கானா பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கானா பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

கானா பாடல்! 4


அதோஅவ பின்னாலே
போனதுமனம் தன்னாலே
இதோஅதோன்னு இழுக்கடிச்சி
ஏய்ச்சாளே கண்ணாலே

அலையப்போல அலைஞ்சேனே
மெழுகப்போல உருகினனே
கையத்தந்தாக் கழன்டிடலாம்
தலையத்தந்து தவிச்சேனே
ஏதேது இளைச்சேனே
ஏமாந்து கிடந்தேனே
போதாது என்பதுபோல்
பூவைக்காய் நடந்தேனே

மலபோல நிமிர்ந்திருக்கும்
மாராப்பு மறச்சிருக்கும்
நெஞ்சோரம் இடங்கொடுத்தாள்
நெசந்தான்னு குடிபுகுந்தேன்
குடிபுகுந்த பின்னாடி
குட்டுடைந்த தென்னாடி
என்முகத்த எனக்குக்காட்ட
மறுத்ததுமேன் கண்ணாடி

எம்மனசில் அவயிருந்தா
அவமனசில் யாரிருந்தா
சொன்னாளா முன்னாடி
தெரிஞ்சென்ன பின்னாடி?
மைபூசும் கண்மேலே
பொய்பூசி நின்னாளே
பொய்யநம்பிப் பொய்யநம்பி
மெய்யாகச் செத்தேனே

செவ்வாய், 22 ஜனவரி, 2013

கானா பாடல்! 3


உன்
சுண்டுவிரல் தொட்டதுல சொர்க்கத்தப் பார்த்தேன்-கற்
கண்டுஇதழ் பட்டதுன்னா மோட்சத்தப் பார்ப்பேன்-அடி
பிச்சிப்பூவே பிஞ்சுநிலாவே
அச்சம்விட்டுக் கொஞ்சிடவாயேன்
என்உசுர உன்நிழலுக் கெழுதி வெக்கவா
உன்திசையில் என்நிழலும் விழுகுதல்லவா

ஏழுகடல் நீந்தனுமா ஏழுமலை தாண்டனுமா
தேவர்கள வெல்லனுமா சூரர்கள கொல்லனுமா
ஆயுளுக்கும் தவமிருந்து ஆண்டவன வேண்டனுமா
என்னசெஞ்சா நீகெடைப்ப? நீயேசொல்ல வேண்டுமம்மா
பூமியத்தான் இன்றுவரை நிலவுசுத்துது –இந்தக்
காதலிலே ஏன்டிஅந்த விதியும்மாறுது

பம்பரம்போல் சுத்துற பார்த்துப்பார்த்து சொக்குற
அம்பலத்து அண்டிபோல ஆட்டமாட வக்கிற
ஏன்டிஇந்த மாதிரி நீண்டதிந்த ராத்திரி
இன்னுமென்னை என்னசெய்ய எண்ணுகிறாய் சுந்தரி
என்உசுரே எட்டிநிண்ணு என்னைப்பாக்குது-அது
கண்ணால்நூறு கதைகள்பேசி நழுவி ஓடுது

புதன், 16 ஜனவரி, 2013

கானா பாடல்! 2


காலாலே கோலமிடும் கன்னிப்பொண்ணே வரியா
காலமெல்லாம் நான்சொமப்பேன் காதல் நெஞ்சத் தரியா
சில்லுன்னு சிரிப்பவளே! சிக்கன சொல்லழகி!
சில்லுன்னு சிரிப்பவளே! சிக்கன சொல்லழகி!
பூவுன்னு நான்நினச்சேன் முள்ளாகக் குத்துறியே
மேயாத மானேநீ புலிமேல பாயுறியே

ஜல்லிக்கட்டு நீதானே மல்லுக்கட்ட வந்தேனே
மல்லுக்கட்ட வந்தேனே துள்ளியோடும் பூமானே
புல்லுக்கட்டப் பாத்துப்புட்டா பசுவிடுமா செந்தேனே
மிச்சசொச்சம் இல்லாம மொத்தமும் செவந்தவளே
மொத்தமும் செவந்தவளே மச்சமும் செவந்தவளே
மச்சான ஏங்கவச்சி மனசுக்குள் ரசிப்பவளே

போதுமடி பொய்வேசம் நீயேயென் சந்தோசம்
நீயேயென் சந்தோசம் அதிலென்ன சந்தேகம்
ஒன்னோட நாஞ்சேர ஒழியட்டும் பிறதோசம்
சொக்கப்பனைக் கண்ணழகி வெட்கப்பட்டு நிக்குறியே
வெக்கப்பட்டு நிக்குறியே வேல்விழியால் தைக்குறியே
சுத்தமான மனசுக்காரி என்நெனப்பில் மொய்க்குறியே

ஆறுவக சுவையிருக்கு ஆறும்உன்னில் தானிருக்கு
ஆறும்உன்னில் தானிருக்கு ஆசப்பட்ட மாமனுக்கு
ஆசதோச என்பவளே என்னடி உன்கணக்கு?
அள்ளித்தர மனமில்லாட்டிக் கிள்ளித்தரக் கூடாதா
கிள்ளித்தரக் கூடாதா கிட்டவந்தால் ஆகாதா
அனுபவம் எனக்கில்ல சொல்லித்தரக் கூடாதா

திங்கள், 26 நவம்பர், 2012

கானா பாடல்! 1

வெண்ண தெரளயில தாழி உடைஞ்சதுபோல்
பக்கம்நீ வந்தா பேசத் தோனவில்ல
கள்ளச் சிரிப்புக் காட்டி உள்ள நெருப்ப மூட்டி
உசுரோட என்னைக் கொல்லும் ஜாதிமுல்ல
என்னாச்சி என்னாச்சி எனக்கிப்போ என்னாச்சி
என்தேசம் எங்கும் இப்போ அவளின் ஆட்சி
புண்ணாச்சி புண்ணாச்சி என்நெஞ்சம் புண்ணாச்சி
பூவுன்னு நெனச்ச ஒண்ணு முள்ளாப் போச்சி

பிறைவட்ட வானவில்லு
பெண்ணாகப் பிறந்ததேன்
வந்தெந்தன் கண்ணில்பட்டு
மறைஞ்சதேன் மறைஞ்சதேன்?
ஆறாப்பு போகயிலே மாராப்பு போட்டவளே
எட்டாப்பு போகயிலே சிட்டாப் பறந்தவளே
பத்தாப்பு போகயிலே மத்தாப்பாச் சிரிச்சவளே
முத்தாய்ப்பா என்னைப்பாத்து மொறச்சவளே
வண்ணக் குளத்துமீனே
வாடாத ரோசாப்பூவே
வருவாய்நீ என்றிருந்தேன் வரவில்லையே


எட்டுவச்சி நடக்கும்குயில்
எட்டுமாஎன் நெஞ்சத்துக்கு
பொட்டுவச்சிப் போகும்மயில்
கிட்டுமாஎன் கைகளுக்கு
நாத்தாக அவயிருந்தா காத்தத்தூது விட்டிடலாம்
உறவாக அவயிருந்தா பறவைய அனுப்பிடலாம்
கரும்பாக அவயிருந்தா எறும்பநான் அனுப்பிடுவேன்
இரும்பாக இருக்காளே நான் என்னசெய்வேன்
கண்ணே கருமணியே
காதல் கடுதாசியே
காந்தத்தைத் தூதனுப்பும் மரபில்லையே

ஞாயிறு, 4 நவம்பர், 2012

கானா பாடல்! 5


ஒத்தசடை வளவிபோட்டு
உறலுகுத்தும் பெண்மயிலே
செத்தநின்று சேதிசொல்லு கண்ணாலே –நாம
சந்திப்போம் ஓடைக்கரை பின்னாலே –நீ
குத்துகிற உலக்க –வேலி
கொம்பைப்போல இருக்க –அதில்
சுத்துகிற கொடியா –நீ
சுத்தித்தானே இருக்க –நான்
பல்லுபோன பொக்க –அடி
ஒன்னப்பாத்து சொக்க

கொட்டப்பாக்கு இடிச்சிருக்கு
கொழுந்து வெத்தலை துடைப்பதற்குக்
கையால மறைச்சிக்கிட்டு முந்தானை
கொடுத்துப்புட்டு பக்கம்நில்லு செந்தேனே –உன்
பார்வைதான் சுண்ணாம்பு –நான்
பருவக்காளை நம்பு

பித்தம்முற்றிப் போனதால
ஒத்தநரை தலைமேல
சத்தியமாப் பிறைவளரும் தானம்மா –அப்படி
வளர்ந்ததுதான் என்வழுக்கை பாரம்மா –சுற்றி
வீசும் காற்று சூறை –அதில்
விழுந்ததெந்தன் கூரை

கிட்டப் பார்வை எனக்கில்ல
தூரப் பார்வை வந்ததில்ல
மாராப்புப் போட்டிருக்கும் அம்மாடி –உன்னை
மெல்லத் திறந்து பார்ப்பதற்கே கண்ணாடி –நான்
ஸ்டைலில் ரஜினி காந்து –நீ
தொட்டா ஒட்டும் கோந்து

போகவேணும் காசிப்பக்கம்
புறப்பாடு உந்தன் கக்கம்
புறப்பாடு உந்தன் கக்கம் ஆனாக்க –என்
பூமனசு நிறையாதோ தானாக –உன்
ஊசிக் கழுத்தில் பாசி –நான்
போகவேணும் காசி

எஃகுடம்பு எனக்கிருக்கு
அஃகுநடை தான்வழக்கு
முக்காலிக்கு மூனுகாலு வேணுமடி –நான்
முக்காலும் உணர்ந்தமதி வாணனடி
இரைத்த கிணறுதான்டி –தண்ணீர்
ஊறும் கொண்டுவா தோண்டி!