பல்லவி:-
பெண்:-
நீதான் என் செல்லக் குட்டி!
நான்தான் உன் வெல்லக் கட்டி!
காலங்கள் தோறும் - உன்
உறவா? - நான் வரவா?
ஆண்:-
அடங்காத காள மாடு!
ஆனதே பிடி மாடு!
வேறொன்னும் வேணாம் - உன்
துணையா - நான் வரவா?
பெண்:-
எனக்கெனக் கிடைச்சவன் - உனை
அனுப்பினான் படைச்சவன்...
ஆண்:-
உனக்கெனக் கிடைச்சவன் - எனை
அனுப்பினான் படைச்சவன்...
சரணம்:- 1
ஆண்-
பாராயணம் பண்ணுறேன் உன்
பேர... பேர...
பார்க்காமலே போவதேன் உன்
காதல் பார்வ...
பெண்-
வண்டுக்குப் பூவை விட்டா
வசதிவே றுள்ளதா?
நண்டுக்கு வளையை விட்டா
நடுரோடு நல்லதா?
ஆண்:-
என் வாழ்க்கை முன் அழுகாச்சி
உன் வரவால் இன்றழ காச்சு...
சரணம்:- 2
பெண்:-
ஆராரிரோ பாடவே அட
ஆச... ஆச
அச்சச்சத்தான் மூட்டுதே உன்
முறுக்கு மிச...
ஆண்:-
பொழுதான பின்னே நிலவு
வாராமல் போகுமா?
இரண்டறக் கலந்தி டாமல்
என்கட்டை வேகுமா?
பெண்:-
காதலைக் கண்ணில் காட்டி
காதில்சொல் இன்னொரு வாட்டி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக