அத்தியூர் வாழ்வரதன் வஞ்சி மகேசுவரி
நெத்திக்குப் பொட்டாக நேர்ந்தனன்; - மெத்தைச்
சுகந்தின்று பிள்ளை சுமந்தீன்று மஞ்சன்
அகம்வென்று வாழ்வாள் அகம்!
பாடும் பறவைகள் பந்தம் நிலைபெறக்
கூடும் களியெலாம் கூடலில்; - ஆடும்பொன்
தொட்டில் இரண்டைந்து திங்களில்; ஆமதைக்
கட்டில் உறுதிசெயும் கண்டு!
கன்னி யவள்பாடக் கைத்தாளம் போட்டபடி
நண்ணி யவன்பாட நல்லசுகப் - பொன்பொழுதில்
கட்டிலும் பாடும்;
கதையறிந்த
காரணத்தால்
தொட்டிலும் பாடும் தொடர்ந்து!
தானாய் அழுமாம் தளிர்மழலை; போயவளை
ஏனாம்? எனக்கேட்பான்
ஏந்தலுமே; - ஆனாலும்
உன்பிள்ளை உன்போலும்; தம்பிக் கழுகின்றான்;
என்பாள்தன் எண்ணத்தை இட்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக