ஞாயிறு, 27 ஜனவரி, 2013

கானா பாடல்! 4


அதோஅவ பின்னாலே
போனதுமனம் தன்னாலே
இதோஅதோன்னு இழுக்கடிச்சி
ஏய்ச்சாளே கண்ணாலே

அலையப்போல அலைஞ்சேனே
மெழுகப்போல உருகினனே
கையத்தந்தாக் கழன்டிடலாம்
தலையத்தந்து தவிச்சேனே
ஏதேது இளைச்சேனே
ஏமாந்து கிடந்தேனே
போதாது என்பதுபோல்
பூவைக்காய் நடந்தேனே

மலபோல நிமிர்ந்திருக்கும்
மாராப்பு மறச்சிருக்கும்
நெஞ்சோரம் இடங்கொடுத்தாள்
நெசந்தான்னு குடிபுகுந்தேன்
குடிபுகுந்த பின்னாடி
குட்டுடைந்த தென்னாடி
என்முகத்த எனக்குக்காட்ட
மறுத்ததுமேன் கண்ணாடி

எம்மனசில் அவயிருந்தா
அவமனசில் யாரிருந்தா
சொன்னாளா முன்னாடி
தெரிஞ்சென்ன பின்னாடி?
மைபூசும் கண்மேலே
பொய்பூசி நின்னாளே
பொய்யநம்பிப் பொய்யநம்பி
மெய்யாகச் செத்தேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக