புதன், 1 ஏப்ரல், 2026

இரங்கல் வெண்பா! (6/12/2016 ; 6.00 am)

 இரங்கல் வெண்பா! (6/12/2016 ; 6.00 am)

பாராண்ட அம்மா
பரம பதமடைந்தார்;
நேராய் இறைவனடி
நேர்கவெனச் – சீராளும்
வெண்பாக் கவிஞன்நான்
வேண்டுகிறேன்; கண்கள்கொண்(டு)
உண்பா இரண்டொன்(று)
உரைத்து!
செம்மைப் பணிமுடித்துச்
சென்றார் ஜெயலலிதா
அம்மை; இறைவா!
அருள்செய்க! - இம்மைவிட்டு
வேனேறி நன்றாய்
அமைதி அடையட்டும்
ஊனேறி நின்ற
உயிர்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக