நஞ்சென் றறிந்தாலும் நண்பரொடு போடுகையில்
மிஞ்சியெழும் கிக்கை விடவும்தன் - பொஞ்சாதி
பேரா தரவோடு பெக்கடிகும் போதினிலே
வாராத கிக்கு வரும்! 01
வெள்ளயர்போல் ஊற்றி விவரமாய்ச் சாப்பிட்டால்
உள்ளபடி சாராயம் உத்தமம்தான்; – கொள்ளளவைக்
கண்டு பிடித்துக் கிளாசில் அளந்தூற்றித்
தண்ணீர் கலந்து தரேன்! 02
கள்நாக்கில் பட்டுக் கலந்த மறுநிமிடம்
உள்நாக்கில் தொட்டுவை ஊறுகாய்; – சுள்ளென்று
மின்சாரம் தேகத்தை மீட்டட்டும் மென்போதை
தன்சாரம் கூட்டட்டும் சார்ந்து! 03
சொட்டுச்சொட் டாய்க்குடித்தால் சுர்ரென்று
தூக்காது;
பட்டென்று ஆளைப் படுத்தாது; – முட்டமுட்ட
மாந்துவதே குற்றம்; மகிழ்ச்சிக்குக் கோப்பையை
ஏந்துவதில் இல்லை இடர்! 04
பொதைக்குப் போட்டால் பிழைப்புச் சிரித்துவிடும்;
வாதைக்குப் போட்டால் வறுமைவரும்; – பாதைகள்
மாறாத வண்ணம் மதுவினைக் கையாண்டால்
நூறாகும் இன்ப நுகர்வு! 05
வாய்க்கும் கரத்துக்கும் வாய்க்கால்
தகராறு
வாய்க்கும் முனமெழெந்தால் வம்பில்லை; – போய்மதுவை
மூக்குமுட்ட மாந்துவதே மூர்க்கம் அடையவைக்கும்;
வாக்குக் குழறவைக்கும் வாய்! 06
இன்றைய கோட்டா இதோடு முடிகிறது
பின்னொன்று கேட்டுப் பினாத்தாதே – முன்னிரவு
மஞ்ச விளையாட்டை மட்டுப் படுத்திவிடும்
கெஞ்சாமல் சும்மா கிட! 07
வான்படுத்த வட்டநிலா வையம் இறங்கிவந்தென்
ஊன்படுத்த சேதிசொல்வேன் உள்ளறையில் – நான்கொடுத்த
பெக்கடித்த போதைவிட பெண்டாட்டிப் போதையிலே
நெக்குருகிப் போய்விடுவாய் நெஞ்சு! 08

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக