திங்கள், 3 ஆகஸ்ட், 2026

 

கட்டு மரமே!அக் காலனையே ஏமாற்றி

விட்டு நலமாக வீடுவந்தாய்; – துட்டு

மரமே! உனக்கு மரணமே இல்லா

வரமே அவன்தந்தான் வந்து!

 

 

கரையொதுங்கும் என்றன்றோ கண்டிருந்தார்; நீயோ

கரையேறி வந்த கவினை – உரைப்பதெனில்

அப்போலோ செல்லாமல் காவேரி சென்றதனால்

இப்போது மீண்டாய் இனிது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக