அண்ணன் விக்டர்தாஸ் அவர்களின், 'சக்தி எனத்தொடங்கி சிவம்' எனமுடியும் வெண்பாக்கள்கண்டு வாழ்த்தியொரு வெண்பா நான்செய்ததும்
பதிலுக்கவர் ஒருவெண்பா செய்ததும்.... 11-2017
நான் :-
வெண்பா வடிவே! விரசத் தமிழ்செய்யா
ஒண்பா விடிவே! உனதரும் -
பண்பாலென்
உள்ளங் கவர்ந்த உயர்கவியே!
உன்தமிழ்
வெள்ளங் கலந்தேன் வியந்து!
அவர் :-
வெண்பா அரங்கில் விளையாடும்
வித்தகனே
அன்பால் புகழுகிறாய் ஆகட்டும்-உன்பாவில்
உள்ளம் கரைந்தவன்நான் உள்ளே
உறைந்தவன்நான்
துள்ளுகிறேன் உன்அன்பைத் துய்த்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக