பகடிவெண்பா
தீட்டிய பாவில்தான் தீஞ்சுவையோ? இல்லைமை
கூட்டிய பார்வையில்தான் கொங்குளதோ? – கேட்டவுடன்
நேற்றுவரை பாவென்றாய்; நேரெதிராய் நாளைமை
ஊற்றிய பார்வையென்பாய் ஓர்ந்து! 01
சித்திரம் சின்னச் சிலையொத்த மேனியினாள்
பத்திரம் அப்பா!நீ பார்த்துக்கொள்; – அத்திரங்கள்
போடட்டும் காமன்; புதுமண மக்காள்நங்(கு)
ஆடட்டும் கட்டில் அசைந்து! 02
இடம்மாறும் பெண்ணால் இடம்மாறும், நெஞ்சம்
இடம்மாறும் பெண்ணின் இயைவால்... –
இடம்மாறும்
யாவும் அணைப்பால்யார் ஆண்பெண்ணென்(று)
யார்சொல்வார்?
ஓவும்பூங் காற்றும் உணர்ந்து! 03
சந்தியா காலத்திற் சந்தித்து நீரிருவர்
சந்தியாக் காலத்தைச் சாடுவிரோ? – சிந்தைநீ
செய்கும் தமிழ்மொழி தேமொழிக்கீ
டில்லையென்று
வைகுமோ நண்பா!உன் வாய்!? 04
நானென்று சொல்கின்ற நாளோடிப் போனதினி
நானன்று நாமென்று நாமொழியும்; – தேனின்றுன்
உள்ளங்கை தன்னில் உணத்தான் தடைபோடும்
உள்ளபடி நாணம் உயர்ந்து! 05
நங்கை தலைசாயும் நாணத்தால் அப்பவும்என்
பங்கைத்தா என்றே பகர்வாயோ? – நுங்குநிகர்
நாவால் அவள்பேர் நவின்றரு கேஅழைத்துத்
தேவாய் சுவைக்கையில் தேர்ந்து! 06
உண்ணா வறளும் உடலம் உதறலுறும்
உண்ணாய் பசித்தும் ஒருவாய் – எண்ணாய்
எதையும் அணங்கின் எழில்கண்(டு) உளறும்
அதையும் இதையும்வாய் ஆம்! 07
பாயே இலையாக பாவை உணவாக
நீயோ பசியில் நெலிவாயே! – நீயாக
அள்ளித்தான் உண்ணவும் ஆகாதே! நாணத்தால்
உள்ளம்தான் நோகும் உடைந்து! 08
பசிக்கும் பசும்பால் பழமிருக்கக் கண்டும்
புசிக்கும் நினைவற்றுப் போகும் –
புசிக்கின்
புளிக்கும் உளமந்தப் பூவை இடம்மேவிக்
களிக்கும் தடைகள் கடந்து! 09
சேவல் எழுப்பச் செழுங்கதிரோன் வான்மேவப்
போவதேன் அல்இப் பொழுதென்றே – ஆவல்
தணியா மனத்தாய்! தவிதவிப்பாய் மற்ற
பணியாவும் போகும் மறந்து! 10
மாசறு பொன்னே வலம்புரிசங் கேஎன்று
பேசரு பேச்செல்லாம் பேசியே – நேசமுடன்
மாதிரை ஆகின்ற மஞ்சப் பொழுதுகளை
ஆதிரைச் சித்தா!நீ ஆள்! 11
உடலே விரகா உளமே உலையா
அடடா! விழியே அணலா – நடக்கும்
சமையல் முடிவில் சனிக்கும் மழலை
உமையே உருவாய் உரித்து! 12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக