அகரம் அமுதன்:-
சிக்குப் பிடித்தமுடி சீக்கால் தளர்ந்தநடை
பொக்கைவாய் மூப்பால் பொசிந்தவுரு -
சக்கைதான்
தேமாங் கனியில்லை கன்னங்கள் ஆனாலும்
ஆமாம் அவளே அழகு!
வரதன்:-
அட பாவி இந்த போட்டோவோட வேல்யூ தெரியாம
இப்படி யா எழுதுவாங்க?
அகரம் அமுதன்:-
கண்டெடுக்கும் முன்புகல் கண்டெடுத்த
பின்வைரம்
வண்டுமிழ்ந்த எச்சில் வளமைத்தேன்; - கண்டெடுத்த
ஆளால் பெருமையா? அந்த பொருளாலா?
நீளா விடையைச்சொல் நீ!
வரதன்:-
வகைவகையாய்ப் பண்ணெழுதி வார்க்கும்
கலையாய்ப்
புகைப்படமும் ஒன்றே புரிவாய் --
நகைப்போடோர்
ஆட்சியைப்பா ராட்டல் அகப்படியே; நீயந்தக்
காட்சியைப் பாராட்டு கண்டு.
அகரம் அமுதன்:-
பாட்டுகள் பாடிப் பரவசத்தால் ஆடிப்பா
ராட்டுகள் கூறும் ரகமிலைநான்; - ஆட்சியர்
சென்னியில் குட்டிச் சிறுமை களைகின்ற
திண்ணிய பாவலன் தேர்!
வரதன்:-
திண்ணிய பாவலனே! தீட்டியவெண் பாவில்நல்
நுண்ணிய வாசம் நுகர்ந்திட்டேன் --- எண்ணி
சிறுமை உரைக்குங்கால் சீராட்சி தன்னில்
அறுமையும் உள்ளது அறி.
அகரம் அமுதன்:-
தேர்வெழுதும் போதே திருத்திமதிப்
பெண்வழங்கப்
பார்எனக் கூறல் பகுத்தறிவா!? - ஓர்வருடம்
போகட்டும் பார்க்கலாம்; போரில் கொரோனாவைச்
சாகடித்தால் பார்க்கலாம் சார்ந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக