வெள்ளி, 3 ஜூலை, 2026

30/8/2020

 

ஏடி வரதராசன்:-

 

என்னம்மா அங்க சத்தம்

இதுவரைக்கும் கேக்கு தேம்மா

ஒன்னாருந் திட்டிட் டானா

ஒரண்டையும இழுத்துட் டானா

சின்னதா கெட்ட வார்த்த

சேத்தொன்ன சொல்லிட் டானா

என்னன்னு சொன்னா தானே

ஏதாச்சும் செய்வேன் நானே!

 

அகரம் அமுதன்:-

 

பேசிக்கிட் டிருக்கோம் மாமா!

பெரச்சன ஒன்னு மில்ல;

ஏசிப்புட் டொருத்தன் போக

இளப்பமா? விடுவே னாநான்?

பூசிநான் மொழுக வில்ல

பொய்யேதும் சொல்ல வில்ல;

வீசிநீ விலாஒ டிக்க

விறகோடு வரவேண் டாமே!

 

ஏடி வரதராசன்:-

 

என்னம்மா இதஎங் கிட்ட

இவ்வளவு லேட்டா சொல்ர

கொண்டாநீ அவன இங்க

கொத்தாவே அருத்து மூணும்

சுண்டக்கா வத்த லாட்டம்

சுடச்சுட காய வச்சி

அண்டங்காக் காவுந் திங்க

அத்தனையும் வீசி போவோம்!

 

அகரம் அமுதன்:-

 

சுண்டக்கா மேட்ட ருக்கே

சும்மாநீ இருந்தி டாம

வெண்டக்கா வெரலொ டிக்க

வேகமா வருவா யின்னா

துண்டக்கா ணும்மே இன்னுந்

துணியக்கா ணும்மே இன்னுஞ்

சண்டைக்கே வரல யின்னுஞ்

சமாதானம் பேசு வானே!

 

ஏடி வரதராசன்:-

 

வந்தாலும் என்ன இப்போ

வரலைன்னா என்ன இப்போ

அந்தாளு யாரு ஒன்ன

அசிங்கமா பேசிப் போக?

இந்தாவா ரேனே நானும்

எவந்தான்னு பேர சொல்லு

அந்தாளா நானா இன்னு

அப்புறமா நீயும் பாரு!

 

அகரம் அமுதன்:-

 

அட!கூட நீயி ருக்க

அடிக்கஒ ருத்தன் வந்தா

தொடக்கூட விடமாட் டேன்னு

தெரியாதா? தொட்டுப் புட்டா

விடக்கூட மாட்டே யின்னு

வெளங்காதா? கொல்லிக் கண்ணு

படக்கூட விடமாட் டேன்னு

புரியாதா? விட்டுத் தள்ளு!

 

30/8/2020

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக