செவ்வாய், 22 ஜனவரி, 2013

கானா பாடல்! 3


உன்
சுண்டுவிரல் தொட்டதுல சொர்க்கத்தப் பார்த்தேன்-கற்
கண்டுஇதழ் பட்டதுன்னா மோட்சத்தப் பார்ப்பேன்-அடி
பிச்சிப்பூவே பிஞ்சுநிலாவே
அச்சம்விட்டுக் கொஞ்சிடவாயேன்
என்உசுர உன்நிழலுக் கெழுதி வெக்கவா
உன்திசையில் என்நிழலும் விழுகுதல்லவா

ஏழுகடல் நீந்தனுமா ஏழுமலை தாண்டனுமா
தேவர்கள வெல்லனுமா சூரர்கள கொல்லனுமா
ஆயுளுக்கும் தவமிருந்து ஆண்டவன வேண்டனுமா
என்னசெஞ்சா நீகெடைப்ப? நீயேசொல்ல வேண்டுமம்மா
பூமியத்தான் இன்றுவரை நிலவுசுத்துது –இந்தக்
காதலிலே ஏன்டிஅந்த விதியும்மாறுது

பம்பரம்போல் சுத்துற பார்த்துப்பார்த்து சொக்குற
அம்பலத்து அண்டிபோல ஆட்டமாட வக்கிற
ஏன்டிஇந்த மாதிரி நீண்டதிந்த ராத்திரி
இன்னுமென்னை என்னசெய்ய எண்ணுகிறாய் சுந்தரி
என்உசுரே எட்டிநிண்ணு என்னைப்பாக்குது-அது
கண்ணால்நூறு கதைகள்பேசி நழுவி ஓடுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக