அகரம் அமுதன்:-
மொடாக்குடி காரன்நான்
முன்புவெண்பாக் கள்ளை
விடாப்பிடியாய் மாந்தி
விழுந்தேன் - தடாலடியாய்ச்
சாப்பிடுவ தில்லையென்று
சத்தியம் பண்ணிவிட்டேன்
'ஓப்பன்தி பாட்டிலெ'ன்போன்
ஓடு!
ஏடி வரதராசன்:-
சிக்கன் பிரியாணி
சில்லுன்னு கிங்பிஷ்ஷர்
"எக்"ஆம்லேட்
பெப்பர்
எலாபிரேட்டா -- உக்காந்தா
ஒண்ணுரெண்டு பீரடிக்க
ஓய்விருந்தா வாஅமுதா
என்னையா யோசனை
இ ம்ம்ம்ம்........
அகரம் அமுதன்:-
கேப்விட்டா நல்லது
கேப்பே விடாமலெனைக்
கூப்பிட்டா வந்துன்னைக்
கொன்னுடுவேன்; -
சாப்பிட்டா
எங்க குலசாமிக்(கு)
ஆகா(து) அதவிடுநீ
அங்ககூல் பீர்தானே
ஆங்!!!!
ஏடி வரதராசன்:-
ஆள்வந்தா போதும்
அமுதா...
கிடைச்சிருக்கு
கூல்பீர்தான் ஒண்ணும்
குறையில்ல -- சீல்ஓப்பன்
பண்ணாம மில்ட்ரீரம்
பார்சலும் வச்சிருக்கேன்
என்னென்ன வேணுமோ
ஏத்து ....
அகரம் அமுதன்:-
மூடில்ல; வேணாம்
முடியாது; சாராயம்
பீடில்ல; சாப்பிட்டா
பேர்கெடும்; - கேடில்ல
சன்டேல மட்டும்
சரக்கடிப்போம்; கொஞ்சமிப்போ
தொண்டை நனைப்போம்
தொற!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக