நாநனைக்கப் பாலில்லை நாமிளைக்க ஆவழங்கப்
பூநனைந்த பொற்கொடியின் பூமார்பால் -ஞானப்பால்
உண்டதிரு ஞானன் உரைமொழியாய் நா(ம்)மொழிய
கண்ணுற்றே நன்நெறியைக் காண்!
அகரம்.அமுதா
பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென் பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே! தாயே! குழவி எனையெடுத்துக் கொஞ்சு!
வியாழன், 25 டிசம்பர், 2008
சனி, 20 டிசம்பர், 2008
தாலி வரம்!
திருமண முறிவு வேண்டி கணவன் நீதிமன்றம் செல்கிறான். அந்த இறுதிக்கட்ட நேரத்தில் அவன் மனைவி அவனுக்கு எழுதும் கவிதைக் கடிதமாக இக்கவிதை!
திருமணம் கசந்துவிட்டத்
திரு-மனம் நலமா?
இறந்துவிட்ட இறந்தகாலம்
திரும்பவும் வரும்?
இழக்கப்போகும் உறவெண்ணி
இறுக்கிடும் ஏக்கங்கள்...
உறவறுக்க முயலுகின்ற
உள்மனதை மாற்றுங்கள்...
அழுதழுது வடிகின்ற
கண்ணீர் கரிக்குது...
அதைக்காணும் ஊர்மனமோ
அழகாய் சிரிக்குது...
பெயர்சொல்ல முத்துப்போல
பெற்றுத்தந்தேன் வாரிசு...
அடிவழிற்றில் வளருது
ஆறுமாத நின்சிசு...
விவகாரம் முற்றிப்போக
விவாகரத்துத் தேவையா?
விட்டுக்கொடுக்கும் மனமிருந்தால்
வீடும்சுவர்க்கம் இல்லையா?
சொந்தமாய் ஒருதுன்பம்
இருந்தாலது சுகமாகும்...
துன்பமே நீயெனினும்
வாழ்க்கையும் வரமாகும்...
முடிவுக்கு முற்றுப்புள்ளி
முழுமனதாய் வைப்போமே...
விடிவென்னும் விளக்கேற்றி
வாழ்க்கையைப் படிப்போமே...
முந்தானையில் வேண்டிக்கொண்டு
முடிந்தக்காசு இறைவனுக்கு...
முந்துகின்ற விழிநீரால்
முடிகின்றக்கடிதம் உமக்கு!
அகரம்.அமுதா
திருமணம் கசந்துவிட்டத்
திரு-மனம் நலமா?
இறந்துவிட்ட இறந்தகாலம்
திரும்பவும் வரும்?
இழக்கப்போகும் உறவெண்ணி
இறுக்கிடும் ஏக்கங்கள்...
உறவறுக்க முயலுகின்ற
உள்மனதை மாற்றுங்கள்...
அழுதழுது வடிகின்ற
கண்ணீர் கரிக்குது...
அதைக்காணும் ஊர்மனமோ
அழகாய் சிரிக்குது...
பெயர்சொல்ல முத்துப்போல
பெற்றுத்தந்தேன் வாரிசு...
அடிவழிற்றில் வளருது
ஆறுமாத நின்சிசு...
விவகாரம் முற்றிப்போக
விவாகரத்துத் தேவையா?
விட்டுக்கொடுக்கும் மனமிருந்தால்
வீடும்சுவர்க்கம் இல்லையா?
சொந்தமாய் ஒருதுன்பம்
இருந்தாலது சுகமாகும்...
துன்பமே நீயெனினும்
வாழ்க்கையும் வரமாகும்...
முடிவுக்கு முற்றுப்புள்ளி
முழுமனதாய் வைப்போமே...
விடிவென்னும் விளக்கேற்றி
வாழ்க்கையைப் படிப்போமே...
முந்தானையில் வேண்டிக்கொண்டு
முடிந்தக்காசு இறைவனுக்கு...
முந்துகின்ற விழிநீரால்
முடிகின்றக்கடிதம் உமக்கு!
அகரம்.அமுதா
புதன், 17 டிசம்பர், 2008
வேண்டாமே இந்தப் ப(பு)கை!

நகைக்கிடங் கான நறுவாய் நகைபோய்ப்
புகைக்கிடங் காதல் புதிர்!
வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை
நம்புகையில் வீழும் நலம்!
நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல்
தகையில்லை வேண்டும் தடை!
காற்றிற்கும் மாசாகும் கைப்பிடித்தார் வாழ்வடைக்கும்
கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!
புகையின் சுவைகண்டார் போயொழிய வேறோர்
பகையில் புகையே பகை!
சிறிதும் கரித்தூளைத் தேடற்க தேடின்
பொறியைந்தும் பாழாம் புரி!
பற்றவைக்கும் பாழ்சுருளால் பாலன்ன நெஞ்சினிலும்
புற்றுவைக்கும் வேண்டாம் புகை!
பஞ்சுண்(டு) எனினும் பரிந்து புகைக்குங்கால்
நஞ்சுண்டு சாவாய் நலிந்து!
வெண்குழலை நாடொறும் வேண்டிப் புகைத்தக்கால்
மண்குழியில் வீழ்வாய் மரித்து!
புகைப்பான் இடன்நாடிப் பூம்பழுதைக் காட்டி
நகைப்பான் எமனும் நயந்து!
புகைக்கிடங் காதல் புதிர்!
வெம்புகையில் இன்பம் விளையும் எனுங்கருத்தை
நம்புகையில் வீழும் நலம்!
நகைபூக்கும் வாயில் புகைபூக்கக் காண்டல்
தகையில்லை வேண்டும் தடை!
காற்றிற்கும் மாசாகும் கைப்பிடித்தார் வாழ்வடைக்கும்
கூற்றிற்கும் தூதாம்வெண் கோல்!
புகையின் சுவைகண்டார் போயொழிய வேறோர்
பகையில் புகையே பகை!
சிறிதும் கரித்தூளைத் தேடற்க தேடின்
பொறியைந்தும் பாழாம் புரி!
பற்றவைக்கும் பாழ்சுருளால் பாலன்ன நெஞ்சினிலும்
புற்றுவைக்கும் வேண்டாம் புகை!
பஞ்சுண்(டு) எனினும் பரிந்து புகைக்குங்கால்
நஞ்சுண்டு சாவாய் நலிந்து!
வெண்குழலை நாடொறும் வேண்டிப் புகைத்தக்கால்
மண்குழியில் வீழ்வாய் மரித்து!
புகைப்பான் இடன்நாடிப் பூம்பழுதைக் காட்டி
நகைப்பான் எமனும் நயந்து!
அகரம்.அமுதா
வெள்ளி, 12 டிசம்பர், 2008
தீ! சொல்!
தீ!
வாட்டி வதைத்து மனத்தின்கண் வீற்றிருந்(து)
ஆட்டிப் படைத்தே அறிவழித்துக் -கூட்டினை
நோயிற் பெருமளவு நோகடிக்கும் வெஞ்சினத்
தீயிற் கொடியதோ தீ?
சொல்!
சித்தெறும்பாய் ஊர்ந்து சிறுதொழிலும் செய்யாமல்
மெத்தெனவே வீற்றிருந்தால் மேன்மையுண்டோ? -நித்தநித்தம்
தேம்புவதால் இன்பம் திரண்டிடுமோ? மண்பதையில்
சோம்புவதால் உய்வுண்டோ சொல்?
வாட்டி வதைத்து மனத்தின்கண் வீற்றிருந்(து)
ஆட்டிப் படைத்தே அறிவழித்துக் -கூட்டினை
நோயிற் பெருமளவு நோகடிக்கும் வெஞ்சினத்
தீயிற் கொடியதோ தீ?
சொல்!
சித்தெறும்பாய் ஊர்ந்து சிறுதொழிலும் செய்யாமல்
மெத்தெனவே வீற்றிருந்தால் மேன்மையுண்டோ? -நித்தநித்தம்
தேம்புவதால் இன்பம் திரண்டிடுமோ? மண்பதையில்
சோம்புவதால் உய்வுண்டோ சொல்?
அகரம்.அமுதா
சனி, 6 டிசம்பர், 2008
அருவி!
நான்
வேர்களை முகட்டில்
விரித்து
கீழ்நோக்கி வளர்கின்ற
தண்ணீர் மரம்...
விண்ணை முட்டும்
மலையென்னும் மரத்தின்
ஒற்றை விழுது...
உடலெங்கும்
வெள்ளிச்
சலங்கைகள் கட்டி
நின்றாடும் நர்த்தகி...
குன்றுகளின்
கூந்தல்...
பாறையாம் பானைகள்
பொங்கி வழிகின்ற
பொங்கல்...
நான்நிற்பதாலேயே
ஆறுகள் நடக்கின்றன...
பாறைகள்
என்
விளையாட்டு பொம்மைகள்...
நீங்கள்
கற்களை உரச
தீ பிறக்கும்
நான் உரச
மணல் பிறக்கும்!
நான் விழுகையில்
என் வீரிடலை
சங்கீதம் என்று
சாற்றுகிறீர்கள்
என் பேதைப்பருவத்தை
அருவி என்று
ஆர்க்கிறீர்கள்
மங்கைப் பருவத்தை
ஆறு என்றுக்கூறி
அணைக்கிறீர்கள்
என் மூப்பை
கடல் என்றுக்
கட்டியம் கூறுகிறீர்கள்
என்றேனும் நீங்கள்
எண்ணியதுண்டா
அலைகள் யாவும்
எழுந்துநிற்கத் தோற்று
வழுக்கி விழுகின்ற
அருவிகளே என்பதை?
அகரம்.அமுதா
வேர்களை முகட்டில்
விரித்து
கீழ்நோக்கி வளர்கின்ற
தண்ணீர் மரம்...
விண்ணை முட்டும்
மலையென்னும் மரத்தின்
ஒற்றை விழுது...
உடலெங்கும்
வெள்ளிச்
சலங்கைகள் கட்டி
நின்றாடும் நர்த்தகி...
குன்றுகளின்
கூந்தல்...
பாறையாம் பானைகள்
பொங்கி வழிகின்ற
பொங்கல்...
நான்நிற்பதாலேயே
ஆறுகள் நடக்கின்றன...
பாறைகள்
என்
விளையாட்டு பொம்மைகள்...
நீங்கள்
கற்களை உரச
தீ பிறக்கும்
நான் உரச
மணல் பிறக்கும்!
நான் விழுகையில்
என் வீரிடலை
சங்கீதம் என்று
சாற்றுகிறீர்கள்
என் பேதைப்பருவத்தை
அருவி என்று
ஆர்க்கிறீர்கள்
மங்கைப் பருவத்தை
ஆறு என்றுக்கூறி
அணைக்கிறீர்கள்
என் மூப்பை
கடல் என்றுக்
கட்டியம் கூறுகிறீர்கள்
என்றேனும் நீங்கள்
எண்ணியதுண்டா
அலைகள் யாவும்
எழுந்துநிற்கத் தோற்று
வழுக்கி விழுகின்ற
அருவிகளே என்பதை?
அகரம்.அமுதா
திங்கள், 1 டிசம்பர், 2008
மடயர்க்குப் பாடம் சொல்வாய்!

(மும்பையைப் பத்துப்பேர்கள் கொண்ட தீவிர வாதிகள் தாக்குதலைக் கண்டித்து எழுதப்பட்டது.) -26.11.2008-
அக்குளில் அழுக்கி னைப்போல்
அண்டியே துன்பு றுத்தும்
குக்கலின் என்பு டைத்துக்
கொடுங்குளிர் காய வேண்டும்!
மக்களை மாய்க்கு மந்த
மதியிலார் போக்கால் பாரில்
சிக்கலே மிகுவ தாலே
தீயரை ஒறுக்க வெண்டும்!
செப்படி வித்தை காட்டிச்
செருவிடை மார்நி மிர்த்தி
எப்படை எதிர்த்த போதும்
எறும்பென ஊதித் தள்ளும்
முப்படை நமக்கு முண்டு!
முன்னரண் தாண்டி வந்து
தப்படி வைப்பின் அன்னார்
தாள்களை யொடிக்க வேண்டும்!
தந்தைக்குப் பிறந்தா லன்றோ
தருக்குவான் நேரில்! மாட்டு
மந்தைக்குப் பிறந்த கூட்டம்
மறைந்தன்றோ தாக்கும்!? முற்றும்
சிந்திக்கும் திறனில் லாத
தீயரைப் பிடித்து வந்து
தந்திக்கு முன்பு தைத்துத்
தலைதனை இடர வேண்டும்!
சோற்றிலே கல்கி டந்தால்
சுவைக்குமோ உண்டி? நெல்லின்
நாற்றிலே புல்வ ளர்ந்தால்
நன்மையோ? பெருகி யோடும்
ஊற்றிலே நஞ்சி ருந்தால்
உண்ணுதற் காமோ? நம்மில்
கூற்றெனக் கலந்து பட்ட
கொடியரைக் கொல்ல வேண்டும்!
வேவுகொள் துறையே! நீயுன்
வேலையை முடுக்கி விட்டு
வேவுகொள்; அன்றி நீயும்
மெத்தென வீற்றி ருப்பின்
சாவுகொள்; எல்லை தாண்டித்
தருக்கிடும் பேடி தம்மைக்
காவுகொள்; நாட்டின் ஆண்மை
காவல்கொள்; விழிப்பி னைக்கொள்!
பஞ்சுமாப் பொதியிற் றீயைப்
பதுக்கிடும் தன்மை போலக்
கொஞ்சமா சூழ்ச்சி செய்தார்?
கொடுமனப் போக்கால் நாளும்
நஞ்சுமா நெஞ்சர் ஆடும்
நாடகம் அறிந்த பின்னும்
அஞ்சுமா இந்தி யாதான்?
அயருமோ எல்லைக் காவல்?
அணுக்கமாய் எடுத்து ரைப்பாய்!
அறிவிலாப் பேய்ம னத்தர்
இனக்கமாய் வாரா விட்டால்
இடியெனப் பொருது! போ!போ!
சுணக்கமேன்? இந்தி யாவே!
தூமனம் துயில்தல் இல்லை;
மணக்குமோ காகி தப்பூ?
மடயர்க்குப் பாடம் சொல்வாய்!
அகரம்.அமுதா
வியாழன், 27 நவம்பர், 2008
வாழ்த்தும், ஏற்பும்!

உயர்திரு நெல்லைக்கண்ணன் அவர்கள் என் வலைப்பூவைப் படித்து என்னைப் பாவால் பாராட்டியமையும் அதனை ஏற்று நான் பதிற்பா வடித்தமையும்.
வெண்பாவில் விளையாடும் உங்களையே
வியப்போடு பார்க்கின்றேன் நலமே சேர்க
கண் போல தமிழ் உங்கள் துணையிருக்க
கணக்காக வெண்பாவில் ஆடுகின்றீர்
பெண்ணாரே வெற்றியெல்லாம் உங்களுக்கு
பிறை நுதலான் தந்து நிற்பான் வெல்க நீரே
பண்பாரே போற்றுகின்றேன் உம்மை எந்தன்
பைந்தமிழால் புகழேந்தி போல வெல்க!
அன்புடன் நெல்லைக்கண்ணன்
இனி என் பாடல்:-
வழக்கம்போல் வந்து மடிக்கணினி ஏந்தித்
தயக்கமாய்ப் பின்னூட்டம் தான்பார்த்தேன்; ஆ!ஆ!ஆ!
என்ன வியப்பிதுவோ? என்கண்பொய் சொல்லியதோ?
சின்னவன் கூட்டிற்கு மன்னவனா வந்து
மலர்தூவி வாழ்த்தியது!? மாலைப் பொழுதா
அலரா முகையை அணைத்துப்பா ராட்டியது!?
மேகமா கானலை மெத்தப் புகழ்ந்தது!?
காகமாம் என்னைக் கருதியதோ பூவை!?
பழுத்தப் பழமா படுபிஞ்சை நாடி
வழுத்தி விருத்த வகைசெய் துவந்தது!?
நெல்லைக் கடலிந்த நெத்திலியை வாழ்த்தியதை;
வெள்ளி உவந்தெழுத்து விட்டிலை ஏற்றியதை;
கூரை ஒழுக்கைக் குலவருவி கொஞ்சியதை;
ஊரை எழுப்பியுரைத் தாலும்ஊர் ஒப்பாதே!
ஆகா! பயன்செய்தேன் ஆர்க்கும் தமிழ்க்கடலே
பாகாய் உவந்துருகிப் பாராட்டும் போழ்தினிலே!
மானென்றே எண்ணி மறுமொழி இட்டிருந்தீர்
ஆணென்பேன் என்னை அகவையிறு பத்தெட்டு!
முன்னம் பழகாத மோகினியின் முன்னிரண்டு
தென்னங்காய் கண்டால் திறமழியும் காளையர்போல்
மன்னவனே உன்னெழுத்தை மாந்திக் களிகொள்ளும்
பொன்னளி நான்என்பேன் பொய்யில்லை உண்மையிது!
நாட்டிற்கே ஏற்றதொரு நற்கருத்தைக் கூறுபழம்
பாட்டிற்குப் பாட்டால் பகருகிறீர் பாகுரைகள்!
பாக்கள் படைத்திடலாம் பாருள்ள பாவலர்கள்;
பாக்-கள் பிழிந்தருளும் பாங்கறிந்த பாவலன்நீ!
முன்னம் சிறுவயதில் முன்மாலைப் பொழுதினில்
சின்னத் திரையில்இச் சின்னவன் உன்பேச்சைக்
கண்ணிமையா நின்றுக் கருத்தூன்றிக் கேட்டதெல்லாம்
எண்ணுகையில் என்நெஞ்சம் ஏந்திசையில் பண்பாடும்!
அப்போதே உன்சுவைஞன் ஆகினேன்; என்பேச்சில்
எப்போதும் ஏற்ற இடம்பிடிக்கும் நாயகன்நீ!
உற்ற வலைநிறுவி ஒப்பில்லாப் பாப்புனைந்து
கற்ற வரைக்கவரும் கல்விக் கடல்உன்
எழுத்தெண்ணி வாசித் தெழுமின்பத் தாலே
கொழுத்தநற் சேவலைப்போல் கொக்கரித்தேன்; கொக்கரித்து
முன்னூட்டம் தன்னை முழுதாய்ப் படித்தாலும்
பின்னூட்டம் போடப் பெரிதாற்றல் இல்லையெனும்
தாழ்வு மனப்பான்மை தாக்கியதால் அய்ய!உனை
வாழ்க! எனவாழ்த்த வாயின்றி நின்றேன்;
தருவே! தகையே! தமிழே!என் பாட்டின்
கருவே! கனியே! கருத்தே! உனைப்புகழ
நேரமின் மையாய் நினைக்கவில்லை; முற்றுரைக்கும்
தீரமின் மையால் தெரிந்து!
அகரம்.அமுதா
ஞாயிறு, 23 நவம்பர், 2008
என் பாடல்!
செந்தமிழில் சொல்லெடுத்துத்
தீஞ்சுவைதன் னில்குழைத்துச்
செய்திடுவேன் கவிதைஒரு நூறு! -இந்த
வையமதில் துயில்களையும் பாரு!
காசில்லாப் பேர்களையும்
கனிவுடனே என்கவியில்
ஆசையுடம் ஆசுகவி படிப்பேன்! -அதனை
நேசிப்போர் வாழ்வுபெறும் அடைத்தேன்!
உழைப்பதனால் உயர்பவரை
உண்மைசொல்லும் உத்தமரை
ஓர்ந்துகவி பாடுமென்றன் மனது! -அவர்தாம்
உலகமென்னும் ஆலமதன் விழுது!
முதலாளிப் போர்வையிலே
தொழிலாளர் வியர்வையினை
உறுஞ்சுகின்ற பேடிகளைச் சாடும்! –அதனை
உணர்ந்துதிருந் திடஉயரும் நாடும்!
உழைப்பவர்க் கென்கவியில்
ஓய்விருக்கும்! ஏய்ப்பவரை
எள்ளிநகை ஆடிவிடும் பாக்கள்! –அதனை
அல்லகவி என்பவர்கள் மாக்கள்!
முயற்சியில்லா மூடர்களை
முச்சந்திக்கே அழைத்து
முடிந்தவரை என்கவிதை சாடும்! –அதிலே
முயலாமை என்றமுனி ஓடும்!
சத்தியமாய்க் கனிகையரை
ஒத்திவைத்த விதவையரைப்
பாடுபொரு ளாய்க்கொண்டு படிப்பேன்! -அவர்தம்
பாடுயரப் பாடுபட் டுழைப்பேன்!
எத்தனையோ புலவர்கள்
இயற்றிவைத்தக் கவிபடித்தும்
இப்புவியே திருந்தாத போதும் -என்றன்
ஒற்றைச்சொற் கிணங்குமது போதும்!
காதலர்க் கென்பாடல்
கன்னலென இனித்திருக்கும்
காதலினும் என்பாடல் சிறப்பு! -இதிலே
கண்டுசொல்ல ஏதுமுண்டோ மறுப்பு?
எழிலனைத்தும் ஏற்றிருக்கும்
இயற்கையினை என்பாடல்
தொழுதபடி பாடிநிற்கும் நாளும்! -அதனால்
அழிவில்லை என்கவிக்கெந் நாளும்!
முடியுமென்றால் என்கவியை
முடிந்தவரை நீயோது
மூடியகண் களிரண்டும் திறக்கும்! -அறிவும்
முழுநிலவாய்த் தோன்றியொளி பெருக்கும்!
அகரம்.அமுதா
தீஞ்சுவைதன் னில்குழைத்துச்
செய்திடுவேன் கவிதைஒரு நூறு! -இந்த
வையமதில் துயில்களையும் பாரு!
காசில்லாப் பேர்களையும்
கனிவுடனே என்கவியில்
ஆசையுடம் ஆசுகவி படிப்பேன்! -அதனை
நேசிப்போர் வாழ்வுபெறும் அடைத்தேன்!
உழைப்பதனால் உயர்பவரை
உண்மைசொல்லும் உத்தமரை
ஓர்ந்துகவி பாடுமென்றன் மனது! -அவர்தாம்
உலகமென்னும் ஆலமதன் விழுது!
முதலாளிப் போர்வையிலே
தொழிலாளர் வியர்வையினை
உறுஞ்சுகின்ற பேடிகளைச் சாடும்! –அதனை
உணர்ந்துதிருந் திடஉயரும் நாடும்!
உழைப்பவர்க் கென்கவியில்
ஓய்விருக்கும்! ஏய்ப்பவரை
எள்ளிநகை ஆடிவிடும் பாக்கள்! –அதனை
அல்லகவி என்பவர்கள் மாக்கள்!
முயற்சியில்லா மூடர்களை
முச்சந்திக்கே அழைத்து
முடிந்தவரை என்கவிதை சாடும்! –அதிலே
முயலாமை என்றமுனி ஓடும்!
சத்தியமாய்க் கனிகையரை
ஒத்திவைத்த விதவையரைப்
பாடுபொரு ளாய்க்கொண்டு படிப்பேன்! -அவர்தம்
பாடுயரப் பாடுபட் டுழைப்பேன்!
எத்தனையோ புலவர்கள்
இயற்றிவைத்தக் கவிபடித்தும்
இப்புவியே திருந்தாத போதும் -என்றன்
ஒற்றைச்சொற் கிணங்குமது போதும்!
காதலர்க் கென்பாடல்
கன்னலென இனித்திருக்கும்
காதலினும் என்பாடல் சிறப்பு! -இதிலே
கண்டுசொல்ல ஏதுமுண்டோ மறுப்பு?
எழிலனைத்தும் ஏற்றிருக்கும்
இயற்கையினை என்பாடல்
தொழுதபடி பாடிநிற்கும் நாளும்! -அதனால்
அழிவில்லை என்கவிக்கெந் நாளும்!
முடியுமென்றால் என்கவியை
முடிந்தவரை நீயோது
மூடியகண் களிரண்டும் திறக்கும்! -அறிவும்
முழுநிலவாய்த் தோன்றியொளி பெருக்கும்!
அகரம்.அமுதா
வியாழன், 6 நவம்பர், 2008
சிங்கை பெற்ற செல்வம்! முகம்மது ரஃபி!

- - - - - - - - - முகம்மது ரஃபி--- அகரம்.அமுதா--- பொன்.மாகாலிங்கம்.
காலைக்கதிர் முளைக்கும் முன்-ஓர்
சோலைக்குயில்
ஒலி அலைவழி
ஒலியெழுப்பும்...
அதைக்-
கேட்டெழுந்தத் தென்றல்
கீழ்த்திசை கட்டிலில்
கிடந்துறங்கும் கதிரைத்
துயிலெழுப்பும்!
சேவல் கூவிச்
செங்கதிர் எழும் -இதை
ஊரறியும்;
உலகறியும்!
ஓர்-
பூவை கூவிப்
பொழுது புலர்வதை
வானொலி கேட்கும்
மாந்தர்தம்
காதறியும்;
கருத்தறியும்!
அக்குயிலின் பேர்
முகம்மது ரஃபி- என
மூலைக்கு மூலை
மாந்தர்தம்
மூளைக்கு மூளை
எழுதி(யி)ருக்கும்...!
-- -- --
அரிநிகர்த்த –அவ்
அரியவனின் நிறம்
ஊதா;
குரலில் கொஞ்சம்
தேனைக் குழைப்பார்
அதனைத் துய்க்காது
அளிகள் ஓடிப்போய்
மலர்களில் மகரந்தத்தை
ஊதா!
-- -- --
அவர்-
சாதனைகளின் குதிர்;
எப்படி சாதிக்கிறார்
என்பது
சாதனைகளாலும்
அறியப்படாத புதிர்!
சாதிக்க வேண்டி
மௌனமாய் இருந்து
மௌனத்தைச் சோதிப்பார்;
மௌனம்- இவரிடம் தோற்று
மௌனமானபின்
மலரிதழ் பூத்து
வாதிப்பார்!
இருமுப்பது மணிகள்
இடையறாது
நிகழ்ச்சி படைத்து
சாதிப்பார்;
இவர்போல்- ஆரும்
இயன்றிடின்- இயன்றவர்
தொண்டை கட்டிப்
பாதிப்பார்!
-- -- --
நூலாய்ந்த புலவோரும்;
கற்றாய்ந்த கவியோரும்
சூழ்ந்திருக்க...
என்போல்
கத்துக் குட்டிகளும்
கடைதேறக்
கவிதை நேரம் கண்டார்!
கிழமையில்
காரி வந்தால்
கவிதை ஒலிக்கும்...
அந்த வாய்ப்பு
ரஃபி தந்தது!
அதன் வழிதான்
கவியுலகின்
குஞ்சுக் குழாம்களைக்
குவலயம் கண்டது!
அநேகக் கவிஞருக்கு
அவரின்- கவிதை நேரம்தான்
ஊட்டச் சத்து!
ஆகையால்தான்
அவர்மேல்- எனக்கு
ஏகப்பித்து!
ஓராயிரத்து ஏழில்-
ஒப்பிலா மனிதரை
ஈராயிரத்து ஏழில்-
ஐந்தாம் முறையாக
அளப்பறிய நிகழ்ச்சிப்
படைப்பாளராய்
சிங்கை ஏற்றுக்கொண்டது!
அப்படி ஏற்றதனால்
அடங்காப் புகழைத்
தன்முடிமேல்
ஏற்றிக்கொண்டது!
அகரம். அமுதா
சோலைக்குயில்
ஒலி அலைவழி
ஒலியெழுப்பும்...
அதைக்-
கேட்டெழுந்தத் தென்றல்
கீழ்த்திசை கட்டிலில்
கிடந்துறங்கும் கதிரைத்
துயிலெழுப்பும்!
சேவல் கூவிச்
செங்கதிர் எழும் -இதை
ஊரறியும்;
உலகறியும்!
ஓர்-
பூவை கூவிப்
பொழுது புலர்வதை
வானொலி கேட்கும்
மாந்தர்தம்
காதறியும்;
கருத்தறியும்!
அக்குயிலின் பேர்
முகம்மது ரஃபி- என
மூலைக்கு மூலை
மாந்தர்தம்
மூளைக்கு மூளை
எழுதி(யி)ருக்கும்...!
-- -- --
அரிநிகர்த்த –அவ்
அரியவனின் நிறம்
ஊதா;
குரலில் கொஞ்சம்
தேனைக் குழைப்பார்
அதனைத் துய்க்காது
அளிகள் ஓடிப்போய்
மலர்களில் மகரந்தத்தை
ஊதா!
-- -- --
அவர்-
சாதனைகளின் குதிர்;
எப்படி சாதிக்கிறார்
என்பது
சாதனைகளாலும்
அறியப்படாத புதிர்!
சாதிக்க வேண்டி
மௌனமாய் இருந்து
மௌனத்தைச் சோதிப்பார்;
மௌனம்- இவரிடம் தோற்று
மௌனமானபின்
மலரிதழ் பூத்து
வாதிப்பார்!
இருமுப்பது மணிகள்
இடையறாது
நிகழ்ச்சி படைத்து
சாதிப்பார்;
இவர்போல்- ஆரும்
இயன்றிடின்- இயன்றவர்
தொண்டை கட்டிப்
பாதிப்பார்!
-- -- --
நூலாய்ந்த புலவோரும்;
கற்றாய்ந்த கவியோரும்
சூழ்ந்திருக்க...
என்போல்
கத்துக் குட்டிகளும்
கடைதேறக்
கவிதை நேரம் கண்டார்!
கிழமையில்
காரி வந்தால்
கவிதை ஒலிக்கும்...
அந்த வாய்ப்பு
ரஃபி தந்தது!
அதன் வழிதான்
கவியுலகின்
குஞ்சுக் குழாம்களைக்
குவலயம் கண்டது!
அநேகக் கவிஞருக்கு
அவரின்- கவிதை நேரம்தான்
ஊட்டச் சத்து!
ஆகையால்தான்
அவர்மேல்- எனக்கு
ஏகப்பித்து!
ஓராயிரத்து ஏழில்-
ஒப்பிலா மனிதரை
ஈராயிரத்து ஏழில்-
ஐந்தாம் முறையாக
அளப்பறிய நிகழ்ச்சிப்
படைப்பாளராய்
சிங்கை ஏற்றுக்கொண்டது!
அப்படி ஏற்றதனால்
அடங்காப் புகழைத்
தன்முடிமேல்
ஏற்றிக்கொண்டது!
அகரம். அமுதா
வியாழன், 30 அக்டோபர், 2008
கண்ணீர் அஞ்சலி!
யாரது-
யமனா?
நாய்க்கும் நீ
சமனா?
மரணமென்னும் கைகளால்-
மூக்குவிடும் மூச்சை;
நாக்கில் எழும் பேச்சை;
இதயத் துடிப்பை;
இமைகளின் படபடப்பை;
உலுக்கி உலுக்கி
உதிரச்செய்யும் மந்தியே!
உயிர்குடித்தே
உவகை அடையும்
உந்தியே!
எப்போதும்; எஞ்ஞான்றும்
இடுக்கண் தரவே
எழுதப்படும் தந்தியே!
இறப்பை ஈயவே
இதய வீட்டின் வாசலில்
காத்திருக்கும்
கருணையற்ற நந்தியே!
விந்தையே வியக்கும்
விந்தையை;
தன்னெழுத்தால் வாசகர்க்கு
இன்கண் அளித்த -கள்
மொந்தையை;
விருத்தம் தீண்டா
வியப்பை;
ஐம்பொறி என்னும்
குரங்கேறிக் குலுக்காப்
பொருப்பை;
அறிவியல் அறிவை -தன்
ஆறறிவில் தேக்கிய இருப்பை;
உடலுள் உறைந்த
உயிரென்னும் அருவ
உருப்பைப் பிய்த்து
ஓடி ஒளிந்தாயே!
யாக்கைக்குள் உயிரைத்
தேக்கி ஒளித்தாலும்
உட்புகுந்து ஊடுருவித்
தேடிக் கலைத்தாயே!
-- -- --ஓ! ரங்க நாதா!
ஸ்ரீ ரங்க நாதா!
நின்பேர் கொண்டவனை...
நின்ஊர்வழி வந்தவனை...
காலனெனும்
கள்வன்
பாசக்கயிறென்னும்
நாசக்கயிறெறிந்து
உடலை விட்டான்;
உயரைச் சுட்டான்;
மடலை விட்டான்;
முகவரியைச் சுட்டான்!
முறையா?
மண்ணுலகில்
மனிதராய்ப் பிறத்தலும் ஓர்
குறையா?
-- -- --எழுத்துலகின் சகாப்தமே!
நாவல் வாசிப்போர்
நாவெல்லாம் பலுக்கும்
மகாப் பதமே!
சிறுகதைச் செம்மலே!
கவின்தமிழ்த்தாய் -தன்
காதுகளில் அணிந்துகொண்ட
கம்மலே!
பண்ணறிந்த பாவலனே!
பாரறிந்த நாவலனே!
வசன கர்த்தாவே!
விசனத்தில் விட்டாயே!
நீடுதுயில் நீகொண்டால்
ஏடுதுயில் கொள்ளாதா?
கற்றதும் பெற்றதும்நாம்
கடுகளவே என்றிருக்கக்
கற்பித்தது போதுமென்று
காலனிடம் சென்றாயா?
தரமான படைப்பையெல்லாம்
தரணிக்குத் தந்துவிட்டு
மரண அழைப்பேற்று
மனமுவந்து சென்றாயா?
-- -- --
ஐயனே!
எழுதுகோல் ஏந்துங்
கையனே!
புதுமை விரும்பியாய்ப்
புத்தாக்கச் சிந்தனையை
வளமான உரைநடையில்
வார்த்தவனே!
உன்போல்
புதுமைசெய்யப்
புகுந்தாரை
ஆதரித்து ஆனமட்டும்
ஆர்த்தவனே!
"எனக்குப் பிடித்த கவிதை"
என்றெழுதிக்
கணக்கில்லாக் கவிஞர்களை
காசினியோர் கண்முன்
சேர்த்தவனே!
ஈசல் எதிர்த்தா
எரிமலை சாயும்?
ஈர்க்குப் பட்டா
இளங்கதிர் மாயும்?
கட்டுமரம் தடுத்தா
கடலலை ஓயும்?
கார்முகில் உரசியா
கவின்நிலா தேயும்?
கூடுபுகுந்து -உன்
உயிர்குடித்த கூற்றுவன்
ஏடுபுகுந்து -உன்
பீடழிக்க மாட்டாது
தோற்றான்;
தான் தோற்றதைத்
தக்கணமே தரணியறிய
ஏற்றான்!
மரத்தை அரிக்கும்செல்
வைரத்தை அரிப்பதில்லை...
கரத்தைச் சுடும்தீ
அறத்தைச் சுடுவதில்லை!
அகரம்.அமுதா
யமனா?
நாய்க்கும் நீ
சமனா?
மரணமென்னும் கைகளால்-
மூக்குவிடும் மூச்சை;
நாக்கில் எழும் பேச்சை;
இதயத் துடிப்பை;
இமைகளின் படபடப்பை;
உலுக்கி உலுக்கி
உதிரச்செய்யும் மந்தியே!
உயிர்குடித்தே
உவகை அடையும்
உந்தியே!
எப்போதும்; எஞ்ஞான்றும்
இடுக்கண் தரவே
எழுதப்படும் தந்தியே!
இறப்பை ஈயவே
இதய வீட்டின் வாசலில்
காத்திருக்கும்
கருணையற்ற நந்தியே!
விந்தையே வியக்கும்
விந்தையை;
தன்னெழுத்தால் வாசகர்க்கு
இன்கண் அளித்த -கள்
மொந்தையை;
விருத்தம் தீண்டா
வியப்பை;
ஐம்பொறி என்னும்
குரங்கேறிக் குலுக்காப்
பொருப்பை;
அறிவியல் அறிவை -தன்
ஆறறிவில் தேக்கிய இருப்பை;
உடலுள் உறைந்த
உயிரென்னும் அருவ
உருப்பைப் பிய்த்து
ஓடி ஒளிந்தாயே!
யாக்கைக்குள் உயிரைத்
தேக்கி ஒளித்தாலும்
உட்புகுந்து ஊடுருவித்
தேடிக் கலைத்தாயே!
-- -- --ஓ! ரங்க நாதா!
ஸ்ரீ ரங்க நாதா!
நின்பேர் கொண்டவனை...
நின்ஊர்வழி வந்தவனை...
காலனெனும்
கள்வன்
பாசக்கயிறென்னும்
நாசக்கயிறெறிந்து
உடலை விட்டான்;
உயரைச் சுட்டான்;
மடலை விட்டான்;
முகவரியைச் சுட்டான்!
முறையா?
மண்ணுலகில்
மனிதராய்ப் பிறத்தலும் ஓர்
குறையா?
-- -- --எழுத்துலகின் சகாப்தமே!
நாவல் வாசிப்போர்
நாவெல்லாம் பலுக்கும்
மகாப் பதமே!
சிறுகதைச் செம்மலே!
கவின்தமிழ்த்தாய் -தன்
காதுகளில் அணிந்துகொண்ட
கம்மலே!
பண்ணறிந்த பாவலனே!
பாரறிந்த நாவலனே!
வசன கர்த்தாவே!
விசனத்தில் விட்டாயே!
நீடுதுயில் நீகொண்டால்
ஏடுதுயில் கொள்ளாதா?
கற்றதும் பெற்றதும்நாம்
கடுகளவே என்றிருக்கக்
கற்பித்தது போதுமென்று
காலனிடம் சென்றாயா?
தரமான படைப்பையெல்லாம்
தரணிக்குத் தந்துவிட்டு
மரண அழைப்பேற்று
மனமுவந்து சென்றாயா?
-- -- --
ஐயனே!
எழுதுகோல் ஏந்துங்
கையனே!
புதுமை விரும்பியாய்ப்
புத்தாக்கச் சிந்தனையை
வளமான உரைநடையில்
வார்த்தவனே!
உன்போல்
புதுமைசெய்யப்
புகுந்தாரை
ஆதரித்து ஆனமட்டும்
ஆர்த்தவனே!
"எனக்குப் பிடித்த கவிதை"
என்றெழுதிக்
கணக்கில்லாக் கவிஞர்களை
காசினியோர் கண்முன்
சேர்த்தவனே!
ஈசல் எதிர்த்தா
எரிமலை சாயும்?
ஈர்க்குப் பட்டா
இளங்கதிர் மாயும்?
கட்டுமரம் தடுத்தா
கடலலை ஓயும்?
கார்முகில் உரசியா
கவின்நிலா தேயும்?
கூடுபுகுந்து -உன்
உயிர்குடித்த கூற்றுவன்
ஏடுபுகுந்து -உன்
பீடழிக்க மாட்டாது
தோற்றான்;
தான் தோற்றதைத்
தக்கணமே தரணியறிய
ஏற்றான்!
மரத்தை அரிக்கும்செல்
வைரத்தை அரிப்பதில்லை...
கரத்தைச் சுடும்தீ
அறத்தைச் சுடுவதில்லை!
அகரம்.அமுதா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)