திங்கள், 11 மே, 2026

 ‘விக்’கைப் பிடித்து

வெளியேற்றி விட்டிந்த
மக்கைக் கொணர்ந்துள்ளே
வைத்துள்ளார்; – ‘விக்’கிற்கும்
மக்கிற்கும் யாதொன்றும்
மாறுபா டில்லைஇதை
மக்கள்தாம் என்றுணர்
வார்?

 ஜோசப் விஜய்:-

கவர்னர்சார்! லெட்டர்
கவரோடு வந்தேன்;
தவறின்றித் டைப்பண்ணித்
தந்தேன்; - கவனமாய்ப்
பார்த்துப் பதவியைப்
பாவப்பட் டீந்தீரேல்
மார்தட்டி ஆள்வேனிம்
மண்!
விஸ்வநாத் அர்லேகர்:-
சொன்னால்கே ளுங்கள்;இத்
தொல்தமிழ் நாடாள
இன்னும் பதின்மர்
இவண்வேண்டும் - முன்வந்தே
ஆதரவை நல்கிட
ஆவலுடன் ஆருள்ளார்
சாதகமாய் இட்டுக்கைச்
சாத்து!?
ஜோசப் விஜய்:-
காங்கிரசில் ஐவர்
கரங்கொடுக்க முன்வந்தார்
வாங்கிவந்தேன் சம்மதித்த
வண்ணமடல் - ஈங்கிவற்றை
ஏற்றுப் பதவி
எனக்களிக்க வேண்டுமெனச்
சாற்றிப் பணிகின்றேன்
தாள்!
விஸ்வநாத் அர்லேகர்:-
இன்னும் அறுவர்
இவண்வேண்டும்; போய்க்கொணர்ந்தால்
முன்னுக்குப் பின்நான்
முரண்படேன்; - அன்றுமக்கே
ஆட்சி செலுத்தும்
அதிகாரம் ஈவேன்தாய்
சாட்சியாய் இஃதுத்
தமம்!
ஜோசப் விஜய்:-
இடதுசா ரிக்கும்
வலதுசா ரிக்கும்
மடலெழுதிக் கோரிக்கை
வைத்தேன்; - குடல்வற்றிச்
சாவதினும் என்பக்கம்
சார்வதுமேல் என்றுவந்தார்
ஆகவதுபா ரீரோ
அடுத்து!?
விஸ்வநாத் அர்லேகர்:-
தம்பி விஜய்!எந்தன்
தார்மீக தர்மத்தை
இம்மியும் மாற
இடமளியேன்; - வெம்பியழ
வேண்டாம்; இனுமிருவர்
வேண்டும்; அழைத்துவந்து
ஆண்டுகொள் ளுங்கள்ஐந்(து)
ஆண்டு!
ஜோசப் விஜய்:-
விசித்திர ஜந்து
வி.சி.க.வைக்கைக் கூப்பி
வசியமொழி ஆயிரம்
வார்த்தேன்; - பிசிறின்றித்
தந்தார்தம் ஆதரவைத்
தாங்கிய நன்மடலை
இந்தாரும் காண்பீர்
எடுத்து!
விஸ்வநாத் அர்லேகர்:-
பஜாரிலே விற்கும்
பதவியென் றெண்ணி
அஜாக்கிரதை யாய்நீங்கள்
அல்லாமல் - மெஜாரிட்டி
காண்பிக்கத் தந்த
கடிதங் களாலும்மை
ஆண்டுகொள்ள விட்டேன்
அழைப்பு!
-அகரம் அமுதன் -



 விஜய் மைண்டு வாய்ஸ்!

நாலாந் தரமான
நற்றமிழ்நாட் டாளுநரை
நாலாந் தரம்பார்க்க
நான்போனால் – ஏலாது
போடா எனவவர்
போய்விட்டார் நான்கிடக்கேன்
பாடாய்ப் பதவிக்கே
பட்டு!

 அச்சனெனக் கூறிவந்தோன்

ஆட்சி பறிபோக
அச்சோ வெனவிங்
கழுதவர்யார்? – மெச்சும்
கலையல்ல ஈதோர்
களை;நாம் வியக்க
மலையல்ல ஈதோர்
மடு!

 ஆண்டாண்டாய் நீங்கள்

அடித்தகொள்ளை பார்த்துத்தான்
வேண்டாம்நீர் என்று
விரட்டிவிட்டார்; – மீண்டுமும்மை
ஓட்டணுமா ஓங்கோலுக்
கொண்டமிழர் தம்பலத்தைக்
காட்டணுமா என்னங்
கடா!?

 சன்னமாய்த் தூறுகிற

சாரலே! என்மனதை
என்னமாய்க் கொள்ளை
இடுகின்றாய்? – நன்னுதலாள்
தீண்டும் குளிர்ச்சியைத்
தேகம் தருகின்றாய்;
யாண்டுமிவ் வாறே
இரு!

 கொளுத்தும் வெயிலின்

கொடுமையில்தப் பிக்கக்
குளுமையைத் தேடுமென்
கூடே! - குளுமைக்குத்
தோப்பிளநீர் கிட்டும்
தொலைவிலில்லாக் காரணத்தால்
சாப்பிடுவோம் தர்பூ
சணி!
குளிர்சா தனப்பெட்டிக்
குள்ளேஓர் ஓரம்
ஒளிந்திந்நாள் வெக்கை
ஒழிப்போம்; - குளித்தாலும்
கொஞ்சமும் சூடு
குறைகின்ற பாடில்லை;
தஞ்சமடை வோமிச்
சணம்!
மோர்குடித்தும் பார்த்தாச்சு;
முற்றும் தயிர்சாதம்
தேர்ந்தெடுத்தும் நண்பகலில்
தின்றாச்சு; - நீர்குடித்தும்
தீர்வில்லை; சூட்டால்
தினம்தொல்லை; ஊத்துகிற
வேர்வையைத் தந்தோம்
விலை!
காட்டில் மரம்கீழ்
கயிற்றுக்கட் டில்போட்டு
நீட்டிப் படுப்பதே
நிம்மதி; - வாட்டி
எடுக்கின்ற வெய்யோன்
எரிச்ச(ல்)தரா வாறு
தடுக்கவழி இல்லா
ததால்!
ஓடைநீர் எங்கேனும்
ஓடாதா? ஓடிப்போய்
ஆடையின்றி நாம்நீந்த
ஆகாதா? – கோடைவெயில்
நுங்குக் கடங்காதா?
நூல்பிடித்து விஞ்ஞானம்
செங்கதிரைத் தீர்க்காதா
தின்று!?

சனி, 9 மே, 2026

 டெல்லிவச்ச ஆப்புக்குத்

தப்பிச் சுடலையார்
கில்லிவச்ச ஆப்பில்
கிழிஞ்சுட்டார்; - சொல்லிவச்சு
காங்கிரஸும் குத்தியதில்
கால்டவுசர் அந்திருச்சு;
போங்கிரஸால் மானமின்று
போச்சு!




 சன்னமாய்த் தூறுகிற

சாரலே! என்மனதை
என்னமாய்க் கொள்ளை
இடுகின்றாய்? – நன்னுதலாள்
தீண்டும் குளிர்ச்சியைத்
தேகம் தருகின்றாய்;
யாண்டுமிவ் வாறே
இரு!

 

அச்சனெனக் கூறிவந்தோன் ஆட்சி பறிபோக

அச்சோ வெனவிங் கழுதவர்யார்? – மெச்சும்

கலையல்ல ஈதோர் களை;நாம் வியக்க

மலையல்ல ஈதோர் மடு!