நமகெதுக்கு வம்பு!

 

அலமேலு -

 

அலர்பேச நாமதான் ஆளா? அதுக்குச்

சிலருண்டே ஊரிலே ஷீலா! – குலசாமி

கும்பிட்டுப் பார்ப்போம் குடும்பத்தைப் போகையிலே

எம்புட்டுப் போறோம் எடுத்து!?




வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

 

பையன் 1

 

யாரோ கொடுக்க எவரோபோய் வாங்கிவர

ஊரோடு நாம்கூடி உட்கார்ந்து – மாரோடு

வண்ணக் கொடிகுத்தி வைப்போம் வணக்கத்தை

எண்ணிச் சுதந்திரத்தை ஏற்று!

 

பையன் 2

 

என்னா சுதந்திரம்? எங்கே பறந்திடும்?

பொன்னாள் இதாலா பொறந்திடும்? – சொன்னால்கேள்

என்னிடம் உள்ளதில் இந்த‍ஒரு சட்டைதான்

இன்னும் கிழியா திருக்கு!

 

பையன் 1

 

குண்டூசி குத்திக் குடிமுழுகிப் போகாது

கண்டஞ்சிக் கத்திக் கதறாதே; – கொண்டாடி

ஆரஞ்சு மிட்டாய்கள் அஞ்சாறு வாங்குகிற

நேரம் வரையணிவோம் நெஞ்சு!

 

பையன் 2

 

கொடியேத்தி வச்சாக் குறைந்திடுமா நம்ம

மடியேத்தி வச்ச வறுமை? – அடியாத்தி!

கொண்டாட்டம் போட்டுக் கொடிகுத்திக் கொண்டால்நம்

திண்டாட்டம் போய்விடுமா தீர்ந்து!?

 

பையன் 1

 

நாலாப்புக் கற்றதுக்கே நல்லாத்தான் சாடுகிற

பாலாறே ஓடுமென்ற பாவிகளை; – கோலாறே

நாட்டுக் கவங்கதான்; நாம்படிச்சு முன்னேறி

வீட்டுக் கனுப்புவோம் வென்று!

 

பையன் 2

 

கனிம வளங்காக்கக் கஞ்சாவை நீக்க

இனிமதுவே இல்லா திருக்கத் – தனித்திரவில்

பெண்போகச் செந்தமிழன் பேராட்சி யைநிறுவிப்

பண்பாடு காப்போம் படித்து!

 



வியாழன், 26 பிப்ரவரி, 2026

பீக்குண்டி யான பிறகு!

நிக்காமப் போகிற கக்காவை நிப்பாட்டி

வக்காளி நாங்கஇப்போ வைக்கணுமா? - தொக்காகப்

போச்சாஎம் போர்வீரம்? போக முடியலையே

மூச்சாவைக் கூடத்தான் முன்பு!

 

பெத்தாம் பெருங்கப்பல் பேருக்கே; ஆய்போகக்

கொத்தாய்நிற் கின்றோம் கியூவிலே – செத்தாலும்

இந்தப்போர் வேலைக்(கு) இனிவரக் கூடாது;

குந்திச்சா கின்றோம் குதம்!

 

அக்கப்போர் பண்ணும் அமெரிக்கப் கப்பலிலே

க‍க்காப்போர் ஒன்னு கதிகலக்க – எக்கணமும்

சீறுதே எங்கள் சிறுநீர்; கழிவறை

நாறுதே கப்பல் நகர்த்து!

 

ஆய்போக ஆகா அமெரிக்கப் போர்க்கப்பல்

போய்ப்போய்ஈ ரானுடனா போர்வெல்லும்? - சேய்நின்று

சூர்காட்டு மன்றிச் சுடாதுஇக் கப்பலைப்

பார்பார்த்தும் அச்சப் படாது!

 

போய்க்குண்டு போடப் புறப்பட ஆகிடுமா?

வாய்ச்சண்டை போடுகிற வல்லரசே! – பாய்மார்தம்

மூக்கறுக்க ஆகிடுமா? முட்டிதேய நேர்ந்திடுமா?

பீக்குண்டி யான பிறகு!?

 

குண்டிக்குப் பின்னால் குடைகிறதே; செய்திடுவோம்

சண்டைக்கு முன்னால் சமாதானம் – தண்டிக்க‍க்

க‍க்கூஸே எங்களின் காலனாய் ஆனதனால்

அக்கூச்சம் கொல்கிறதே ஆள்!





புதன், 25 பிப்ரவரி, 2026

 எட்டுக் கழுதைவய(து)

எட்டிபின் நாம்செய்யும்
குட்டிக் குறும்பும்
குறும்பாமோ - எட்டி
அழைப்பு மணியடித்து
ஆங்கொளியும் பிள்ளை
இழைக்கும் குறும்பே
இனிது!

 கெத்தென்பார் இந்தக்

கிழவனை; ஆனால்நான்
வெத்தென்பேன் இந்த
விருத்தனை; – செத்தும்
செருப்படி வாங்கும்
தெலுங்கனா நல்ல
உருப்படி? தூர
ஒதுக்கு!

ஓசைவாய் அன்பே உரை!

 

ஆண்:-

ராவுணவு என்ன? ரவையா?சப் பாத்தியா?

நோவுதுன்னு சொல்லியே நோன்பிருப்பா? – தேவுடா!

தோசைக்குச் சட்னியா? சூடுசெய்த சாம்பாரா?

ஓசைவாய் அன்பே! உரை! 1

 

பெண்:-

மல்லிகைப்பூ இட்லி மணக்கும்தேங் காய்ச்சட்னி

நல்லபடி செய்துதர நான்முனைந்தேன்; – மல்லிகைப்பூ

வாங்கிவந்த மாமனுக்கு வந்தருந்த வாய்ப்பிருக்குத்

தேங்கியுண்டு செவ்விதழில் தேன்! 2

 

ஆண்:-

வம்பைப்பூப் போல்கிள்ளும் வைபவமே, நீவார்க்கும்

தும்பைப்பூ இட்லி தொடுகையிலே; - கும்பிக்கும்

ஓவ்வாமை இல்லை; செரிமானச் சிக்கலில்லை;

செவ்வாழைத் தண்டே!வாய் சேர்! 3

 

பெண்:-

தோளிலென்னைத் தூக்கினால் தோசையெங்கு வார்ப்பது?

தாளிலுன்னால் மின்சாரம் தாக்குது; – வாளிகொண்டு

மோகத்தை நீயிறைக்க, மொத்த‍உடல் நானிளைக்க,

தாகம்தீர்ந் தாலும் தவிப்பு! 4

 

ஆண்:-

மணக்கின்ற பேச்சால் மனங்கவரு கின்ற

குணவதி!வா! சேர்ந்து குளிப்போம்; - உணவைக்

குடற்பசிக்குப் பின்னே கொடுக்கலாம்; முன்னே

உடற்பசிக்குத் தாராய் உனை! 5

 

பெண்:-

வாய்ப்புக் கிடைத்தால் வகையாய்ச் சுவைக்கத்தான்

பாய்க்கழைக் கின்றாய் பரவசமாய்; – வாய்க்குணவு

போடுங்கள் என்றுநான் பொங்கி வடித்தளித்தால்

நூடுல்ஸ் இடையினிலே நுங்கு! 6