என்
ஊர்!
அகரம் சீகூர் எனும்பெயர்
அமைந்த
அழகிய சொர்க்கம் தான்என்ஊர்
தகரம் என்னைத் தங்கம் ஆக்கி
சாதனை படைத்த ஓர்பொன்னூர்
வடக்கினில் ஆறும் தெற்கினிலே
வகையாய் ஏரியும் இருக்கிறது
கிழக்கில் மேற்கில் அமைந்திருக்கும்
– வயல்
கிளிப்பச்சை பயிர்களை வளர்க்கிறது
திருமாங் கனிகள் சிரிக்கும்
தோப்பும்
தென்னை பனையும் அங்குண்டு
சிறுவாய் அணில்கள் சுவைக்கிற
பழத்தில்
சிறுவர் களுக்கும் பங்குண்டு!
ஆலம் விழுது தரையிறங்கி
ஊஞ்சல் ஆட உதவிடுமே
ஆரும் கேட்க ஆளில்லை – கிளைமேல்
அமர்ந்து ஒருகிளி கதைவிடுமே!
உறவைச் சொல்லி உரிமை பேசி
ஒருஆண் காதல் வலைவிரிப்பான்
அறிவைப் பேணும் ஆடவன் எவனோ
அவனைப் பெண்ணும் மணம்முடிப்பாள்
உழைப்பால் எங்கள் உடல்வடிக்கும்
வியர்வை கறைக்கும் கல்லையடா
பகிர்ந்து உண்ணும் பழக்கத்தால்
– அங்கு
பட்டினிச் சாவே இல்லையடா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக