ஏஞ்சல்யார்?
என்றே எனைக்கேட்டால் இங்குள்ள
நாஞ்சிலார் என்றேதான் நான்மொழிவேன்;
- ஊஞ்சலாய்
அன்னவர் நாவை அழகுதமிழ் ஏற்றாடல்
தென்னவர்க்குச் சொன்னேன்
தெளிந்து!
வான்போற் புகழும் வசையும்
ஒருசேரத்
தான்பெற்ற போதும் தலைக்கனக்கான்;
- தேன்பெற்ற
தீஞ்சுவை போலும் சினேகன்
திரைப்பாடல்
நாம்சுவைக்கு மாறீந்தான்
நன்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக