வரதன்:-
அண்ணாந்துப் பாத்தே அளந்திருக்கேன்
சூரியனை
கண்ணேதும் ஆகல்ல கண்மணியே --
சின்னவிழி
ஒன்னமட்டும் பாத்தா ஒடம்பெல்லாங்
கூசுதுன்னுக்
கண்ணாடி போட்டிருக்கேன் காண்.
அகரம் அமுதன்:-
ரோட்டுல போமுடில; லோலோன்னு பின்னாடி
ஆட்டினு வந்துடுறான் ஆணழகன்; - நீட்டுல
பாஸானா மட்டும்லௌவ் பண்லான்னு லாவந்தா
லூஸாவான் பாய்ஸ்பல பேர்!
வரதன்:-
நீட்டுல பாசானா நீயெல்லாம்
பொண்ணுன்னு
ரோட்டுலயா சுத்துவேன் ரோந்துக்கு ? -- ஹாட்டில்லா
ஏசிகார் உள்ள எனக்கான ஏஞ்சலோட
பேசிட்டே போவேன் பிறகு.
அகரம் அமுதன்:-
'ஒன்ஸ்'போகக் கூட ஒழுங்கா அறியாநீ
பென்ஸ்ஸுல போவியா பெண்கூட? - என்னழகுக்(கு)
ஊராளும் மன்னவன் ஓடிவந்து
பெண்கேட்பான்
தாராள மாகப்பொன் தந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக