வெள்ளி, 3 ஜூலை, 2026

28 ஜூன், 2021

 

அகரம் அமுதன்:-

 

பாவை நடையேஎன் பாநடை; கார்குழற்

காவைப் பொருத்தென் கவித்துவம்; - பூவை

இடைவந் தருளும் இடைச்சொல்; இரண்டு

கடைக்கண் தருமே கரு!

 

Anbuvalli Thangavelan:-

 

பெண்பாவைக் காகவோ வெண்பாப் பெருமிதங்கள்?

கண்பாவும்‌ எங்கெங்கும் காப்பியமோ? - நண்பாகேள்

பாவையர்க்காய்ப்‌ பாவைப் படித்தார் பலபேர்கள்

தேவையா சாமி நீ செப்பு!

 

அகரம் அமுதன் :-

 

செப்பென்று கேட்டதனால் செப்புகிறேன்; சாப்பாட்டில்

உப்பின்றி இங்கே உருசியுண்டா? - இப்புவியில்

பெண்ணின்றி இல்லை பெரும்போரும் காவியமும்

உண்மை அறிந்திதை ஒப்பு!

 

28 ஜூன், 2021 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக