அகரம் அமுதன்:-
கலைதொட்ட மேனி கவின்இரட்டிப் பாகும்;
அலைதொட்டால் கால்அழுக்(கு) ஆமோ? - சிலையொத்த
சின்னப்பெண் உன்பாதம் சேரக் கிடைத்திடும்
என்னதவம் செய்தால் இடம்!
Anbuvalli Thangavelan:-
ஐஅந்தச் சேலை அழகா இருக்கிறதே
நெய்தவன் யாரடியோ நீயிந்த - நெய்தல்
அலைநின்றால் மீன்நாறும் அவ்வூரார் பின்னை
விலைபேச மாட்டாரோ வேர்த்து!
அகரம் அமுதன்:-
மாலையைச் சூடி மணவாட்டி ஆக்கிவிடக்
காலைமுதல் நிற்கின்றேன் கால்கடுக்க; - வாலைமீன்
போல்விலை பேசிப் பொசுக்கெனயார்
வாங்கவந்தார்?
வால்நறுக்கும் என்னுடை வாள்!
anbuvalli thangavelan:-
கையில் அழுக்கொட்டாக் கண்மணிகள்
நம்மனையில்
வெய்யில் பொறுப்பாரோ வேலப்பா - பையவே
பார்த்தோமா போனோமா என்றிருரந்தால்
தொல்லையிலை
யார்க்கும் பொதுப்புத்தி யீது!
அகரம் அமுதன்:-
உண்மையை நன்றாய் உரைத்தீர்கள்; பேரழகுப்
பெண்மை நமக்குப் பெருஞ்சுமையே; - வண்ணமயில்
தேக வலங்காரத் தேவையைத் தீர்ப்பதற்கே
சாகணும் நாமுழைத்துத் தான்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக