செவ்வாய், 14 ஜூலை, 2026

 

விற்குறி தப்பா

மிதிலை ராமனை

விஞ்சிய கற்பினனே! – மிகவே

நெஞ்சுரம் மிக்கவனே!

நற்பரி வாரம்

நாற்புறம் சூழ

நடமிடும் கற்றவனே! – திட்டை

நகரின் கொற்றவனே!

 

முதலிடை கடைஏழ்

வள்ளலின் உருவே!

வையை தமிழ்மகனே! – எங்கள்

வணக்கத்திற் குரியவனே!

சிதம்பர நாதன்

செல்வன் முருகனைச்

செதுக்கிய உருவினனே! – ஈந்தே

சிவந்த கரத்தினனே!

 

பொன்கிடைத் தாலும்

புதன்கிடைக் காதிதைப்

பொய்யெனச் செப்பா வாய்! – நீ

புதனுக் கொப்பாவாய்!

தன்நா நனைக்குமுன்

தஞ்சம் அடைந்தோர்

தாகத்திற் கப்பாவாய்! – அவர்

சாத‍த்திற் குப்பாவாய்!

 

உரிய யாவையும்

உதவும் வகையில்

நீதான் முன்னேரு – நீ

மென்மேல் முன்னேறு!

பெரியோன் பிரேமும்

சிறியோன் வினோத்தும்

தொடரும் பின்னேரு! – அவர்போல்

உளரிங்குப் பன்னூறு!

 

வையம் அளந்து

வானம் அளந்த

வாமன‍ன் நீயல்லவோ! – நீ

வாலாம்பாள் சேயல்லவோ!

ஐயம் இடுவதும்

அதைமறந் துடனே

அளிப்பதுன் தீர்ப்பல்லவோ! – நீ

கண்ணனின் வார்ப்பல்லவோ!

 

வண்ணங்கள் நூறு

வழங்கு வழங்கென்று

வானவில் கேட்காதா? – உன்னிடம்

வான்மழை தோற்காதா?

கன்னம் சிவந்த

கவின்நிலா முற்றத்தில்

கைகட்டி நிற்காதா? – உன்னிடம்

கடமையைக் கற்காதா?

 

மடாதி பதிகளும்

படாதி பதிகளும்

வாசலில் காக்கின்றார்! – உன்

வருகையை வேட்கின்றார்!

விடாது அரசியல்

விரைவில் அதிலுன்

வரவெதிர் பார்க்கின்றார்! – முன்பு

வந்தவர் வேர்க்கின்றார்!

 

புதுவை மதுவும்

மதுரை தமிழும்

மருவிய திருமானே! – கொடை

வள்ளல் பெருமானே!

எடுக்கும் படங்களில்

எனக்கொர் பாடல்

எழுத‍த் தருவானே! – அதற்கு

ஈசன் அருள்வானே!

 

அகரம் அமுதன் 9940723625

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக