பிஞ்சுக்கே ரட்டே! பிரியமுள்ள பேரட்டே!
இஞ்ச்பைஇஞ்ச் நான்ரசிக்கும் ஈரெட்டே! –
பஞ்சுள்ள
சீரெட்டே! உன்வண்ணம் டீப்ரெட்டே! நானேறும்
சாரட்டே! வாய்முத்தம் தா! 01
வளரிளம் மொட்டே! வழக்கத்தை விட்டே
குளம்பியில் முக்கித்தா குட்டே! – விளம்பர
ஜில்லட்டே! போவதேன் சில்லிட்டே!? என்ராயல்
புல்லட்டே! பஞ்சணை போடு! 02
இங்கிலாந்து சாக்லெட்டே! எம்பியாடும்
பேஸ்கட்டே!
பெங்களூர் தக்காளி ஃபேஸ்கட்டே! – அங்கிள்என்
டார்கெட்டே! டாலடிக்கும் டார்ச்லைட்டே!
பள்ளியறை
டூர்போக லாமா டுடே! 03
ரைபிளுக்குள் தோட்டா ரவையிடுதல் போலவே
பைபிளுக்குள் கீதையைப் பாய்ச்சுவோம்; - வைப்இலங்கும்
பஞ்சாட் சரத்தால் பரம பிதாவுக்கு
சஞ்சாயம் செய்வோம் ஜபம்! 04
நங்கைநீ என்னேஞ்சல்; நானாடும்
பொன்னூஞ்சல்;
கங்குலிலும் தீர்த்துவைத்தாய் கண்பூஞ்சல்; - மங்கையுடல்
பொன்மஞ்சள்; பஞ்சணையில் பூங்கொஞ்சல்; கிட்டியதா
என்னஞ்சல் பூவை இடத்து!? 05
நான்தானுன் உள்ளாடை; நாயகியென் வெள்ளாடை;
ஆன்மநெஞ்சிற் கம்மணமே அல்லாடை; – ஒன்றுபட்டு
மென்றுதின்போம் மல்லாட்டை; மேய்த்திடுவோம் வெள்ளாட்டை;
இன்றிரவு என்னோ டிரு! 06
நெஞ்சத்தை ராபரி செய்தாயே பைங்கிளி;
மஞ்சத்தில் கார்த்திகையும் மார்கழி; – வஞ்சிக்குத்
தந்திடுவேன் வாய்வழி சாறுள்ள பூங்கழி;
சுந்தரிக்கு ரெட்டைச் சுழி! 07
இலக்கணம் மாறா இனிய சிரிப்பில்
பலக்கணம் வானில் பறந்தேன்; – மலக்குடலும்
பூமணம் வீசிகிற பூவையே! உன்னாலென்
கோமணம் ஆடுதடி கூத்து! 08

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக