என்னங்க!? எங்க இருக்கீங்க? வீடுவர
இன்னமும் தாமதம் ஏனுங்க? - சொன்னாக்கேள்
முக்கிய மீட்டிங்கில் மும்முரமா
நானிருக்கேன்
வக்கிறியா போனை அணைச்சு! 01
கொஞ்சம் இருங்கஏன் கோவப் படுறிங்க!?
எங்கென் றதற்கா எகுறுறிங்க? - இங்கநான்
எம்மாம் பிரச்சினையில் எக்குத்தப்
பாஇருக்கேன்
சும்மாக் கிடநீ சுருண்டு! 02
மடச்சேவல் ஒன்னு வழிமாறிப் போயி
வெடக்கோழி சேரக்கண் வேர்த்தேன்; – அடைக்கோழி
போலும் பகல்தூக்கம் போட்டால் வரும்கனவு
மேலும் பலிக்காது வே! 03
நெல்லுக்குப் பாயவே நீரில்ல; பூப்பூக்கப்
புல்லுக்குக் கொஞ்சம் பொசியணுமா? – கல்லுப்பா
ஏன்டி கரிக்குற? ஏதம் உரைக்கிற?
நான்சுத்தப் பேர்வழிதான் நம்பு! 04
நம்பித்தான் போனேனே நான்மோசம்; எத்தனைநாள்
தம்பட்டம் இந்தச் சகவாசம்? - கும்பிடறேன்
அம்மாடி! ஊரார் அலரைஉன் மண்டைக்குள்
இம்மியும் ஏத்தா திரு! 05
முன்னாலப் பாத்து முழம்போட வேணாம்நீர்
பின்னாலப் பாத்தாப் பிழைபுரியும்; – பின்னால
நிக்கிறது நீதானா? சிக்கினது
நான்தானா?
பிய்க்கிறதுக் கேனாம் பிரம்பு!? 06

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக