பச்சைக் கிளியைப் பவழமல்லி கைமொட்டை
வச்சிக் கடும்வேலை வாங்குவதா? - இச்சணமே
என்னோ டனுப்பிவை ஏய்!மாமா! தேவதையை
நன்றாய்க்காப் பாத்துகிறேன் நான்!
பெண்ணைச் சுமந்துபெற்றுப் பேரழகி
யாய்வளர்த்து
மண்ணைச் சுமக்கவைக்கும் மாமாவே! -
கண்டதும்என்
கண்களில் ரத்தம் கசியுதையா! பூவையின்கைப்
புண்களில் நீமருந்து போடு!
பாவம் இளவரசி; பாடாய்ப்
படுகையில்
பாவலன்என் நெஞ்சம் பதறாதா? - காவலா!
ஆவலாய்க் கேட்டேன் அவளை எனக்களிப்பாய்
நாவளம் மிக்கவன் நான்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக