வியாழன், 26 மார்ச், 2026

எலிகேசரி!

எலிகே சரிகிண்டும் என்மனைவி, இன்று

புலிகே சரிகிண்டிப் போட்டாள்; - நலிதீர

நாலு முறைவாங்கி நாந்தின்றும் என்வயிறு

காலும் நிறையலைமக் கா!

 

ஈச்ச மரமுள்ளால் ஈறுகுத்தி இன்னொருக்காக்

கூச்சம் அறத்தின்பேன் கூறுகட்டி; – வீச்சப்

புலாலுக்கே நெஞ்சில் புகலிடம் உண்டு;

ஹலால்நமக்கு ஒத்து வராது!

 

கேசரி நீபிடிச்சுக் கொண்டுவா கிண்டணும்நான்

கேசரி என்றவள்தான் கேட்டிருக்காள்; – ஆஞ்சரின்னு

நாளைக்கு வேட்டைக்கு நான்போறேன் மூனாறு

வேளைக்குத் தின்ன‍இடம் விட்டு!

 

பெயரெனக்குப் பூனை; வயிறெனக்குப் பானை;

முயன்றுரைப்பேன் நல்லெதுகை மோனை; – பயந்தெனக்கு

வெண்பா விலாச்சொறியும்; வெண்ணெய் நிலாச்சொரியும்;

உண்பதற்கே போவேன் உலா!

 

பால்நெய் தயிர்காணும் பாயாசம் காணுமென்றென்

மேல்பழியப் போடும் விசனத்தால், – கால்விரிச்சு

மல்லாக்க நான்படுத்து விட்டத்தை பாக்குறது

பொல்லாப்பில் லாப்பொழுது போக்கு!

 

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக