பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
ஞாயிறு, 27 நவம்பர், 2011
படப்பா! 33
இருக்கிற ஒரே
இதயத்தையும் கொடுக்கிறோமே
என்பதல்ல
என் வருத்தம்
உனக்குக் கொடுப்பதற்கு
ஒரேஒரு
இதயம்தானே இருக்கிறது
என்பதுதான்
என் வருத்தமெல்லாம்
வெள்ளி, 25 நவம்பர், 2011
புதன், 23 நவம்பர், 2011
படப்பா! 31
விருப்பப் பார்வை
வீசவில்லை என்றாலும்
பரவாயில்லை
வெறுப்புப் பார்வையாவது
வீசிவிட்டுப் போ
நீ என்னைப்
பார்த்துவிட்டதாக
ஊர்முழுக்கத் தம்பட்டம்
அடிக்க வேண்டும்
எனக்கு
திங்கள், 21 நவம்பர், 2011
சனி, 19 நவம்பர், 2011
வியாழன், 17 நவம்பர், 2011
செவ்வாய், 15 நவம்பர், 2011
படப்பா! 27
சாட்சியே இல்லாமல்
கொலைசெய்வது எப்படி
எனக்
கற்றுத்தரும்
பல்கலைக் கழகம் நீ
இரண்டு விழிகளுமே
பயிற்சியாளர்கள்
ஞாயிறு, 13 நவம்பர், 2011
படப்பா! 26
நீ
வில்போல்
வளைவதில்
வில்லுக்குப் பெருமைதான்
உன்னைப்போல்
வளையமுடிவதில்லையே
என்றுதான்
வறுத்தம் கொள்கிறது
வெள்ளி, 11 நவம்பர், 2011
படப்பா! 25
சிலர்
வெட்டிப் பேசுவர்
சிலர்
வெட்டியாகப் பேசுவர்
உன்னால் மட்டுமே
முடிகிறது
(விழியால்)
வெட்டிவெட்டிப் பேச
புதன், 9 நவம்பர், 2011
திங்கள், 7 நவம்பர், 2011
படப்பா! 23
உனக்கு
இடைதான்
இல்லை என
நினைத்திருந்தேன்
இதயமும்
இல்லை போலும்
இருந்திருந்தால்
இதயத்தில் ஓரிடம்
எனக்காக
ஒதுக்கியிருக்க மாட்டாயா
சனி, 5 நவம்பர், 2011
படப்பா! 22
வடக்கு
வளர்கிறது
தெற்கு
தேய்கிறது
என்பது
எத்தனை உண்மையோ
அத்தனை உண்மை
உன்
மார்பு வளர்வதும்
இடை தேய்வதும்
படப்பா! 21
ஒய்யாரமாக
சாய்ந்து நிற்கும்
உன்னை விட்டுவிட்டு
ஒருவாறு சாய்ந்திருக்கும்
பைசா கோபுரத்தைத்
தேர்ந்தெடுத்திருக்கிறார்களே
உலக அதிசயமாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)