ஞாயிறு, 13 ஜூலை, 2014

சங்கொடுவா ராமா நுசம்!

பந்திக் கிலைபோட்டுப் பார்த்துப் பரிமாற
வந்தமர்ந் துண்ணுகிறார் வாயார –சொந்தங்கள்;
அங்குரசத் தோடே அலையா ததையென்வ
சங்கொடுவா ராமா நுசம்!

வெள்ளி முளைத்ததுபோல் வெந்தநல் நெற்சோற்றை
அள்ளியிலை இட்டாய் அழகாக –சொல்லும்படி
இங்கெனக்கு வேலை இடாதே!போய் நல்லர
சங்கொடுவா ராமா நுசம்!