115 அலர் அறிவுறுத்தல்
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்! 1141
புறம்பேசு வார்பேச்சே போகும் உயிரைத்
திறம்பட மீட்டுவந்து சேர்க்கும்; – மறந்துமிதை
இன்றளவும் ஊர்காண ஏலா திருப்பதென்
முன்வினைக் காரண மோ!?
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்! 1142
கூறுபழிச் சொல்லால் குறையவிடா தெம்காதல்
ஏறுமுகம் காணவைத்தார் இவ்வூரார்; – நாறுகிற
அல்லிமலர் போலும் அகன்ற விழியுடைய
மல்லிகையாள் மேன்மை மறந்து!
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து! 1143
ஊர்முழுதும் எம்பேச்சே ஓங்கி ஒலிப்பதும்,
பார்முழுதும் எம்முறவைப் பாடுவதும், – வேர்பிடித்த
வெண்காதல் மன்னவனின் மேனி தழுவிய
புண்ணியம்யான் பெற்றதனைப் போன்று!
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து! 1144
காணும் பழிச்சொல்லே காதலக ராதியில்
பேணும் கலைச்சொல்லாய்ப் பேறுபெறும்; – வேணுமட்டும்
இப்பெரும் ஊர்ப்பழிச்சொல் இல்லாது
போய்விடின்
சப்பென்று போகும் சலித்து!
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படும் தோறும் இனிது! 1145
உண்ணுங்கால் கள்ளையின்னும் உண்ண அடிமனத்தே
எண்ணம் இனிதுற்(று) எழுதல்போல், – உண்மையலர்
தோன்றும் பொழுதெல்லாம் துய்க்கும்
பெருங்காதல்
ஈன்றுதரும் இன்பம் இனிது!
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று! 1146
காதலரைப் பொன்மலர்க் கண்களால்
கண்டதெல்லாம்
மாதத்தில் ஓர்நாள் மணித்துளியே; – பாதகச்சொல்
அம்புலியைத் தின்னும் அரவுபோல் தோன்றிற்றே
இம்பருல கெங்கும் இனிது!
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்! 1147
ஊரார் குறைகூறல் உற்ற உரமாக,
நீராகி அன்னைசொல்
வேர்பாய, - பாராய்!
நெடிதோங்கி நின்று
நிழல்விட் டரும்பிக்
கடிதோங்கிக் காய்க்கும்இந் நோய்!
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்
கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்! 1148
நெய்யெடுத்(து) ஊற்றி நெருப்பை அணைக்கின்ற
பொய்யளக்கும் செய்கையினைப் போன்றதே –
வையத்தார்
சொல்லெலாம் சூழ்வதந்திச் சொற்களால்
காதலைக்
கொல்லலாம் என்கின்ற கூற்று!
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை! 1149
ஊர்வதந்திக் கெல்லாம் உளம்நொந்தால் ஆகுமா?
‘தீர்,வருத்தம்’, என்றன்பு செய்தவன்
– பார்கண்டு
வெட்கும் படியாய் விடைபெற்றுச் சென்றதற்காய்
உட்கும் படிநாம் உயிர்த்து!
தாம்வேண்டின் நல்குவர் காதலர்
யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்! 1150
தானும் விரும்பித் தனதினிய காதலன்பை
வானும் வியக்க வழங்குவார்; – நானுமே
வாங்க விரும்பும் வதந்திகளை இவ்வூரார்
ஓங்கி ஒலித்த உடன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக