பூனை கூற்று!
யாரது என்ஆளா?
என்னையெதிர் பார்த்தாளா?
ஓரவிழி நீர்சொரிஞ்சே
ஓஞ்சாளா? – மாரனிட்ட
அம்புக்கே தேஞ்சாளா?
அங்கங்கள் தீஞ்சாளா?
மம்முக்கே மாஞ்சாளா
மாது!?
ஊருக்குப் போறாளா?
உத்தரவு கோராளா?
பேருக்கும் என்னிடம்
பேசாளா? – யாருக்கோ
காத்திருக் கின்றாளா?
கண்கள் எனக்காய்த்தான்
பூத்திருக் கின்றாளா
பூ!?
இங்கமர்ந்து நானிருக்க
என்னையெதிர் பார்க்காமல்
அங்கெ(ன்)னவே டிக்கை
அவளுக்கு? – பொங்கிவரும்
காதலை நான்சொல்ல
காம்பவுண்ட் ஏறிவந்தால்
வேதனைசெய் கின்றாளே
வீற்று!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக