மாலை
நிலாப்பொழுது; மங்கை உனதருகில்;
காலை வரையில்நாம் கண்விழிப்போம்;
- சேலைக்குள்
இன்பத்தேள் கொட்டும் எழிலை
எனக்குரைத்(து)
இன்பத்தேன் வெண்பா எழுது!
நெஞ்சுப் பொதிகள்; நெலியும்
இடைசுமக்கும்
பஞ்சுப் பொதிகள்; படர்ந்ததன்மேல்
– கொஞ்சித்
துயிலக் கொடுத்துவைத்தோய்!
தோட்டுக் கலந்தழிப்பாய்
மயிலின் மனத்து மயல்!
கன்னம் கடித்துக் கனியிதழ்த்
தேன்குடித்துப்
பின்னம் இளநீர் பெரிதுண்க;
- முன்னம்
அசலைப் பருகி அனுதினமும்
ஆங்கே
பசலை வளர்ந்த படி!
கடைக்கண் வழியுன் கவினைப்
பருகி
உடைக்கண் எனைநான் ஒளிக்க;
- இடைக்கண்
அடைக்கலம் தேடியுன் ஐவிரல்
தாவும்
படைக்கலம் போலும் பறந்து!
நோகும் எனவெண்ணி நோகாமல்
சிற்றிடை
தாகம் தணிக்கத் தலைப்படா(து)
- ஆகம்
நொறுக்கி எடுத்துமயல் நோய்தீர்த்து
மீண்டும்
பொறுக்கித் தொடுத்துப் புதுக்கு!
வள்ளல்நான் வந்து வழங்கும்
பொழுதும்நீ
கொள்ளல் விடுத்துக் குறிவைத்துக்
– கொள்ளை
அடிக்கத் துடிக்கும் அழகை
வியந்து
நடித்துச் சிவக்கும் நகில்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக