அகரம் அமுதன்:-
ஆளேந்தும் மேனி
அழகென் றதற்காக
வாளேந்தி வெட்ட
வருகின்றாய்; - தோளேந்து
வீரம் தொலைந்ததடி
வேட்கை பிறந்ததடி
ஓரம் ஒதுங்கியுனை
ஊட்டு!
அன்புவல்லி தங்கவேலன்:-
உடன்பட்டாள் என்றால்தான்
ஒப்புவாள் அன்றேல்
கடன்காரன் போலக்
கழிப்பாள் - மடையனே!
வாள்வீசும் பெண்ணாள்
மனத்தில் இடம்பிடிக்க
நாள்பார்க்கச் சொல்லல்
நலம்!
அகரம் அமுதன்:-
நாளாய்ந்து மாலையிட
நான்ரெடிதான்; என்மனைவி
தேளாய்க் கடிப்பாள்
தெரிந்துவிட்டால்;
- ஆளான
பெண்பூக்கள் கண்டால்
பெருமூச் செறிகின்றேன்
கண்பூத்து நெஞ்சம்
கலுழ்ந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக