வெள்ளி, 3 ஜூலை, 2026

24 ஜூன், 2021

 

24 ஜூன், 2021 

 

அகரம் அமுதன்:-

சாறு தனைப்பிழிந்து சட்டி நிறைச்சிடலாம்

யாரு வரீங்க எனக்குதவ? - கூறிவிட்டேன்

கன்னல் கரும்பில்தான் கைவைக்க வேண்டும்என்

கன்னத்தில் அல்ல களித்து!

 

அகரம் அமுதன்:-

என்னப்பா ஏடிவி! எங்கே உனைக்காணும்?

கன்னல் பிழியக் கசக்கிறதா? - சொன்னபணி

செய்யத்தான் தெம்பிலையா? சென்றது வேறெங்கே?

ஐய!நீ எல்லாம்ஓர் ஆள்!🤪🤪

 

இம்மானுவேல்:-

கரும்பிரண்டை ஒன்றாகக் காணுங்கால் எந்த

எறும்புக்கும் வாராதோ  ஈர்ப்பு – நறும்பா

அமுதும் வரதும் அடித்தாடும் ஆட்டம்

எமக்கும் அளிக்காதோ  ஏற்பு

 

அகரம் அமுதன்:-

பிழியவாள் இன்றிப் பெரிதென் துயரம்

விழிநீர் வடித்து வெதும்பும் - பழிசுமந்து

கொண்டானே அந்தக் குசும்பன் வரதனைக்

கண்டா வரச்சொல்லுங் க!

 

இம்மானுவேல்:-

வரதையா வாங்கையா வாய்ப்பிங்கே முன்னால்

பெரிதையா நம்மமுதர் பெய்தார் – அரிதையா

இக்கரும்பு மீளாதாம் இப்போதே கைப்பார்ப்பீர்

செக்கெடுத்(து) இவ்விடம் சேர்ந்து!

 

அகரம் அமுதன்:-

தூதுரைத்த பின்னும் துடித்து வராதவனை

ஏதுரைத்து என்ன? இனியிந்த - மாதிளைத்த

சேதிகேட்டு மாலையில் சேர வருவானேல்

வீதியில் நிற்கவைப்பேன் வெந்து!

 

ஜாய் சத்தியா:-

வேகம்ஏன் பெண்ணே? விடுவிடு கோபத்தைச்

சோகம் தவிர்ப்பாய்நீ  சொல்கிறேன் உன்னவரை

எங்கேனும் பார்த்தாலுன்  ஏக்கம் தனையுரைத்தே

இங்குவர வைப்பேன் இரு.

 

அகரம் அமுதன்:-

உள்ள கரும்பை  உடனே சுவைத்துவிட்டால்

நல்லதென்ப தாலன்றோ நானழைத்தேன்; - இல்லையெனில்

கன்னலும் காய்ந்துவிடும் கட்டெறும்பும் மேய்ந்துவிடும்

என்னநான் சொல்ல இனி!

 

வரதன்:-

நாலஞ்சி பொண்ணிருந்தா நானும் எனக்கொண்ணா

ஆல கரும்போட அளிடுவேன் -- சேலகட்டி

ஒத்தப்பூ வாட்டம் ஒருத்திதானே நிக்கிறா

இத்தன பேரும்  எதுக்கு.?

 

அகரம் அமுதன்:-

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்க;

டேஸ்ட்டா இருக்குமிந்த செங்கரும்பு; - லாஸ்ட்டாநான்

கேட்குறேன் 'சாறு பிழிய வர,இல்ல'

நாட்டிப் பதிலை நட!

 

அகரம் அமுதன்:-

இருப்ப திருகரும்பு; இங்குள்ளீர் மூவர்;

தருக்கம் எதற்கு? தவிர்ப்பீர்; - ஒருபோட்டி

வைப்பேன் ஜெயிப்பவர் வந்தென் னுடன்கரும்பை

சப்புக்கொட் டித்தினலாம் சார்ந்து!

 

வரதன்:-

தாருமையா போட்டி தனிச்சொல்லா? ஈற்றடியா?

சீருக்குள் மோக சிலுசிலுப்பா? -- நீருக்குள்

கண்ணைத் திறந்துமுங்கிக் காத்திருக்க வேண்டுமா

என்னையா போட்டி இயம்பு!

 

அகரம் அமுதன்:-

விடுகதை சொல்வேன் விடைசொல்ல வேண்டும்

விடுகணை போலும் விரைவாய்; - சடுதியில்

முந்தித் தகுந்தபதில் முன்வைப்போன் என்னோடு

குந்தி அருந்தலாம் கூழ்!*

 

கூழ் - கருப்பஞ்சாறு எனக்கொள்க.

 

அகரம் அமுதன்:-

விடுகதை 1!

ஓடுகாலி உள்ளம் உடன்பட் டிரண்டறக்

கூடுவாள் நித்தம் குறைவின்றி; - ஈடுகொடுத்(து)

ஓர்நாளில் ரெண்டுமுறை உச்சம்காண் பான்கணவன்

ஆர்இவர்கள் சொல்நீ அறிந்து!

 

இம்மானுவேல்:-

ஓடுகாலி முள்பெரிதாம் ஒத்திசையும் முள்சிறிதாம்

ஆடுகளத் தில்முட்டி அன்பாகப்பாடிப்

படியவைத்துக் கூடுமே பகலிராப் போதில்

கடிகாரம் நல்விடையாய்க்  காண்!

 

சுந்தர ராசன்:-

சுத்துங் கடிகாரம்  சுத்திவரும் போததுல

நத்தும் பெருமுள்ளோ நல்மனைவி! - சுத்திவந்து

பன்னெண்டாம் உச்சமதைப் பத்தும் சிறுமுள்தான்

கொண்டவனாம் என்றுவிடை  கூறு!

 

அகரம் அமுதன்:-

விடுகதை 2!

வாய்நுழையும்; நன்றாய் வளருமே கைபோட்டால்;

தேய்த்துத் தணிவர் திரைமறைவில்; - ஓய்வின்றிக்

கஸ்டப்பட் டேநாம் கருத்தாய் வளர்த்துவைத்தால்

இஸ்டத்துக் கேய்ப்பர்; இவை?

 

அகரம் அமுதன்:-

நெய்யிட்டாற் போல்நுழையும்  நின்"பேர்" பிறர்வாயில்;

கையிட்ட தால்வளரும் "கையெழுத்தே"; - மெய்யாய்ப்

புறம்பேசித் தேய்ப்பர்"பேர்" பூத்த"பேர்" மொத்தம்

அறத்திரண்டு நிற்பர் அணி!

 

விளக்கம்:-

பெயரைக் குறிக்கிறது இவ்வெண்பா. (கையெழுத்தாய் இடுவதும் பெயரைத் தானே)

24 ஜூன், 2021 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக