அமுதன்:-
அஞ்சுவட்டிக் கும்வாங்கி அந்தப்பெண்
ணைச்சேர்வேன்;
கொஞ்சநஞ்சப் பேரழகா கூர்மார்பு? - இஞ்சியிஞ்சாய்
மேலுதட்டால் ஓர் முறையும் கீழுதட்டால் ஓர்
முறையும்
தோலுடுத்த மாரளப்பேன் தொட்டு!
ஏடி வரதராசன்:-
காணென்று காட்டக் கருத்தயிதழ்
முத்தமிட்டுத்
தேனெடுத்து மட்டும் திரும்பிவா ----
ஏனென்றால்
பத்துவட்டிக் கும்வாங்கிப் பார்ப்பேன்பின்; உன்வாய்ப்பல்
குத்திவிட்டால் ஆமே குறை!
அமுதன்:-
பத்துவட்டிக் கும்வாங்கிப் பாயில்
இடம்கேட்டால்
ஒத்துக்கொள் ளாளந்த ஒண்டொடி; - வித்தகன்என்
ஆட்டத்தைக் கண்டால் அடுத்தோர்
இடம்நாடும்
நாட்டம் எழுமோ? நவில்!
ஏடி வரதராசன்:-
யாராட்டம் வேண்டாமல் இங்குவந்து
சேர்ந்தாளென்(று)
ஓராமல் இங்கே உளராதே -- ஊரான்
கடைவந்த தெல்லாம் கணக்கிட்டால் நாமும்
விடையில்லா பாய்மேல் வினா.
அமுதன்:-
கலைமகள் காணந்தக் காரிகை; நீயோ
விலைமகள் என்பது வீணே; - முலைமகள்
நிற்கும் வியப்புக் குறியாம்; வினாவென்ற
தற்குறி உன்சொல் தவறு!
மே 8 2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக