புதன், 1 ஏப்ரல், 2026

 

7/12/2016 ; 9.00pm.
கட்டு மரமே!அக்
காலனையே ஏமாற்றி
விட்டு நலமாக
வீடுவந்தாய்; – துட்டு
மரமே! உனக்கு
மரணமே இல்லா
வரமே அவன்தந்தான்
வந்து!
கரையொதுங்கு வாயென்றே
கண்டிருந்தார்; நீயோ
கரையேறி வந்த
கவினை – உரைப்பதெனில்
'அப்போலோ' செல்லாமல்
'காவேரி' சென்றதனால்
இப்போது மீண்டாய்
இனிது!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக