ஞாயிறு, 5 ஜூலை, 2026

உரையாடல் வெண்பாக்கள்!

 

உரையாடல் வெண்பாக்கள்!

 

அமுதன்

 

வெண்பாவில் நாமும் விளையாடி நாளாச்சு;

நண்பாவா! ஏதேனும் நாம்கதைப்போம்; - முன்போல

நாட்டு நடப்பை, நலிந்தோர் படுந்துயரைப்

பாட்டில் வடிப்போம் பரிந்து! (1)

 

வரதன்

 

ஓர்பக்கம் பங்கயமும் ஓய்ந்த விரல்கரமின்

னோர்பக்கம் கொள்ளை உதிப்பதுவாம் – யார்பக்கம்

சேரும் இலையென்று சேவிக்க ஈங்கிருவர்

ஊரும் உருப்படுமா ஓர்! (2)

 

அமுதன்

 

விடப்பா அரசியல் வீண்கதைகள்; கையில்

எடப்பா மனதிற் கினிமை – கொடுக்கும்

அறிவார்ந்த நல்லபல ஆக்கங்கள் நல்கும்

செறிவார்ந்த செய்திகளைச் செப்பு! (3)

 

வரதன்

 

கல்வி சரியில்லை; காவல் சரியில்லை;

செல்வத் துறையும் சிரிப்பே; - சொல்நீ!

கனவு கலைத்தின்று காலைப் பசிக்குன்

உணவுதான் என்ன உரை! (4)

 

அமுதன்

 

பழுதுண்ட தெல்லாம்; பகர்ந்துபயன் இல்லை;

அழுதுண்டே சொல்வேன் அதுகேள்! – உழுந்துநிறை

இட்டலியை என்மனைவி எட்டு மணிக்கீந்தாள்

வட்டவட்ட மாக வனைந்து! (5)

 

வரதன்

 

சந்தோசம் ஐயா! சரிஉம் மகன்படிக்க

எந்தஊர்ப் பள்ளி எளிதாகும்? – சொந்தஊர்ப்

பள்ளியே ஆயினும் பைந்தமிழா? ஆங்கிலமா?

விள்ளுங்கள் ஐயா விரைந்து! (6)

 

அமுதன்

 

மாட்டிவிட எண்ணி மகன்படிப்பை என்வாயால்

கேட்டுவிட முன்வைத்தாய் கேள்வியை; - கேட்டுக்கொள்!

தாய்மொழி கற்றவவன் தந்தை படும்பாட்டை

நாய்பட்ட துண்டோ நவில்! (7)

 

வரதன்

 

அருமைத் தமிழிருந்தும் அத்தனையும் குப்பை;

இருபத்தா றெம்கல்வி ஏட்டில் – உருவெடுத்து

முப்பொழுதும் எங்கெங்கும் முன்நிற்ப தெல்லாமும்

எப்படியாம் கொஞ்சம் இயம்பு! (8)

 

அமுதன்

 

ஆங்கிலம் ஆட்சிசெய்ய ஆயிரம் காரணங்கள்

ஈங்குள போழ்தில் எதையுரைக்க? – பூந்தமிழர்

ஆட்சி புரிய அரியணை இன்மையால்

காட்சிகள் மாறின காண்! (9)

 

வரதன்

 

சரிவிடுங்கள் ஐயா! சகலமும் கற்று

பெரியவ னாய்ஆனால் பின்னே – உரியதோர்

வேலைக் கலைந்து விரையங்கள் ஆகாமல்

நாளைக்குப் பணம்சேர்ப்பான் நன்று! (10)

 

அமுதன்

 

வெல்வர் தமிழர்; வெல்கின்ற வந்நாளில்

மெல்ல வளர்தமிழ் மீண்டெழும்; - நல்லதமிழ்

நாக்கில் நடமிடும்; நாட்டில் வலம்வரும்;

வாக்கிது பொய்க்காது வா! (11)

 

வரதன்

 

வென்றால் நலமே விடுங்களையா! மற்றிங்கே

இன்றைய செய்தி இருக்கிறது – நன்றுகேள்

தானியங்கி வாகனத் தாழாத் துறைநாட்டில்

ஏனிறங்கி விட்டதாம் இன்று? (12)

 

அமுதன்

 

நுட்பமாய் இக்கேள்வி நோக்கப் படவேண்டும்;

கட்புலனை ஏமாற்றும் காரணங்கள்; - சட்டம்

இறுகுவதால் கூட இருக்கலாம்;அவ் வீழ்ச்சி

சிறுதொழில் வீழ்வாலும் தேர்! (13)

 

வரதன்

 

பாரத் புகைவிதி நான்கினைப் பாவமிந்த

ஊரதுவும் ஆறாக்க உள்வாடி – நேரதற்கும்

இன்றி அதற்காக ஏனிந்த நட்டங்கள்

மின்கல வாகனமா மேல்? (14)

 

அமுதன்

 

மின்னால் இயங்கும் மிடுக்கான வாகனங்கள்

தன்னாலே மாசைத் தடுக்கலாம்; - கன்னெய்யால்

ஓடுகிற வண்டிகளோ டொப்பிட்டுப் பார்க்குங்கால்

கூடும் செலவும் குறைவு! (15)

 

வரதன்

 

பழகிய ஒன்றை படிப்படியாய் மாற்ற

அழகிய தீர்வும் அமையும்; - வழக்கத்தைப்

பட்டென் றொழித்தால் பணக்காரர் மட்டுந்தான்

இட்டபடி வாழ்வார் இசைந்து! (16)

 

அமுதன்

 

தீக்குள்கை விட்டால் திடுக்கிட் டிழுக்காமல்

போக்கிலே விட்டாபின் போயிழுப்பாய்? – நோய்க்குறி

கண்டவன் முன்புபோல் கண்டதையும் செய்வானேல்

கொண்டநோய் தீருமோ கூறு! (17)

 

வரதன்

 

மொழிந்ததெல்லாம் ஐயா முழுவுண்மை; ஆனால்

தொழிலாளர்க் கெல்லாம் துயர்தான் – வழியேதும்

உண்டென்று சொல்ல உயர்வழிகள் இல்லையிதைக்

கண்டெங்கு போவார் கடந்து? (18)

 

அமுதன்

 

பாதிப்ப தெல்லாம் பணியாளர் தானென்று

சாதிப்ப தெல்லாம் சரியேதான்; - யோசித்தால்

தற்கா லிகமான தாகும் பணிநீக்கம்;

அற்றுவிடும் அல்லல் அது! (19)

 

வரதன்

 

உப்புக்கும் இங்கே உழல்பவரைப் பாராமல்

குப்பை கிளரிவரும் கோமாளிக் – கெப்பொழுதும்

மண்ணலமே இல்லையெனத் தான்நானும் அஞ்சுகிறேன்

இன்னிலையைக் கண்டு இடிந்து! (20)

 

அமுதன்

 

எடுப்பார்கைப் பிள்ளை எனவான கேடன்

கெடுத்த பணமதிப்பின் கேடால் – அடுத்தடுத்து

நாட்டில் சிறுதொழில்கள் நாசமாய்ப் போனதைத்தான்

ஏட்டில் படிக்கிறோம் இன்று! (21)

 

வரதன்

 

மந்தநிலை என்று மடல்மடலாய்ச் செய்தியெல்லாம்

வந்தவண்ணம் கண்டு வருந்துகிறேன் – பிந்தியுள்ள

வங்கம்நே பாளமெல்லாம் வானைத் தொடுகிறதே

பங்கமையா இங்கிவரால் பார்! (22)

 

அமுதன்

 

சீவிச் சிணுக்கெடுத்து சிம்மா சனமேற்றிக்

காவிகளை ஆளவிட்ட காரணத்தால் – ஓவிய

நாட்டை உருக்குலைத்தார்; நாயினும் கீழிவர்தம்

சேட்டைக் களவில்லை சீ! (23)

 

வரதன்

 

முறைதவறி ஆளுகிற முட்டாளைக் கூர்சொல்

உறைவாளால் வீசி உடைத்தாய்; - நிறைவாக

மண்ணாளு கின்ற மறுபொறுப்பு கைசேர்ந்தால்

என்னென்ன செய்வாய் இயம்பு? (24)

 

அமுதன்

 

சட்டங்கள் யார்க்கும் சமமென் றுறுதிசெய்வேன்

திட்டத்தில் ஊழலெனில் தீயாவேன்; - கிட்டத்தில்

மக்களை நாடி மகிழ்ச்சியில் ஆழ்த்துவேன்

சிக்கல்கள் யாவையும் தீர்த்து! (25)

 

 

வரதன்

 

சட்டங்கள் யார்க்குஞ் சமமே; அதற்குமேல்

கொட்டம் அடங்காக் கொடியவர் – திட்டமிட்டுத்

தான்வளர வேண்டித் தனித்திட்டத் தால்கவிழ்ப்பார்

ஏன்என்றால் இங்கவர்சொல் ஈறு!(26)

 

அமுதன்

 

வஞ்சகரைத் தேடி வகிர்வேன்; கரம்பற்றிக்

கெஞ்சிடினும் நெஞ்சைக் கிழித்தெறிவேன்; - கொஞ்சுதமிழ்

மக்களுக்காய்ச் சாவையும் வாரி அணைப்பேன்நான்

குக்கலுக்கா அஞ்சுவேன் கூறு! (27)

 

வரதன்

 

வந்தாலும் சாதி வளரும்; சிறப்பாட்சித்

தந்தாலும் லஞ்சம் தலைதூக்கு – இந்தநிலை

ஊர்விளைந்து நிற்க ஒழிக்கஒரு நல்வழியை

ஓர்வரியில் சொல்வீர் உணர்ந்து! (28)

 

அமுதன்

 

ஓர்வரியில் சொல்ல உகந்த பதிலைநான்

நேர்வழியில் பேச நினைக்கின்றேன் – சீர்கெடுக்கும்

கையூட்டைச் சாதியைக் கைக்கொண்டால் தூக்கிலே

மெய்யூட்டிக் கொல்வேன் மிதித்து! (29)

 

வரதன்

 

இப்பொழுதே ஆள இறங்கிவிட்டாய்; கற்பனையில்

துப்பறிந்தே கள்வரைத் தூக்கிலிட்டாய் – முப்பொழுதும்

மெய்ந்நெறியைத் தாரும் மிசைமொழியாம் நாம்பேசும்

பைந்தமிழ்க்கென் செய்வாய் பகர்? (30)

 

அமுதன்

 

என்னாட்சிக் குட்பட்ட எல்லாத் துறையிலும்

நின்றாட்சி செய்யும் நிறைதமிழை – நன்றாய்ப்

படிப்பார்க்கே வேலை; பகர்வார்க்கே மேடை;

படைப்பார்க்கே ஆட்சிப் பணி! (31)

 

வரதன்

 

அனைத்துமென் றாலே அறநிலையும் தானே

இணைத்துள்ளீர்? ஐயா இனிமேல் – கணைதமிழில்

மட்டுமே கோயில் மறையோது வாரென்ற

சட்டமே உண்டன்றோ? சாற்று! (32)

 

அமுதன்

 

செத்த மொழியால் தினம்தீட்டுப் பட்டுத்தம்

சித்தம் கலங்கும் சிவன்திருமால் – ‘முத்தமிழைக்

காதுற்றே தீட்டு கழிந்தனம்’ என்பாரேல்

ஏதுநான் சொல்ல இனி? (33)

 

வரதன்

 

வண்டமிழில் ஓத வருவான் இறைவனெனும்

எண்ணம் எனக்குள் இசைகிறது – மண்ணிலினிக்

கல்லென்ற தெய்வமெல்லாம் கண்முன்னே தோன்றஅதை

இல்லையென்போர் என்செய்வார் இங்கு? (34)

 

அமுதன்

 

ஊரோடு மட்டும் உபதேசம் செய்துவந்த

ஈரோட்டார் கூட்டம் இனிமேலே – போராட்டம்

கைவிட்டுத் தாம்மணந்த காரிகையார் தங்களுடன்

செய்விப்பார் பூசை தினம்! (35)

 

வரதன்

 

சீர்தமிழில் ஓதல் சிறப்பே; மறைதன்னை

யார்தமிழில் ஓதலாம் இங்கேசொல் – பார்முழுதும்

நூலணிந்தா ருக்கே முதலிடமாம் நம்மையெல்லாம்

காலணியாய்க் கொள்கின்றார் கண்டு! (36)

 

அமுதன்

 

உள்ளே தமிழ்மொழியில் ஒண்டமிழன் தெய்வத்திற்(கு)

அள்ளி மலர்தூவி அர்ச்சிப்பான் – தள்ளி

வெளிப்பக்கம் நின்றபடி வேண்டுவான் பூணூல்

மலிந்ததோள் பாப்பான் மருண்டு! (37)

 

வரதன்

 

சாமி’யார்’? தோன்றும் சரிதான்; பலபோலிச்

சாமியார் இங்கே சரியில்லை – சாமியாய்த்

தண்டந் தருமோ? தகுந்த வழியேதும்

உண்டோ உனதிடத்தில் ஓது! (38)

 

அமுதன்

 

மக்களை ஏமாற்றும் மாபா தகஞ்செய்யும்

அக்கலையில் தேர்ந்த அடியாரைத் – தக்கணமே

துண்டுதுண்டாய் வெட்டித் தொழுவத்துப் பன்னிகள்

உண்ண இடுவேன் உவந்து! (39)

 

வரதன்

 

எதைவெட்டு வாயோ இயம்பவில்லை நானும்

அதைவெட்டு வாயென் றறிவேன் – அதைவெட்டித்

துண்டாக்கிச் சாய்த்துந் தொடர்ந்திங்கு வன்புணருஞ்

சண்டாளர்க் கோர்முடிவைச் சாற்று! (40)

 

அமுதன்

 

வன்புணர்வுக் கெல்லாம் வழக்கென்ப தில்லை;பின்

என்னதான் தண்டனை என்பாயேல் – வன்புணர்ந்தோன்

ஆணுறுப்பைத் தூக்கினில் அப்போதே போடுவேன்

வீணுறுப் பென்றே விதித்து! (41)

 

வரதன்

 

கற்பழித்தால் அங்கே கடுங்குற்றம்; மற்றங்குப்

பொற்களவுக் காய்விலங்கு பூட்டிடலாம் – வற்றியவன்

உண்ணும் உணவுக்காய் ஓர்நாள் திருடிவிடின்

என்னதான் செய்வீர் இதை! (42)

 

அமுதன்

 

காய்ந்த வயிறு களவுதான் செய்திடும்;

பாய்ந்து வழிப்பறி பண்ணிடும் – ஆய்ந்துநான்

உண்ணும் உணவை உதவா தொளிப்பார்க்கே

தண்டனை ஈவேன் தளைத்து! (43)

 

வரதன்

 

மும்மதம் அல்லாமல் முந்நூ றிருந்தாலும்

அம்மதங்கள் ஒன்றா அமுதா!கேள்! – எம்மதத்தார்

பின்னேவா என்ற பிரச்சாரம் மேலோங்க

என்செய்வாய் நாளை இயம்பு? (44)

 

அமுதன்

 

மார்க்கத்தின் பேரால் மனிதர் பிரிவாரேல்

தார்க்குச்சி யால்முதுகில் சாத்துவேன் – மார்க்கங்கள்

ஆற்றுப் படுத்தத்தான்; ஆள்சேர்க்க இல்லையிதை

ஏற்றால்தான் நாட்டில் இடம்! (45)

 

வரதன்

 

திக்கெட்டுஞ் சட்டம் திணித்திடினும் மேலோங்கும்

மக்கட் தொகைக்கோர் மடையின்றி – முக்கிமுக்கித்

தேக்கமின்றிப் பெற்றுத் தெருநடக்கப் பாதையில்லை

சீக்கிரமோர் நல்வழியைச் செப்பு! (46)

 

அமுதன்

 

ஒன்றின்மேற் பெற்றால் உரிமை பறிபோகும்

என்ற நடைமுறை ஏற்படுத்தி – அன்றுமுதல்

பெண்களும் ஆண்களைப்போல் பெற்றோரைப் பேணுரிமை

உண்டென்பேன் சட்டம் உரைத்து! (47)

 

வரதன்

 

இன்னும் வினாக்கள் இருக்கிறது; கேட்கின்றேன்

எண்ணும் பதிலை எடுத்துச்சொல்; - கண்முன்னம்

நேர்முகத் தேர்வாய் நினைக்காதே; நட்பென்னும்

ஓர்முகம் தானென் றுணர்! (48)

 

அமுதன்

 

கேட்டால் பதில்கிடைக்கும்; கேட்கும் மனநிலை

வேட்டால் வினாபிறக்கும்; வேறென்ன? – பாட்டாலே

வேள்வி நடாத்து; விருப்பமுடன் ஒவ்வொன்றாய்க்

கேள்வி எதுவெனினும் கேள்! (49)

 

வரதன்

 

அடப்பாவி என்றிங் கனைவருமே ஏசும்

எடப்பாடிக் கோர்விருதாம் இங்கே – அட!மழைக்கும்

பள்ளி ஒதுங்காத பாவிக்குப் பட்டத்தை

அள்ளித் தருவதா ஆங்கு? (50)

 

அமுதன்

 

கொள்ளத் தகுந்த குமரியைக் கொன்றுவிட்டுத்

தள்ளத் தகுந்தாரைத் தாங்குகிறார்; - உள்ளபடி

வந்து கொடுப்பார்க்கும் வாங்க விழைவார்க்கும்

சிந்தையில் மண்டியது சீழ்! (51)

 

வரதன்

 

நாய்ப்பட்ட பாடாய் நடந்தே இளைத்தார்கள்

நோய்ப்பட்ட ஏழைகள்; நுட்பமிது; – பாய்படுக்கும்

இல்லாருக் கொன்றும் இருப்பவர்க் கொன்றுமாய்ச்

செல்லாத வைத்தியமா? சீ! (52)

 

அமுதன்

 

நாட்டில் மருத்துவம் நானாளும் நாட்களில்

காட்டும் எவர்க்கும் கருணையே – நீட்டும்

பணத்திற்காய் அங்கே பணிவிடை செய்யா(து)

அனைவர்க்கு மான தது! (53)

 

வரதன்

 

வடக்கத்திக் கூட்ட வருகை பொசுக்கி

அடக்கும்தீ வேண்டும் அமுதா! – நடக்கின்ற

வேலையெல்லாம் பார்த்தால் வெறும்விரலைச் சப்பவிட்டு

நாளையாள்வார் போலும் நமை! (54)

 

அமுதன்

 

எல்லாப் பணியிடமும் எங்கள் தமிழர்க்கே

யல்லால் அயலார்க் களிப்பதில்லை – நல்லபடி

சொந்தஊர் போய்விடச் சொல்வேன்; அவர்க்கில்லை

இந்தஊர் தன்னில் இடம்! (55)

 

வரதன்

 

ஆழநிலந் தோண்டி அழகுத் தமிழ்மரபைக்

கீழடியில் காணக் கிளம்பிவிட்டோம்; - ஊழலால்

தோன்றிய கும்பலெல்லாம் தொன்மைத் திராவிடமென்(று)

ஊன்றி உரைப்பதேன் ஓது? (56)

 

அமுதன்

 

வந்தேறி யான வடுகன் திராவிடன்;

செந்தமிழன் என்றென்றும் செந்தமிழன்; - இந்தஉண்மை

கீழடி ஆய்வில் கிடைத்தால் விடுவானா?

கீழறுக்கப் போந்தான் கிளர்ந்து! (57)ள் இருக்கிறது; கேட்கின்றேன்

 

வரதன்

 

பள்ளம் நிறைந்திருக்கப் பார்க்கின்ற சாலையெல்லாம்

துள்ளுந்துக் காரனையே தூற்றுகின்றார் – துள்ளுந்தைத்

தள்ளிப்போ இன்றேல் தலைக்கவசம் மாட்டென்று

சொல்ல உரிமையுண்டோ சொல்! (58)

 

அமுதன்

 

சாமா னியனின் தலையில் மிளகறைக்கும்

பேமா னிகளின் பிழையிது; - நாமாண்டால்

மெச்சும் படிச்சாலை மேம்படுத்திப் பின்கவசம்

நச்சென் றிடச்சொல்வேன் நான்! (59)

 

வரதன்

 

நாட்டில் எதிர்க்கட்சி நம்மக்கள் வாகளித்துக்

கோட்டையை ஆட்சி கொளும்கட்சி – கூட்டுணர்வே

ஒவ்வா திருப்பதோ? ஒன்றுதல் தான்சரியோ?

எவ்வா றிருந்திடணும் இங்கு? (60)

 

அமுதன்

 

அறம்பிற ழாதநல் ஆட்சியை ஆள்வோர்

திறமுடன் செய்தல் திருவாம்; - அறத்திற்

சிதிலம் சிறிதும் திகழ்ந்தால் உரைத்தல்

எதிர்க்கட்சிக் கென்றும் எழில்! (61)

 

வரதன்

 

கேள்விக் கணையெதிர்த்த கேடயம்நீ ஆட்சியெனும்

வேள்வி நடத்த விடியல்தான் – கோள்விளங்கும்

நாட்டில் முதலிடமாய் நம்நாடும் மேல்வளர

கோட்டைக்குச் செல்வாய் குறித்து! (62)

 

அமுதன்

 

ஆட்சி நமதாட்சி யானால் தமிழணங்கின்

மீட்சி உறுதி மிகையில்லை – மாட்சியுடன்

வையத் தரங்கில் மதிக்கப் படுவர்நம்

செய்யத் தமிழர் சிறந்து! (63)

 

வரதன்

 

நன்கு தமிழ்படிக்க நாலடியார்; வீரமுன்னில்

மங்கா திருக்க பரணியே; - பொங்கி

வதையழித்தே நாட்டை வளர்ச்சியுறச் செய்வார்

இதைப்படிக்கும் மாந்தர் இனி! (64)

 

 

 

 

 

 

 

வரதன்

 

பொற்றொடியார் எண்ணம் புரிந்தளித்தீர்; நாட்டின்மேல்

பற்றில்லார் எல்லாம் மருத்துவராய்ப் – பெற்றிருக்கும்

பட்டத்தைப் பார்த்தாலே பள்ளிக்கல் லூரியெல்லாம்

விட்டொழிப்பார் போலும் விரைந்து! (40)

 

அமுதன்

 

பட்டங்கள் வாங்கப் பணத்தைப் பதவியை

இட்டம்போல் இங்கே இயக்குவார் – கொட்டம்

அடங்க அடிப்பேன்; அடங்காத பேரின்

தடங்கை ஒடிப்பேன் தகைந்து! (41)

 

 

 

அமுதன்

 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்

ததனை அவன்கண் விடலென் – பதனால்

தலைவனாய் உன்னைத் தமிழ்த்துறைக் கீவேன்;

நிலைதமிழுக் கென்செய்வாய் நீ?

 

வரதன்

 

வேட்ட தமிழன்றி வேறுமொழி பேசிடஅந்

நாட்டிற்கே செல்லென்று நானுரைப்பேன்; - காட்டாய்நா

ஏந்தித் தெலுங்கால் ‘எனக்குணவு வேண்டு’மென்றால்

ஆந்திரா செல்லென்பேன் ஆம்!

 

அமுதன்

 

பகைவரும் நாடிப் பசுந்தமிழ் கற்கும்

வகையினில் நீயோர் வழிகாண் – தொகைதொகையாய்

நாடு கடத்துவதா நல்லாட்சி? உன்செயலால்

ஏடு பழிக்கும் எனை!

 

வரதன்

 

நாடு புகழ்வதாய் நாமாள வேண்டுமெனில்

வீடுவாசல் எல்லாமும் விற்கவேண்டும் – காடுகளில்

நால்மரங்கள் தாவுகுணம் நம்மக்கள்; ஆடுமையா

கோல்எடுத்தால் தானே குரங்கு?

 

அமுதன்

 

குரங்கென் பதுவா குடிகளை? பூவைச்

சிரங்கென் பதுவா செடிக்கே? – வரம்பற்ற

செல்வேண்டாம்; தொண்டு செயல்வேண்டும்; புண்செய்யும்

கல்வேண்டாம்; வேண்டும்கற் கண்டு!

 

வரதன்

 

எண்ணோடு கையெழுத்தும் என்தமிழே; செய்யாரைக்

கண்ட உடன்செய்வேன் கைதும்நான்; - பின்நாளில்

செந்தமிழில் பேரிலையேல் சேர்ப்பதில்லை பள்ளியிலும்

குந்தஉரி மைபறிப்பேன் கூர்ந்து!

 

அமுதன்

 

கண்பட்ட தால்நீ கழிக்கின்றாய் கண்ணேறு;

பண்பட்ட உன்பணிக்கென் பாராட்டு; - பண்படுத்தும்

ஆணையை ஏற்பர் அருந்தமிழர்; நல்லிசைசெய்

வீணையை ஏற்கும் விரல்!

 

உமா ரமேஷ்

 

ஆட்சி எனதாட்சி என்றானால் அந்நாளில்

வீட்டுக் கழிவெல்லாம் வீதியிலே வீசுவோரை

நீட்டுன் கரமென்று நீள்கொம்பால் நான்கடி

போட்டுப் புரியவைப்பேன் பார்!

 

அமுதன்

 

தடியடியால் தோன்றிவிடும் சச்சரவு; - நாட்டில்

அடிதடியால் முன்னேற்றம் ஆகா(து) – உடனடியாய்த்

திட்டம் சரியாகத் தீட்டிவிட்டு நாம்போடும்

சட்டம்தான் நன்மை தரும்!

 

உமா ரமேஷ்

 

திட்டங்கள் தந்தாலும் சட்டங்கள் போட்டாலும்

எட்டா மனத்தினில் எள்ளளவும் மாற்றமில்லை

கொட்டிக் கெடுத்திடுவார் குப்பையை நாற்சந்தில்;

தட்டிச் சரிசெய்தா லென்?

 

அமுதன்

 

கேளாரை மன்றிற் கிழுத்துவந்து தண்டிப்போம்

ஆளாரையும் தாக்கல் அவசியமா? – நீளாத

கைவேண்டும் நீண்டால் கலங்குவார் கண்துடைக்கும்

கைவேண்டும் என்பேன் கனிந்து!

 

எழுந்த உடன்நீர் இருகோப்பை உண்டேன்

கொழுந்துவிடுஞ் சூடு குறைக்க – உழுந்துநிறை

இட்டலியை என்மனைவி எட்டு மணிக்கீந்தாள்

சட்டினியும் சாம்பாரும் தான்! (5)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக