விற்குறி தப்பா
மிதிலை ராமனை
விஞ்சிய கற்பினனே! – மிகவே
நெஞ்சுரம் மிக்கவனே!
நற்பரி வாரம்
நாற்புறம் சூழ
நடமிடும் கற்றவனே! – திட்டை
நகரின் கொற்றவனே!
முதலிடை கடைஏழ்
வள்ளலின் உருவே!
வையை தமிழ்மகனே! – எங்கள்
வணக்கத்திற் குரியவனே!
சிதம்பர நாதன்
செல்வன் முருகனைச்
செதுக்கிய உருவினனே! – ஈந்தே
சிவந்த கரத்தினனே!
பொன்கிடைத் தாலும்
புதன்கிடைக் காதிதைப்
பொய்யெனச் செப்பா வாய்! – நீ
புதனுக் கொப்பாவாய்!
தன்நா நனைக்குமுன்
தஞ்சம் அடைந்தோர்
தாகத்திற் கப்பாவாய்! – அவர்
சாதத்திற் குப்பாவாய்!
உரிய யாவையும்
உதவும் வகையில்
நீதான் முன்னேரு – நீ
மென்மேல் முன்னேறு!
பெரியோன் பிரேமும்
சிறியோன் வினோத்தும்
தொடரும் பின்னேரு! – அவர்போல்
உளரிங்குப் பன்னூறு!
வையம் அளந்து
வானம் அளந்த
வாமனன் நீயல்லவோ! – நீ
வாலாம்பாள் சேயல்லவோ!
ஐயம் இடுவதும்
அதைமறந் துடனே
அளிப்பதுன் தீர்ப்பல்லவோ! – நீ
கண்ணனின் வார்ப்பல்லவோ!
வண்ணங்கள் நூறு
வழங்கு வழங்கென்று
வானவில் கேட்காதா? – உன்னிடம்
வான்மழை தோற்காதா?
கன்னம் சிவந்த
கவின்நிலா முற்றத்தில்
கைகட்டி நிற்காதா? – உன்னிடம்
கடமையைக் கற்காதா?
மடாதி பதிகளும்
படாதி பதிகளும்
வாசலில் காக்கின்றார்! – உன்
வருகையை வேட்கின்றார்!
விடாது அரசியல்
விரைவில் அதிலுன்
வரவெதிர் பார்க்கின்றார்! – முன்பு
வந்தவர் வேர்க்கின்றார்!
புதுவை மதுவும்
மதுரை தமிழும்
மருவிய திருமானே! – கொடை
வள்ளல் பெருமானே!
எடுக்கும் படங்களில்
எனக்கொர் பாடல்
எழுதத் தருவானே! – அதற்கு
ஈசன் அருள்வானே!
அகரம் அமுதன் 9940723625
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக