அகரம் அமுதன்:-
ஈமெயிலும், செல்ஃபோனும், இன்ஸ்டாக்ராம்
வந்தாலும்
பூமயிலே! நெஞ்சம் புகல்வதற்குப் - பூமியிலே
கன்னல் தமிழில் கடிதமிட்டுக் காதலைச்
சொன்னால் கிடைக்கும் சுகம்!
ஏடி வரதராஜன்:-
ஆக்கியதை யெல்லாமும் ஆறவைக்கும்
அக்கடிதம்
தூக்கிப்போம் நேரமெலாம் தூரமாக; --- மாக்கணிணி
வாய்விட்டுக் காதல் வரிவிழியால்
சொல்லும்முன்
பாய்விரிக்கும் நண்பா பசிக்கு!
அகரம் அமுதன்:-
காக்கவைத்துச் சேரும் கடிதம்போல்
பேரவஸ்தை,
ஏக்கம் தரவலதோ இக்கணினி? - தூக்கம்
தொலைக்கவைக்கும்;
மேனி இளைக்கவைக்கும்; நெஞ்சை
மலைக்கவைக்கு(ம்) அப்பா மடல்!
ஏடி வரதராஜன்:-
ஊடல் பிரித்தால் உடல்சேருங் கால(ம்)வரை
தேடல் மனத்தீ தெரியாதா? -- கூடலுக்குத்
தட்டிவிட்ட ஓர்நொடியில் தாவிக்
குறுஞ்செய்தி
ஒட்டவைக்கும் அன்பை உடன்!
அகரம் அமுதன்:-
குறுஞ்செய்தி காதல் குறையாயுள் கொண்ட
வெறுஞ்செய்தி யாகி விலகும்; - நறுஞ்செய்தி
ஏந்திவரும் கண்ணீர் எழுத்துமடற் காதலது
நீந்திவரும் ஊர்ப்பகைமுன் நின்று!
ஏடி வரதராஜன்:-
சுட்டப் பலகாரஞ் சூடாறும்
முன்இணையம்
பட்டென்று செய்திப் பகர்ந்துவிடும் --
கெட்டமடல்
ஊர்விட்டூர் சுற்றி உனைநாடும் முன்நாறி
நீர்விட்டுப் போகும் நினை!
அகரம் அமுதன்:-
காத்திருத்தல் இன்பம்; கடிதம் வரும் வரையில்
வேர்த்திருத்தல் இன்பம் விழியோரம்; - பூத்தொடுத்தாற்
பொல்எழுத்துக் கோர்த்த புதுமடல் கைசேரக்
அகரம் அமுதன்:-
ஈமெயிலும், செல்ஃபோனும், இன்ஸ்டாக்ராம் வந்தாலும்
பூமயிலே! நெஞ்சம் புகல்வதற்குப் -
பூமியிலே
கன்னல் தமிழில் கடிதமிட்டுக்
காதலைச்
சொன்னால் கிடைக்கும் சுகம்!
ஏடி வரதராஜன்:-
ஆக்கியதை யெல்லாமும் ஆறவைக்கும் அக்கடிதம்
தூக்கிப்போம் நேரமெலாம் தூரமாக; --- மாக்கணிணி
வாய்விட்டுக் காதல் வரிவிழியால் சொல்லும்முன்
பாய்விரிக்கும் நண்பா பசிக்கு!
அகரம் அமுதன்:-
காக்கவைத்துச் சேரும் கடிதம்போல் பேரவஸ்தை,
ஏக்கம் தரவலதோ இக்கணினி? - தூக்கம்
தொலைக்கவைக்கும்; மேனி இளைக்கவைக்கும்; நெஞ்சை
மலைக்கவைக்கு(ம்) அப்பா மடல்!
ஏடி வரதராஜன்:-
ஊடல் பிரித்தால் உடல்சேருங்
கால(ம்)வரை
தேடல் மனத்தீ தெரியாதா? -- கூடலுக்குத்
தட்டிவிட்ட ஓர்நொடியில் தாவிக் குறுஞ்செய்தி
ஒட்டவைக்கும் அன்பை உடன்!
அகரம் அமுதன்:-
குறுஞ்செய்தி காதல் குறையாயுள் கொண்ட
வெறுஞ்செய்தி யாகி விலகும்; - நறுஞ்செய்தி
ஏந்திவரும் கண்ணீர் எழுத்துமடற் காதலது
நீந்திவரும் ஊர்ப்பகைமுன் நின்று!
ஏடி வரதராஜன்:-
சுட்டப் பலகாரஞ் சூடாறும் முன்இணையம்
பட்டென்று செய்திப் பகர்ந்துவிடும் -- கெட்டமடல்
ஊர்விட்டூர் சுற்றி உனைநாடும் முன்நாறி
நீர்விட்டுப் போகும் நினை!
அகரம் அமுதன்:-
காத்திருத்தல் இன்பம்; கடிதம் வரும்
வரையில்
வேர்த்திருத்தல் இன்பம் விழியோரம்; - பூத்தொடுத்தாற்
பொல்எழுத்துக் கோர்த்த புதுமடல் கைசேரக்
கால்நிற்கு மோதரையில் காண்!
ஏடி வரதராஜன்:-
போகும் குரல்செய்தி பொங்கவைக்கும் நெஞ்சத்தை;
ஆகுமோ காகிதஞ்சேர் அஞ்சலினால்? --- வேகும்
மனத்தை உடனணைத்தல் மாண்பு; கடிதம்
கனத்தைக் கொடுக்கின்ற கல்!
அகரம் அமுதன்:-
கோர்வையாய் நான்கு சொல் கூறவும் ஆகாமல்
பார்வையால் பேசப் பயன்தெரியும்; - ஊர்க்கதைகள்
அல்லெல்லாம் கூடி அளக்கின்ற உங்களது
'செல்'லாலே காதெல்லாம் சீழ்!
ஏடி வரதராஜன்:-
ஊர்க்கதைகள் அன்றி உலகக் கதையெல்லாம்
வார்க்கும்"செல் பேசி வகைவகையாய்ப்; --- பார்க்கின்ற
கண்ணோ(டு) உருகண்டும், கால்நடந்தும், பேசுதற்கு
உன்னாலும் ஆமோ உரை?
அகரம் அமுதன்:-
ஆன்லைனில் காதல் அலப்பறைகள் எல்லாமும்
வீண்வினையில் தானே முடிகிறது; - நான் சொல்லும்
காகிதத் தூதுவிடு காதலே கண்ணியத்தைச்
சாகும் வரைகாக்கும் சார்ந்து!
ஏடி வரதராஜன்:-
எல்லாம் சரியமுதா; இந்த
மடல்வரைந்த(து)
உள்ளபடி யாரென்று உளம்கேட்கும்; -- கள்ளமற
வான்செயற்கைக் கோள்வழியே வாரும் இணையமடல்
நான்தான் எனஉரைக்கும் நன்கு!
அகரம் அமுதன்:-
ஃபேக்ஐடி பற்றிநான் பேசவா? பேசினால்
லாக்ஆவாய் என்னிடத்தில் லாவகமாய்; - யோக்கியன்போல்
உள்பெட்டி தன்னில் உணர்ச்சியைத் தூண்டுகிற
கள்ளரை நானறிவேன் காண்!
ஏடி வரதராஜன்:-
எல்லா துறையும் இதுபோல் திருட்டிருக்கும்
இல்லையென நானும் இயம்பவில்லை ---
சொல்லக்கேள்
உள்ள தொழில்நுட்பம் உண்மை தனையழகாய்ப்
புள்ளிவைத்துக் காட்டும் புரி!
அகரம் அமுதன்:-
சாமத்தில் போர்வைக்குள் சாட்டிங்கில்
மேய்வதெல்லாம்
காமத்தைத் தூண்டும் கடைசியில்; - பூமெத்தைத்
தூக்கக் கனவோடும் தொட்டுவிடா மற்பேசி
ஏக்கத்தில் வாழ்வ(து) எழில்!
ஏடி வரதராஜன்:-
சாட்டிங்கில் காதல் சனித்தால் உடன்மனங்கள்
மீட்டிங்கில் கண்டு மிகைந்தினிக்கும் ---
லேட்டாகும்
உங்கள் மடல்தான் உளத்தில் வலிகூட்டும்
எங்கள் இணையம் இனிப்பு!
அகரம் அமுதன்:-
சாட்டிங்கில் காதல் சனித்ததென்றாய்; பின்பந்த
மீட்டிங்கோ டேன்நிறுத்தி விட்டாய் நீ? - டேட்டிங்கும்
போவதைச் சொல்வாய்; புலனடக்கம் இல்லாமல்
மேய்வதைச் சொல்வாய் விரைந்து!
ஏடி வரதராஜன்:-
பார்த்துப் பிடித்திருந்தால் பற்றும்
இருநெஞ்சும்
ஈர்த்திணைவ தெங்கும் இயல்பாகும் --
சேர்த்துவைக்க
உந்தியுந்தி அஞ்சல் உனையடையும் முன்னாகந்
தந்துவிட்டால் என்ன தவறு?
அகரம் அமுதன்:-
எண்ணத்தைத் தாளில் எழுதி எடுத்துப் போய்ப்
பெண்ணிடத்தில் நீட்டல் பெரும்பாடு; - பெண்ணவளும்
வாங்குவதா? நீங்குவதா? வாடிநிற்பாள்; இந்த சுகம்
ஆங்கில்லை ஆன்லைனில் ஆம்!
ஏடி வரதராஜன்:-
வைத்த ஒலியமைப்பில் வந்தால் அழைப்படடா!
தைக்க மலர்க்கணைகள் தாவிவரும் ---
கைக்குள்
அதிர்கின்ற செல்பேசி அன்பை உலுக்கி
உதிர்க்குமையா தேன்மழையை உள்!
அகரம் அமுதன்:-
காணும் கடிதத்தில் கையெழுத்தும் ஓவியமே;
ஆணும் அணங்குமென்சொல் ஆதரிப்பர்; - பேணும்உம்
மென்பேசி தன்னிலிது மிஸ்ஸிங்; மடல்வரைந்து
தன்காதல் சொல்லல் தகவு!
ஏடி வரதராஜன்:-
ஓவியமாய் அஞ்சல் உயர்ந்திடினுந்
தன்படத்தைக்
காவியமாய்க் காட்டும் கவினிணையம்; -- தாவிவரும்
நெஞ்சத்தின் தேவை நிஜம்தான்; அதுதவறின்
கஞ்சம் வடிக்குமையா கண்!
அகரம் அமுதன்:-
பிரிவின் துயரால் பெருகிவரும் கண்ணீர்
வரியின் சிலவெழுத்தை மாய்க்கும்; - அரியவர்தம்
அன்பின் மிகுதியிது; அங்கில்லை
இஃதேபோல்
நின்று நிலைக்கும் நிகழ்வு!
ஏடி வரதராஜன்:-
தொடுதிரையைப் பார்த்துத் துயர்மறக்கும்
காட்சி
விடும்மடலில் எங்கே விவரி? -- கடுங்கோபம்
கொண்டாலும் புண்ணைக் குறுஞ்செய்தி
ஆற்றுதல்போல்
உண்டாசொல் அஞ்சலிலே ஓர்ந்து!
அகரம் அமுதன்:-
மொழிநுட்பம் காட்ட முனைகிறாய்; இந்தத்
தொழில்நுட்பம் தீராத தொல்லை; - எழில்நுட்பம்
எல்லாம் அறிந்தஎங்கள் ஏட்டுமடல் இந்நாளில்
இல்லாமற் செய்த(து) இயைந்து!
ஏடி வரதராஜன்:-
தொல்லையெல்லாம் இல்லை அமுதா!
தொழில்நுட்பம்
எல்லையில்லா சேவை இசைந்தளிக்கும்; --- இல்லையில்லை....
என்முயலின் கால்கள்மூன்(று) என்றால் உமகினிநான்
என்சொல்லக் கூடும் இயம்பு?
அகரம் அமுதன்:-
ஆண்ட்ராய்டு ஃபோனால் அவதிப் படும்இளைஞர்
மீண்டு வரவே விளம்பினேன்; - வேண்டாம்இச்
சாக்கடையே போதுமெனச் சாற்றுகிறாய்; வாசமிக்க
பூக்கடைவேண் டாமென்றால் போ!
ஏடி வரதராஜன்:-
வரிவரியாய் அஞ்சல்தான் வாழ்வினிமை என்று
புரியாமல் பேசுகிறாய் பொய்யை; --- சரிசரிவா!
பட்டறிவு கொண்டவர்கள் பார்க்கட்டும்; ஆங்கவர்கள்
திட்டமிட்டுச் சொல்வார்கள் தீர்ப்பு!
அகரம் அமுதன்:-
வாதத்தை வைத்தோம்; வழக்கை அறிஞர்தம்
பாதத்தில் வைத்தோம் பதிலுக்காய்; - நாத
வடிவான தேவி நலம்புரிவாள்; நீஉன்
பிடிவாதம் விட்டுப் பிடி!
14/8/2020