பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
சோகத்தைச் சொல்லில் சுமந்து துடிக்கின்றேன்
ஆகத்தை விட்டு அகன்றவுயிர் – போகட்டும்
மண்ணோரை ஆண்ட வழுவிலா நல்வழியில்
விண்ணோரை ஆள விரைந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக