அம்மாவிடம்
இளைய மகள் : --
।
அக்கா பொறந்ததும்நீ
அப்பாட்ட கேட்டதென்ன?
இக்காலம் ஏதுமில்லா
ஏழைக்குத் -- தக்கபடி
நான்பெத்த(து) ஒண்ணு
நமக்கின்னும் வேணுன்னா
ஆண்பிள்ளை கேட்டியா
அன்று?
।
அம்மா ; ---
।
ஒண்ணுமே கேக்கலம்மா;
ஓஞ்சி களச்சிவந்தேன்
கண்ணுரெண்டும் மூடி
களைப்பாறி --- தண்ணியில
நின்னு குளிச்சபடி
நீலவண்ணப் பூபோட்டத்
துண்டுதான் கேட்டேன்
தொறந்து!
====
அப்பாவிடம் மகள்!
கேட்டதைத் தாராமல்
கேட்காத வேறோன்றை
நீட்டல்தான் அப்பாஉன்
நேர்மையோ? - காட்டியஉன்
அன்பிற்குப் பாவம்என்
அன்னையன்றோ அல்லலுற்றாள்!
உன்பதில்தான் என்ன?
உரை!
பாவப்பட்ட அப்பா!
துண்டெடுத்துப் போனயென்ன
சும்மான்னு விட்டாளா?
கண்டிழுத்தா என்விரலக்
கையோட - "துண்டெடுத்து
நீயே துவட்டுன்னா(ள்);
நீயே உடுத்துன்னா(ள்);
வாயேன்"னா(ள்) வீழ்ந்தேனம்
மா!
முன்னிரு வெண்பா - வரதன்.
பின்னிரு வெண்பா - அமுதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக