ஏடி வரதராசன்:-
என்னம்மா அங்க சத்தம்
இதுவரைக்கும் கேக்கு தேம்மா
ஒன்னாருந் திட்டிட் டானா
ஒரண்டையும இழுத்துட் டானா
சின்னதா கெட்ட வார்த்த
சேத்தொன்ன சொல்லிட் டானா
என்னன்னு சொன்னா தானே
ஏதாச்சும் செய்வேன் நானே!
அகரம் அமுதன்:-
பேசிக்கிட் டிருக்கோம் மாமா!
பெரச்சன ஒன்னு மில்ல;
ஏசிப்புட் டொருத்தன் போக
இளப்பமா? விடுவே னாநான்?
பூசிநான் மொழுக வில்ல
பொய்யேதும் சொல்ல வில்ல;
வீசிநீ விலாஒ டிக்க
விறகோடு வரவேண் டாமே!
ஏடி வரதராசன்:-
என்னம்மா இதஎங் கிட்ட
இவ்வளவு லேட்டா சொல்ர
கொண்டாநீ அவன இங்க
கொத்தாவே அருத்து மூணும்
சுண்டக்கா வத்த லாட்டம்
சுடச்சுட காய வச்சி
அண்டங்காக் காவுந் திங்க
அத்தனையும் வீசி போவோம்!
அகரம் அமுதன்:-
சுண்டக்கா மேட்ட ருக்கே
சும்மாநீ இருந்தி டாம
வெண்டக்கா வெரலொ டிக்க
வேகமா வருவா யின்னா
துண்டக்கா ணும்மே இன்னுந்
துணியக்கா ணும்மே இன்னுஞ்
சண்டைக்கே வரல யின்னுஞ்
சமாதானம் பேசு வானே!
ஏடி வரதராசன்:-
வந்தாலும் என்ன இப்போ
வரலைன்னா என்ன இப்போ
அந்தாளு யாரு ஒன்ன
அசிங்கமா பேசிப் போக?
இந்தாவா ரேனே நானும்
எவந்தான்னு பேர சொல்லு
அந்தாளா நானா இன்னு
அப்புறமா நீயும் பாரு!
அகரம் அமுதன்:-
அட!கூட நீயி ருக்க
அடிக்கஒ ருத்தன் வந்தா
தொடக்கூட விடமாட் டேன்னு
தெரியாதா? தொட்டுப் புட்டா
விடக்கூட மாட்டே யின்னு
வெளங்காதா? கொல்லிக் கண்ணு
படக்கூட விடமாட் டேன்னு
புரியாதா? விட்டுத் தள்ளு!
30/8/2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக