செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

அவையடக்கம்:-

 

அவையடக்கம்:-

 

நூலறிவோ என்றால் நுனிப்புல்லே மேய்ந்தவன்நான்

வாலறிவுக் கந்தோ வகையில்லை –நாலறிவு

கிட்டியதாய்ச் சொன்னால் கிணற்றுநுணல் வாய்விட்டுக்

கத்தியதே போலாகுங் காண்!

 

நாணைத்தா னேற்ற நவில்கின்றீர்; நெஞ்சத்தில்

நாணைத்தா னேற்றுகிறேன் நானிங்கே –காணிற்

கரும்புவில் ஏந்தும் கவிஞர்முன் அந்தோ!

இரும்புவில் அன்றோ எனது!

 

சனிக்குளியல் போடும் தகைஞர்முன் காக்கைத்

தனிக்குளியல் போடப் புகுந்தேன் –இனிக்கும்

புலவர்சொற் குண்டு புகழிலக்க ணம்நல்

மழலைச்சொற் குண்டோ மரபு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக