பல்லவி
:-
சாமி செத்துப் போச்சா?
வானம் இத்துப் போச்சா?
அப்பாவுக் கென்னானது? – அட
என்நெஞ்சம் புண்ணானது – இது
மெய்தானா? – வெறும் பொய்தானா?
– இனி
நான்என்னாவேன்? – இது மெய்தான்
என்றே ஆனா(ல்)?
சரணம் :- 1
ஒம்பாச நேசம் ஒங்கோப தாபம்
எண்ணாத
நாளேது? – நீ
இல்லாம
நானேது?
நீசெஞ்ச தியாகம் நீபட்ட பாடு
எல்லாம்என்
நெஞ்சோடு – இனி
என்னாகும்
என்பாடு?
வெண்ணிலா தேயலாம் வானம் தேயுமா?
கண்கள மூடினால் காட்சி தோன்றுமா?
உனக்கேதும் ஆனா
நான்ஆவேன் வீணா!
சரணம் :- 2
ஒந்தேகம் வாட்டும் எஞ்சோகம்
கூட்டும்
நோயின்று
தீராதா? – அந்த
நோய்க்கேநோய்
வாராதா?
ஒந்தோளில் ஏறி ஊர்கோலம் போன
அந்நாளும் அரும்பாதா? – அந்த
சந்தோஷம் திரும்பாதா?
சாமியே வாடினா யாரு தஞ்சம்?
பூமியே ஆடினா ஏது மிஞ்சும்?
துடுப்பில்லா ஓடம்
கரையெங்கே
சேரும்?
சரணம் :- 3
கம்பீர மாக நான்பார்த்த அப்பா
கம்பூன்றும்
வயசாச்சா? – அந்த
கம்பீரம்
பழசாச்சா?
ஒன்னோட ஆச நீவச்ச மீச
நரையின்று
விழுந்தாச்சா? – தோலில்
சுருக்கங்கள்
சூழ்ந்தாச்சா?
மன்மத தேவன மிஞ்சப் பார்க்கும்
நீவரும் தோரண யார்க்கு வாய்க்கும்?
விழுந்தாயா நோய்க்கை?
இதுதானா வாழ்க்கை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக