வெள்ளி, 3 ஜூலை, 2026

ஆகஸ்ட் 8 2020

 

ஏடி வரதராஜன்:-

வையத்தில் கோடி வளர்கா வியமிருந்தும்

பொய்யா மொழியே பொருளழகாம் --- மெய்தன்னில்

அட்டியிட்டு லட்சம் அழகிருந்தும் நான்படிக்கக்

குட்டிமுயல் கள்தான் குறள்.

 

அமுதன்:-

எட்டிப்புல் மேய எடுத்துவிட்டாள் போலுமந்தக்

குட்டிமுயல் அங்கே குதிக்கிறதே! - தொட்டெடுத்து

முத்தக் குளியல் முழுக்காட்ட நான்வரவா?

செத்தநீ கேட்டெனக்குச் செப்பு!

 

செத்த – சற்று

 

மெய்ம் மாலன்:-

குட்டி முயலில் மயலா?கொழுத்திருக்கும்

குட்டியது வேண்டாமோ கூறு?

 

அமுதன்:-

முயலைக் கரம்பற்றி மோகத்தைத் தூண்ட

மயில்விழும் என்றன் மடி!

 

ஆகஸ்ட் 8 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக