வரதன்:-
என்னப்பா பண்ரீங்க எல்லாரும்? சிந்திச்சி
என்னத்த நானும் எழுதுறது? -- எண்ணிப்
புதுசா எதாவது போடலான்னு பாத்தா
எதுவும் வரல எனக்கு.
அகரம் அமுதன்:-
இதோவரேன்; கொஞ்சமிரு; இன்னிக்கே ஓப்பன்;
மொதோரௌண்டை ஊத்தி முடிச்சா - அதோஅந்தக்
கற்பனை கூத்தாடும் கையிரண்டைக் கோத்தாடும்
சொற்குவித்துப் பின்வெண்பா சொல்!
வரதன்:-
சொல்ரேன் குவாட்டர்ல சோடாவ மிக்ஸ்பண்ணி
இல்லாம போகுதே எல்லாமும் --- சுள்ளுன்னு
வேகமா பாட்டெழுத ராவா அடிச்சாதான்
சோகமா வாரும் சொரந்து.
அகரம் அமுதன்:-
ராவாக உட்டா ரணப்பட்டுச் சீக்கிரமா
சாவாதா தேகம் சருகாகி? - நோவாம
மிக்சிங்க் கரைக்ட்டானா மேனிக்கு மோசமில்ல;
சிக்க(ன்)சைடு டிஷ்ஷானா கிக்கு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக