A.T. Varatharajan
புக்கும் மரணத்தைப் போய்வர வேற்றுகண்
சொக்குந்தூக் கத்தைச் சுவையாக்கித் --
துக்கக்
களையெடுக்கப் பற்றி கருகியே தொற்றி
விளையாடும் ஆறா விரல்.
ஊதுவதில் உள்ளம் உவப்பவனே! ஏமனவன்
தூதுவனாம் வெண்சுருள் தூக்கியெறி; - தீதுணர்ந்தும்
பற்றுவைக்கும் உன்னுள் பலநாள் மறைந்திருந்து
புற்றுவைக்கு மன்றோ புகை!!!
A.T. Varatharajan:-
பற்றி எரிந்துப் பழகும் பொழுதெல்லாம்
கற்றதினும் மேலோங்கும் கற்பனைகள் --
கற்றகவிக்
கோவாக்கும் செந்தமிழைக் கோர்த்தே
அணிசேர்த்துப்
பாவாக்கும் இந்தப் புகை.
அகரம் அமுதன்:-
சட்டியில் உள்ளதுதான் சட்டுவத்தில்
என்றுணர்ந்து
விட்டொழிக்க வேண்டுமடா வெண்சுருளை; - மட்டின்றிக்
கற்பனைகள் மேவுவதாய்க் காதோரம்
பூச்சுற்றல்
விற்பனனில் வேலையோ? விள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக